Monday, December 21, 2020

Corona: Drinking chlorinated water may protect from Corona Covid-19

 Dear friends,

Chlorinate drinking water in this rainy season to be protected at least from some subsidiary diseases. Underground water must be chlorinated before drink during rainy seasons.

thanks: hostbooks.com

Chlorine kills almost all kinds of microbes live in water. Therefore it protects us from some subsidiary diseases such as typhoid fever, dysentery, cholera and Legionnaires' disease. It is often used purify water before drinking at places where primarily water resource is underground water.

It may also help you fight against Corona Covid-19.

Friday, October 30, 2020

நாம் ஏன் எப்பொழுதும் அனைவருடனும் அன்பாகவும் பணிவாகவும் நடக்க வேண்டும்?

நன்றி: fccdunedin.blogspot.com

அனைவரும் அனைத்தும் அறிந்திருப்பதில்லை. அப்படியே அறிந்திருந்தாலும் வேண்டிய நேரத்தில் அவை நினைவிற்கு வருவது இல்லை. அத்துடன் ஒவ்வொருவரும் தான் போன வழிகளில் வந்த தடைகளுக்கான சிறந்த தீர்வுகளை அறிந்திருப்பர். அவை பரம்பரை பரம்பரையாகவும் சந்ததி சந்ததியாகவும் பேணப்படுவதும் உண்டு. அதோடு அவை நமக்குத் தெரியாத விடயங்களாகவும் இருக்கலாம்.

நமக்கு யாரும் இன்னல்கள் விளைவிக்கத் தேவையில்லை. அவை போன்ற விடயங்கள் தக்க நேரத்தில் நமக்குக் கிடைக்காமல் போனாலே நமக்குப் பெரும் துன்பங்களுக்கும் இழப்புகளும் ஏற்படும். ஆனால் அதனை அறிந்தவர்கள் காண்பவர்கள் அனைவருக்கும் அந்த ஞானத்தை அள்ளி வழங்குவதில்லை. அத்துடன் அப்படி வழங்குவது உசிதமானதும் அல்ல. அப்படி வழங்கின் அதனை யாரும் மதிப்பதும் கிடையாது. பசியில் உள்ளவர்களுக்கு மட்டுமே உணவின் அருமை தெரிந்திருக்கும். அத்துடன் அது அவர்களுக்குப் பெரும்பாலும் அவமானங்களையே தேடித்தரும். ஏனெனில் ஒருபோதும் கேட்காத உதவி செய்யக் கூடாது அல்லவா.

அது மட்டுமல்லாமல் அவை பணிவாகவும் மதிப்பளித்தும் நடப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இந்நாளில் அவை வெறுமனே கொடுக்கும் மதிப்புகளிற்காக மட்டுமே வழங்கப்படுவது இல்லை. மதிப்பிற்கு இந்நாளில் ஏது மதிப்பு ... உற்றவர்க்கும் உதவி செய்கின்றவருக்கும் மட்டுமே கைமாறாக அந்த விடயங்கள் உரிய தருணத்தில் வழங்கப்படுகின்றன. நிறைய தான தர்மங்கள் செய்தவர்களுக்கு வேண்டியாவை வேண்டிய நேரத்தில் ஏதாவது ஒரு வழியில் யாராவது ஒருவரால் வந்து சேர்கிறது. அதனால்தான் கொடுத்தார்க்குக் குறைவு இல்லை என்பர்.


எனவே துன்பத்திலும் எல்லோருடனும் சிரித்து மகிழ்ச்சியாக வாழுதல் சாலச் சிறந்ததாகும். ஆனாலும் கிடைக்கப்பெறும் எல்லாத் தகவல்களும் உண்மைகளும் அல்ல; நன்மை விளைவிப்பவை என்றும் ஆகி விடாது. உதவி செய்வது போல நடித்து ஏமாற்றுபவர்களும் இந்தச் சமூகத்திலே அதிகம் உள்ளனர். இன்னும் சிலர் உதவி செய்ய இயலுமாக இருந்தும் இன்னுரைகள் கூடச் சொல்வது இல்லை. எனவே எது சரி பிழை என்பதை நாம் அறிந்து கொண்டு செயற்படுவதும் மிக அவசியமாகும்.
#Information is Wealth
#Arjun
#Hero

Monday, October 19, 2020

பாற்கடலை கடைதல் - பிராணாயாமம் - வாசிக்கலை

பாற்கடலைக் கடைதலின் பொருள் என்ன?
இது உணவுச் சமிபாடு, உடலின் வளர்ச்சி மற்றும் அதன் நிலைப்பு ற்றிய ரு குறியீட்டுக் கதையாகத்தான் இருக்க வேண்டும். வயிற்றினை மத்து என்றும், மூச்சினை வாசுகி என்றும், சுவாசப் பொறிமுறையை கடைதல் என்றும் குறித்துள்ளனர். இதே போல குறியீட்டு முறைமையே பிள்ளையாரின் தோற்றத்திற்கும் உரியது. சில பேரிற்கு இது இயல்பாகவே பிறவியில் வாய்த்துவிடுகிறது. அது அவர்கள் முன்னோர்கள் செய்த வினைப்பயன் ஆகும்.

பாற்கடலைக் கடைவது எவ்வாறு?
உணவு உண்ட பின்னரே கடைதல் நிகழ்த்த முடியும் என்று நினைக்கிறேன். முதலில் வேகமாக ஒரு நீண்ட மூச்சை வெளியில் விட வேண்டும். உடலில் அதனால் ஏற்படும் அமுக்கக் குறைவு காரணமாக தானே வேகமாக உடல் மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளும். இதனை இவ்வாறே தொடர வேண்டும். பிறகு ஒரு நேரத்தில் நாம் கடினப்பட்டு மூச்சை இழுத்து விடத் தேவை இல்லை. அது தானாகவே ஒரு பரிவு நிலையை அடைந்துவிடும்.

நச்சு வாயுக்கள் பாரம் கூடியவை. மூச்சை வேகமாக வெளியே விடும்போது நச்சு வாயுக்கள் விலகி ஒரு குழல் போன்ற அமைப்பை அங்கே அது உருவாக்குகிறது. பூவில் தேன் குடிக்கும் சிட்டுக்குருவி போல அதனுள்ளே உள்ள தூய வளியை அது கலைவதற்கு முன் உள்ளே இழுத்து விட வேண்டும். இழுக்கும்போது வயிறினையே நினைக்க வேண்டும். ஏனெனில் அங்குதான் ஒட்சிசனின் செறிவு அதிகம் தேவைப்படுகிறது (”தொப்பை அப்பனைத் தொழ வினை அறுமே! - நமக்கு தொப்பை இருப்பது போன்ற விம்பத்தை விநாயகர் தரிசனம் நமது மனதில் ஏற்படுத்திவிடுகிறது”). இதனையே வாசிக்கலை என்பர்.

இதனை இன்னும் விரிவாக திருமூலர் பின்வருமாறு பூரகம், கும்பகம், ரேசகம் என்று படிமுறைகளில் கூறுகின்றார்.

  1. இடது பக்க மூக்கு வழியாக பதினாறு மாத்திரை அளவு  மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் ஆகும்.
  2. இழுத்த மூச்சுக் காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது கும்பகம் ஆகும்.
  3. வலது பக்க மூக்கு வழியாக முப்பத்தியிரண்டு மாத்திரை அளவில் மூச்சை வெளியே விடுவது ரேசகம் ஆகும்.
  4. **அடுத்த முறை வலப்பக்கம் மூச்சை இழுத்து, உள்ளே நிறுத்தி இடப்பக்கம் மூச்சை வெளியே விடுவது தந்திரமாகும்.

மாத்திரைகள் முறையே 1:4:2 என்ற விகிதத்தில் அமையும். இவ்வாறு முடிந்த வரை மாறி மாறி பயிற்சி செய்து வர வேண்டும். இந்த பிராணாயாமப் பயிற்சியை ஒரு ஆசிரியர் மூலம் முறையாக கற்றுக் கொள்வது அவசியம்.
நன்றி: https://blog.scribblers.in/2012/12/15/திருமந்திரத்தில்-பிராணா/

இவ்வாறு சிறுது நேரம் சுவாசித்து இருக்க வளி மற்றும் ஊட்டம் நிறைந்த ஒரு கலவை வயிற்றில் உருவாகிறது. அது உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் நேயம் செய்கிறது. அதனை நாம் அமிர்தம் என்று உருவகப்படுத்திக் கொள்கின்றனர். கடையப்பட்ட அமிர்தத்தைப் பரவச் செய்ய, மூச்சை இழுக்கும் போது வேண்டிய அங்கங்களை நினைத்துக் கொண்டு சற்று #நீளமாகவும் ஆத்மார்த்தமாகவும் இழுக்க வேண்டும். அதனை உடலில் விரும்பிய பகுதிக்கு வழங்கி அதனை வளர்ச்சியுறச் செய்ய முடியும். இல்லை எனில் மனதை எங்கும் நிறைந்ததாக வைத்திருப்பதன் மூலம் அதனை உடல் எங்கும் சிராகப் பரவச் செய்ய இயலும். அதன்போது எவ்வளவு நீளமாக இழுக்கின்றோமோ அவ்வளவு நீளமான தேகம் கிடைக்கிறது.

இங்கே தேவர், யார் அசுரர் யார், மோகினி யார்?


உடலில் சிறப்புடைய, தாழ்ச்சியுடைய இரு வஸ்துகளும் உள்ளன. அவையே முறையே தேவரும் அசுரரும் ஆவார்கள். தேவர்கள் உட்கொண்டால் அவர்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கம் காரணமாக உடல் மேன்மையுறும். அசுரர் அதனை உட்கொண்டால் நமது உடல் பொலிவை இழக்கும். இதனைக் கையாளவே மோகினி என்ற பொருள் உள்ளே வருகிறது. உடல் காதலுற்று உள்ளபோது மனம் விரும்பிய கூறுகள் மட்டுமே உயிர்ப்பாகவும் முனைப்பாகவும் இருக்கும். எனவே அந்தக் காதல் உணர்வை, மோகினியை சிந்தையில் வைக்கும்போது அந்த அமிர்தம் நல் வஸ்துக்களையே அடைவதால் உடல் செம்மையாக வளர்ச்சியுறும். இவ்வாறு செம்மையாக உடலை வளர்ச்சியுறச் செய்யின் ஆயுள்காலமும் நீடிக்கும். இதனையே திருமூலர் "உடல் வளர்க்கும் உபாயம் அறிந்து உடல் வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே!" என்றார்.

இங்கே லக்‌ஷ்மியின் சேவை என்ன?

ஸ்ரீ விஷ்ணுவின் மார்பினில் உறைபவள் லக்‌ஷ்மி ஆவாள். மனிதனில் மார்பினில்தான் நுரையீரலும் உள்ளது. பாற்கடலைக் கடைவதற்குத் தேவையான செல்வமாகிய ஒக்சிசனை அள்ளி வழங்குபவளாக அவள் இங்கே வர்ணிக்கப்படுகிறாள். இதற்காக அவளைப் ஆராதிப்பதற்காக இரு மார்புகளையும் உயர்த்திய நிலையில் பேணுவது நலம் புரியும்.

ஆமையின் பொருள் என்ன?

ஆமையானது ஐம்புலன்களையும் குறித்து நிற்கிறது. ஆமையானது தனது எதிரிகளைக் கண்டதும் தனது #தலையையும் #4 கால்களையும் உள்ளே எடுத்து மணிக்கணக்கில் உள்ளே அடக்கி வைத்துக்கொள்ளும். அதுபோல நாமும் இந்தப் பயிற்சியினை மேற்கொள்ளும்போது ஐம்புலன்களையும் அடக்கி நமது முழுக் கவனத்தையும் நமது புந்தியில் (வயிற்றில்) வைக்க வேண்டும். இதுவே இங்கு மத்து ஆகிய வயிற்றின் அடியில் கருதப்படும் ஆமையின் விளக்கம் ஆகும். இங்கே விஷ்ணுவே கூர்ம அவதாரம் (ஆமை) எடுத்து இதனை செய்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
“புந்தியில் வைத்தடி போற்றுகின்றோமே!”

எனில் இந்த விடம் யாது? அதை கண்டத்தில் வைத்த சிவன் யார்?
சுவாசத்தின் போதான காபனீரொக்சைட்டு வாயு மென்னமிலம் ஆகும்; உடலுக்குத் தீங்கானது. எனினும் அதனைத் கழுத்தினில் உணவுக் குழாயில் தேக்கி வைப்பின் அது நன்மையே புரியும். அடிக்கடி அதில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு கழுத்தில் மென்னனில சேர்தல் உடலுக்கு நன்மை பயக்கும்.


அதனை கண்டத்தில் சிவன் வைத்த கதை என்ன?
மூச்சினை வெளியே விடும்போது அது உணவுக் குழாயைத் தழுவியதாகவும் மூக்கினூடாகவும் விட வேண்டும். அது அதிலுள்ள ஈரத்தில் படிந்து அங்கு நின்று தீயவை வயிற்றினைத் அண்டாமல் பாதுகாக்கிறது.
"கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடரினில் அடக்கிய #வேதியனே!"

காண்பவை அனைத்தையும் அந்தப் பரம்பொருள் என்று நினைத்து ஆராதியுங்கள். வேண்டியவை கிடைக்கும்.

Friday, September 4, 2020

எங்கும் நிறை பரப்பிரம்மம்

## எங்கும் நிறை பரப்பிரம்மத்துடன் இணைய நாம் எங்கும் நிறைய வேண்டும்!
# கண்களை மூடி மனதை விரிவாக வைத்து உயிரை உடல் தாண்டி எங்கும் பரப்பி உடலைத் தியானிக்க வேண்டும். இயல்பாகவே நமது உடலிலுள்ள சக்கரங்கள் இதைச் செய்து கொண்டுதான் உள்ளன. ஆனால் அதன் அளவு மிகக் குறைவு. இராவணன் கையில் முள்ளந்தண்டுடன் தலை கொண்ட வீணையின் அர்த்தம் அவன் குறித்த சக்கரங்கள் கொண்டு வேண்டிய பரவசநிலை அடைவதாக இருக்கலாம். இல்லையெனில் உடலியல் காரணங்கள் ஏதாவது இருக்கவும் முடியும். சூட்சுமமாகச் சொன்னால் இறைவன் நம் நெஞ்சில் உறைகின்றான். நாம் அதை நிமிர்த்தி உதவ வேண்டும்.

பிரமிப்பு, பரவசம், ஆச்சரியம், மெய்சிலிப்பு ஆகியன துவண்ட மனதிற்கும் உடலிற்கும் சக்தியூட்டுபவை ஆகும். இவை நமது உயிரை மெய் மறந்து எங்கும் நிறையச் செய்கின்றன. அதனாலேயே பேரானந்தத்தை உணர்பவர் எண்ணங்கள் இலகுவில் வெற்றியாகின்றன. #மகிழ்ச்சி

சூரிய தரிசனம்
இருட்டிலே தொடங்கி இருட்டிலே முடியும் நாட்கள். அது போல வாழ்க்கையும் இருட்டிலே தொடங்கி இருட்டிலே முடிகிறது. இடையிலே கொஞ்சம் வெளிச்சம்.
## சூரிய தரிசனத்தின்போது குண்டலினி மேலே நிலைக்கிறது. அதாவது நமது உயிரானது உச்சம் கொள்கிறது. அது நமது உடல் தாண்டி வெளியே எல்லாத் திசைகளிலும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுகிறது. அப்போது நாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற நமது உடலும் உயிரும் பூரணமாக ஒத்துளைக்கும். இதை ஒட்டியே தினமும் காலை சூரிய தரிசனம் செய்வது வழக்கமாக ஆகியிருக்கும்.

நித்திரை அளிப்பது
நாம் நித்திரை கொள்ளும்போது நமது உயிரானது ஆசை, பிடிவாதம், ஆணவம் யாவும் அகன்று பரப்பிரம்மத்துடன் சங்கமிக்கிறது. அதாவது நடுநிலை கொள்கிறது. அப்போது சிறிது ஞானம் கிடைக்கிறது. அந்த ஞானமானது பட்டை தீட்டப்படாத வைரம் போன்றது. அதனை சரியாகப் பயன்படுத்தினால் வாழ்வில் முன்னேறம் அடையலாம். பயன்படுத்தாதவர் அதிக நித்திரை கொள்ளத் தேவை இல்லை.

# சாந்தியையும்
மகிழ்ச்சியையும்
ஞான ஒளியினையும் பரவ விடுங்கள்.

உணர்ச்சிகள் யாவும் அதிர்வலைகள் போன்றவை. மனிதர்க்கு மட்டுமன்றி சடப்பொருட்களும் உணரக் கூடியவை.  இசையும் இது போல அதிர்வுகளே ஆகும். சடப்பொருட்கள் இசையின் பொருளை உணர முடியாது. ஆனால், அதிலுள்ள மன உணர்ச்சியை அவையும் பிரதிபலிக்கும்; உணர்ந்து பேணும்; அவ் உணர்ச்சியைப் பரவச் செய்யும். அக்கால இசை வல்லுனர்கள் இசையால் மழை வரச் செய்தல் போன்ற பல விந்தையான செயல்களை சாதித்துள்ளனர். “நளின நாட்யமிட அசைந்தது பரமிது ஈசா!”.

## எதையும் வெறுக்கக் கூடாது.
ஒரு விடயத்தை வெறுத்தால் நீங்கள் மனதில் அதன்பால் முனைவாக்கம் அடைவீர்கள். நீங்கள் நினைப்பதையே வெளியில் காண்கிறீர்கள் என விவேகானந்தர் கூறியுள்ளார். அதன்படி அந்த வெறுக்கும் விடயத்தையே அடிக்கடி வெளியில் காண்பீர்கள். அது உங்கள் மனதை மேலும் காயப்படுத்துவதோடு உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிடும்.

## பிரார்த்தனைகள் பலிக்கின்றன
அல்லாது போனால், பிரார்த்தனைக்கான நோக்கம் தெளிவாக இல்லை அல்லது மனத்தூய்மை போதாது எனப் பொருளாகும்.

## பரிவும் பரிவும் மீழும்.
சிலந்தி வலை போல இந்த அண்டபேரண்டம் எங்கும் விரிந்து கிடக்கின்ற வெற்றுக் கண்ணுக்கு மட்டுமன்றி ஞானக் கண்ணுக்கும் கிட்டாத தொடர்பு பரிவு ஆகும். இது ஜப்பானியர்கள் விளையாடும் ”domino effect” போல பிரமிப்பானது. இதனால் தான் பக்திப் பரவச நிலையில் ஏதோ ஒரு பரிவு இந்தப் பிரபஞ்சத்துடன் நிகழ்கிறது. 

இப்பிரபஞ்சம் அமைதியானது. அதிலுள்ள எதுவும் அதன் இயல்புத் தன்மையை மாற்ற விரும்பாது. அதன் மீது சலனத்தை ஏற்படுத்தாமல் இருப்பதையே அவை விரும்பும். சாந்தமே ஜடங்கள் கூட உணரும் மொழி ஆகும். அதுவே அன்பின் முதற் படியுமாகும். ஆகவே நாம் இயன்ற அளவுக்கு எதிரான அதிர்வுகளை அசைவுகளைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அமைதியாக இருக்கும் மனிதனிடம் இப்பிரபஞ்சமே சரணடைந்துவிடுகிறது.

“புறவிசை தாக்காதவிடத்து இயங்கிக் கொண்டிருக்கும் பொருட்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்; ஓய்விலுள்ள பொருள் தொடர்ந்து ஓய்விலேயே இருக்கும்.”

”ஆலயம் தொழுவது சாலவும் நன்று”
#கோயில் செல்வதன் நோக்கங்களில் ஒன்று  சும்மா இருத்தல் ஆகும். ஏனைய சிந்தனைக் குழப்பங்களில் மனம் (உயிர்) அலைவதைத் தவிர்த்து நமது #ஆன்மாவைச் சிறிது நேரம் நாமே ஆராதிப்பது அதன் நோக்கம் ஆகும்.

ஊழ் வினை
எல்லாமே வரையறுத்தது போல தானாக நடந்து கொண்டு இருக்கும். நாம் வெறுமனே பார்வையாளர்களாகவே இருக்கின்றோம். நாம் நமது #ஞான ஒளியை ஏற்றாது போனால் இதுதான்  எப்போதும் நிலைமை ஆகும். நமது சுயாதீன எண்ண எழுகைகளில் புற மின்காந்த அலைகளே (சக்திகள்) அதிக செல்வாக்குச் செலுத்துகின்றன. அதிலும் மிக முக்கியமாக சூரியனிலிருந்தான கதிர்கள் புவியில் ஆதிக்கம் மிகுந்தவை. இதனாலேயே திருமூலர் சூரியனை சிவன் என்று ஒரு திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தலையில் சந்திரனையும் தரித்துள்ளான் அவன்.

இப்போது நம்மைக் குழப்பமடையச் செய்யும் பல மின்காந்த அலை ஊற்றுக்கள் நம்மை சூழ்ந்துவிட்டன. அவை நமது மனதின் இயற்கையான சிந்தனை ஓட்டங்களைக் குழப்பும் தன்மை கொண்டவை. உம். தொலைபேசி, தொலைக்காட்சி அலைக்கற்றைகள். ஆனால், நமது சக்தி கொண்டு ஞானதீபம் ஏற்றினால் புறக்காரணிகள் நமது மனதின் எண்ணங்களை சிதைக்காது.

கனி இருக்கக் காய் கவர்ந்தற்கு
இயற்கை நமக்கு சிறந்ததை அளிக்கும் ஆனால் மனம் இன்னொன்றை நாடும். இயற்கை கொடுப்பதை அப்படியே ஏற்க வேண்டும்; கொடுக்க மறுப்பதை, நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று கடக்கப் பழக வேண்டும். அதோடு, இயற்கையும் சரி, மனிதர்களும் சரி, ஏனைய உயிரினங்களும் சரி அவை எதை எதிர்பார்க்கின்றனவோ அதைத்தான் கொடுக்க வேண்டும். அது தான் அவற்றுக்கும் நமக்கும் மகிழ்ச்சியைத் தரும்.

நன்றி!

Thursday, September 3, 2020

நெஞ்சு படபடப்பு, இதய நோய், மது மேகம், வயிற்றுக் கோளாறு, சிறு நீரக நோய், வாந்தி ஆகியவை நீங்கி உடல் ஆரோக்கியம் பெற சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்:

  1. நீர் 100ml
  2. சீரகம் - அரைத் தேக்கரண்டி
  3. கருஞ்சீரகம் - அரைத் தேக்கரண்டி
  4. உள்ளி - 10g

ஆகியவற்றினை இட்டுக் கொதிக்க வைத்து ஆறவிட்டு வடித்துத் தீனீர் தயார் செய்ய வேண்டும்.

அத் தீனீரை 12 நாட்கள் (கால் மண்டலம்) காலை உணவிற்குப் முன் வெறு வயிற்றில் குடித்து 1 மணிநேரம் எதுவும் உண்ணக் கூடாது. இவ்வாறு செய்து வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.

குறிப்பு:
தீனீர் ஆறிய பின் அரைத் தேக்கரண்டி கருஞ்சீரக தைலம் இனைக் கலந்து குடிக்க வேண்டும்.
கற்பிணிகள் கருஞ்சீரகம், கருஞ்சீரகத் தைலம் பயன்படுத்தக் கூடாது.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.wஎஞ்சு

உடல் சதைப் பிடிப்புடையதாக மாற - குஷ்டியான உடம்பைப் பெற சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்:

  1. 200ml நீர் 100ml ஆகும்வரை
  2. நெருஞ்சி மரம் முழுதும் (முள், இலை, தண்டு, வேர்)- 1 சிறு மரம்
  3. லவங்கம் - அரைத் தேக்கரண்டி
  4. கராம்பு - அரைத் தேக்கரண்டி
  5. மூங்கில் அரிசி - அரைத் தேக்கரண்டி
  6. சிறுநெருஞ்சில் முள்ளு - 5
  7. ஏலக்காய் - 5
  8. பிளம்ஸ் (உலர் திராட்சை) - 5
  9. கற்கண்டு துண்டு - 2

ஆகியவற்றி இட்டுக் கொதிக்க வைத்து ஆறவிட்டு வடித்துத் தீனீர் தயார் செய்ய வேண்டும்.

அந்தத் தீனீரை 48 நாட்கள் (ஒரு மண்டலம்) காலை மாலை உணவிற்குப் பின் குடித்து வந்தால் உடல் சதைப் பிடிப்பாக மாறும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

நெஞ்சு படபடப்பு நீங்க சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்:

  1. 300ml நீர் 200ml ஆகும்வரை
  2. தாமரைப்பூ இதழ்கள் - 20
  3. மிளகு - 10g

ஆகியவற்றைப் போட்டுக் கொதிக்கச் செய்து வடிகட்டி ஆடவிட்டுத் தீனீர் தயார் செய்யப்படும்.

இதனைக் குடித்துவர நெஞ்சுப் படபடப்புக் குணமாகும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

ஆண்மைக் குறைபாடு / விந்தணுக் குறைபாடு / மலட்டுத் தன்மை நீங்க சித்த மருத்துவம்

  • மாதம் 6 முறை
  • பத்தியம் - போதைப் பொருட்கள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
  • ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் முறை


தேவையான பொருட்கள்:

  1. 200ml நீர்
  2. உலர்ந்த ஆலம் விதை - 1 தேக்கரண்டி
  3. உலர் திராட்சை / பிளம்ஸ் - 6

செய்முறை

  • நீரினைக் கொதிக்கச் செய்து
  • உலர்ந்த ஆலம் விதைகளையும்
  • இரண்டாகப் பிளந்த உலர் திராட்சைகளையும் இட்டு
  • கொதிக்கச் செய்து
  • ஆறவிட்டு அருந்துதல்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

எளிய வல்லாரை கரிசாலை காயகற்பம் - சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. வல்லாரை
  2. வெள்ளைக் கரிசாலை / கரிசலாங்கண்ணி
  3. செருப்படை / செருப்படை / சிறு செருப்படை

ஆகியவற்றைத் தனித்தையே

  • காய வைத்து
  • மாவாக்கி
  • சம அளவு கலந்து
  • அதன் நிறையின் கால் பங்கு மேலும் கற்கண்டுப் பொடி சேர்த்து

காயகற்பம் தயாரிக்கப்படும்

  • முதல் 12 நாட்கள் அதில் மூன்று வெருகடியினைத் தேனில் குழைத்து மாலை உணவுடன் உண்ண வேண்டும்.
  • பின் 12 நாட்கள் அதேபோல ஆனால் நெய்யில் குழைத்து உண்ண வேண்டும்.

குறிப்பு: வெருகடி - பூனையின் கால்தட அளவீடு. நமது 5 விரல்களை ஒன்றாகக் கூம்பி அள்ளும் சிறிய அளவீடு.

  • நோய் நொடி அணுகாது.
  • பித்த மயக்கம் நீங்கும்.
  • மனத் தெளிவின்மை நீங்கிச் சிறந்த தெளிவு, ஞாபகசக்தி, ஞானம் ஆகியன கிட்டும்.
  • உடல் காய கற்பமாகும்
  • ஆயுள் கூடும்.
  • நோய்நொடியின்றிநீண்ட காலம் வாழலாம்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

காய கற்பம் - சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. பெருநெல்லி
  2. பசும்பால்


தினமும் பெருநெல்லியுடன் பால் உண்டு வர உடலிலுள்ள கழிவுகள் எல்லாம் நீங்கி உடல் பொன்னாக மின்னும்.

  • ஆயுள் கூடும்.
  • நோய்நொடியின்ரி நீண்ட காலம் வாழலாம்.
  • உடல் காய கற்பமாகும்


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

மன நோய், மன உளைச்சல், உளறுதல் நீங்க சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. நீர் 200ml
  2. மருதோண்டி விதைகள் (கறுப்பு விதைகள்) - 20g


மருதோண்டி விதைகளை நீரில் இட்டுக் 100ml ஆகும்வரை காய்ச்சி தினமும் காலை 50ml குடித்து வர மனநோய் குணமாகும்.

  • தேவையெனின் 5g  மருதோண்டி இலைகளையும் போட்டுக் காய்ச்சலாம்.
  • மருதோண்டி = மருதாணி
  • மருதோண்டிப் பூக்களைத் தலையில் வைத்துப் படுத்தால் தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் வரும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

தலைமயிர் நீண்டு கரு கரு என்று வளர சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. மருதோண்டி இலை - 20g
  2. தேங்காய் எண்ணெய் - 100ml


தேங்காய் எண்ணெயினை வாசம் வரும்வரை சூடாக்கிய பின் பச்சையான மருதோண்டி இலைகளை இட்டு நன்கு காய்ச்சிப் பிரட்டினால் மயிர் நீண்டு வளரும்.
இரவில் படுக்கைக்குப் போகும்போது பிரட்டுவது சிறந்தது.

மருதோண்டி = மருதாணி

  • மருதோண்டிப் பூக்களைத் தலையில் வைத்துப் படுத்தால் தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் வரும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

வயிற்று வலி, மூட்டு வலி, பழு வலி, இடுப்பு வலி என மாறி மாறி ஓடும் வலிகள் குணமாக சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. முடக்கொத்தான் கீரை
  2. கொத்தமல்லி கீரை
  3. மிளகு - 10
  4. உள்ளி - 1 பல்லு
  5. புளியின் கரைச்சல் - 1 புளி
  6. வெல்லம் - 15g
  7. நெய் / எண்ணெய்


  • நெய் / எண்ணெயில் நறுக்கிய முடக்கொத்தான், கொத்தமல்லி கீரை, உள்ளி, இஞ்சி ஆகியவற்றை அரைப்பதம் வரை வதக்கி (அரை வேக்காடு)
  • இறக்கி அரைத்து
  • புளிக்கரைசல், வெல்லம் சேர்த்துக் கீரையாக
  • புட்டுடனோ சோறுடனோ அல்லது தனியாகவோ சாப்பிட்டு வந்தால் ஓடும் வலிகள் குணமாகும்.
 நோய் இல்லாவிடினும் உண்ணலாம். ஆரோக்கியமானது; சுவையானது.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

கண் பார்வையினைக் கூட்ட சித்த மருத்துவம் (பகலில் நட்சத்திரம் தெரியும்)

தேவையான பொருட்கள்

  1. கரிசலாங்கண்ணி இலைகள்(வெள்ளை / மஞ்சள்) - 20 இலைகள்
  2. திராட்சை - 150g
  3. அத்திப்பழம் - 20g
  4. கொய்யாப்பழம் - 1
  5. மாதுளம்பழம் - 1

ஆகிய அனைத்தையும் ஒன்றாக அரைத்து வாரத்திற்கு ஒருமுறையேனும் உண்டு வந்தால் கண் பார்வை கூடும்.

முக்கிய குறிப்பு: 10 வயது முதல் 5 துளி கரிசலாங்கண்ணி சாறு உண்டு வர அல்லது வெத்திலை போல சப்பி வர பகலில் நட்சத்திரம் தெரியும் அளவிற்குக் கண் பார்வை கூடும்.

  • கரிசலாங்கண்ணி - மருந்து
  • திராட்சை - சத்து
  • அத்திப்பழம் - உடல் உறுப்புக்களைச் சீர் செய்ய
  • கொய்யாப்பழம் - மலச்சிக்கல் நீங்க
  • மாதுளம்பழம் - குளிர்மைக்கு


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

உயரமாக வளர சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. பனங்கிழங்கு - 1
  2. மிளகு 3-4
  3. மாதுளம்பழம் - 1
  4. அத்திப்பழம் - 20g
  5. நாட்டு மாட்டுப்பால் / ஆட்டுப்பால் - 1 கப்

மாதுளம்பழ முத்துக்கள், பனங்கிழங்கு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைக்கவும்.
நறுக்கிய அத்திப் பழங்களையும் சேர்த்து பொடியாக்கிய மிளகினையும் பாலில் இட்டுக் கரைத்து அரைத்து வைத்த களிம்பையும் சேர்த்துக் கூழ் போல செய்ய வேண்டும்.

குழந்தைகள் தினமும் 100ml மட்டும்
பெரியவர்கள் தினமும் 100-250ml குடிக்க வேண்டும்.

1 அடி வரை உயரம் கூடும். பரம்பரை உயரமும் கூடும்.

தாழ்வு மனப்பாங்கு நீங்கும்.

  • பனங்கிழங்கு - உயரம்
  • அத்திப்பழம் - உடல் கழிவு நீங்க / தொந்தி குறைய
  • பால் - சத்தூட்டி
  • மிளகு - சளிப் பிடிப்பதைத் தவிர்க்க
  • மாதுளம்பழம் - தாழ்வு மனப்பாங்கு நீங்கும்


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

உடல் உஷ்ணம்/ சூடு குறைய சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. 300ml நீர் 200ml ஆகும்வரை
  2. நன்னாரி வேர்
  3. சர்க்கரை

காய்ச்சி வடித்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம்/ சூடு குறையும்.



ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

வழிப்போக்கு மற்றும் மாதவிடாய்க்கு மருந்து

தேவையான பொருட்கள்

  1. 300ml நீர் 200ml ஆகும்வரை
  2. கொய்யா இலை - 10-20 இலைகள்
  3. ஏலக்காய் - 3-5
  4. பனை வெல்லம் - தேவையான அளவு

காய்ச்சி வடித்து குடித்தால் வழிப்போக்கு மற்றும் மாதவிடாய் தளர்ச்சியுறும்.

உள் உறுப்புகளுக்குப் பலம் தரும்.
வழிப்போக்கு மீண்டும் வராது.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

மனவழுத்தம், சொறியாசிஸ் தோல் நோய்கள் நீங்க சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்
  1. அறுகம்புல்
  2. வெள்ளைச் சாரணை மூக்கிரட்டை
  3. வெள்ளை நாய்க் கடுகு நலவேளை
  4. வில்வம்
ஆகியவற்றை தேங்காய் / எள்ளெண்ணெயில் எண்ணெயில் காய்ச்சி,
  • தோல் நோய் உள்ள இடங்களில் தடவி வர நீங்கும்.
  • தலையில் தடவி வந்தால் மனவழுத்தம் நீங்கும்.

இதே போல தலையிலுள்ள நீர்க்கோர்வை நீங்க நொச்சி இலைகளைக் கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். நீர்க்கோர்வயும் மன அழுத்ததிற்கு ஒரு காரணம் ஆகும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

நீரிழிவு, மனநோய், நுரையீரல் போன்ற நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. துளசி இலை    - 4/5 இலைகள்
  2. திப்பிலி இலை -  4/5 இலைகள்
  3. ஏலரிசி (ஏலக்காய்) - 2/3
  4. கற்கண்டு

ஆகியவற்றை 300ml நீர் 200ml ஆகுமாறு காய்ச்சிக் குடித்தால் நீரிழிவு, மனநோய், நுரையீரல் கோளாறுகள், கோபம் ஆகியன கட்டுப்படும்.

துளசி இலை, விதை அரைத்து 3 விரலால் (வெருகடி) கிள்ளி அந்தி, சந்தி (காலை மாலை) சாப்பிடின் மன அழுத்தம் நீங்கும்.

துளசி இலை, விதை, வேர் ஆகியற்றை தலையில் வைத்துப் படுத்தால் மனவழுத்தம்  போன்ற நோய்கள் நீங்கும்.

துளசி இலை அரைத்து  தலையில் வைத்து சிறிது நேரத்தின் பின் முழுகினால் பேன், பொடுகு நீங்கும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

முகத்திலுள்ள வீக்கம் குறைய சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. வசம்புத்தூள் - 10g
  2. மஞ்சள் தூள் - 20g
  3. வேப்பமிலை - 20g

ஆகியவற்றை நீர் விட்டு நன்கு அரைத்து முகத்தில் தடிவி வந்தால் வீக்கம் குறையும்.
முக்கிய குறிப்பு: நாக்கில் தடவக் கூடாது

வேப்பமிலையினை மட்டும் அவித்துத் தினமும் முகம் கழுவி வந்தாலும் வீக்கம் குறையும்.

வசம்பினை முகர்ந்தாலே வீக்கம் குறையும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

முகத்திலுள்ள பள்ளங்கள் நீங்க, கரும்புள்ளி மறைய, பொலிவு பெற சித்த மருத்துவம்

  1. தேவையான பொருட்கள்
  2. பப்பாப்பழம் 66%
  3. முருங்கப்பட்டை 10%
  4. கோரைக் கிழங்கு 10%
  5. பாதாம் பருப்பு 7%
  6. கசகசா 7%

ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் 60-90 நாட்கள் பூசி வர முகத்திலுள்ள பள்ளங்கள், கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
2 மணிநேரம் பூசி அப்படியே விட்டுவிட்டு பின்பு குளிர் நீர், சிகைக்காய் கொண்டு கழுவ வேண்டும். சவர்க்காரம் போட்டுக் களுவக் கூடாது.


முக்கிய குறிப்பு: முகம் தவிர்ந்த பாகங்களிற்குக் கடும் வெப்ப காலங்களிலேயே பூச வேண்டும். உம்: அக்கினி நச்சத்திரம் (காண்டாவனம்). இல்லையெனில் குளிரக்கிவிடும்.
முகம் தவிர்ந்த பாகங்கள் விரைவில் பொலிவுறும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

காலிலுள்ள கரும்புள்ளி நீங்க மருத்துவம்

  1. மருதாணி இலை 50g
  2. சந்தனம் 50g

ஆகியவற்றை நீருடன் அரைத்துப் பூசி வர காலிலுள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

குறிப்பு: அத்திப்பழம் உண்டாலும் அது குணமடையும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

நெஞ்சு சளி சித்த மருத்துவம்

இவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளால் ஏற்படலாம்.

முறை 1:

  1. 250ml கரும்புச்சாறு
  2. 10g துளசி இலைச்சாறு
  3. மிளகு குறைந்தது 5 கூடியது 10
  4. கால் இஞ்சி அளவு சுக்கு (காய்ந்த இஞ்சி)

ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி குடித்து வர நெஞ்சுச் சளி நீங்கும்.

மு.கு: இதனைச் சூட்டுடன் குடிக்க வேண்டும்.

அதோடு வளமான குரல் கிடைக்கும்.
இதனால் சுவாசம் சுத்தமாகும். தொண்டை வலி சுகமாகும்.

முறை 2:

மிளகையும் துளசியையும் மென்று தின்று வந்தாலே இருமல் நீங்கும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

மூக்கு வடிதலை நிறுத்த சித்த மருத்துவம்

  • பசு நெய்யில் ஏலக்காயினை இனை உடைத்துக் காய்ச்சி மூக்கில் ஒரு துளியை விட மூக்குவடிதல் நீங்கும்.


  • விரலி மஞ்சள் இனைச் சுட்டு வரும் புகையை மூக்கினால் உறிஞ்சினால் மூக்குவடிதல் நிற்கும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

ஞாபக சக்தியைக் கூட்ட சித்த மருத்துவம்

  • அறுகம்புல் பாலுடன்/உணவுடன் வாரத்திற்கு 3 முறை உண்டு வர ஞாபகசக்தி கூடும். 


  • வசம்பு - 25g, மஞ்சள் பொடி - 100g, வல்லாரைப் பொடி - 100g ஆகியவற்றை ஒன்றாகப் பொடி செய்து ஒரு வெருகடியினைத் தேனில் குழைத்துல் காலை மாலை உண்டு வந்தால் ஞாபகசக்தி கூடும்.


  • மஞ்சல் கரிசலாங்கண்ணி மற்றும் தூதுவளை ஆகியவற்றை பாலுடன்/உணவுடன் வாரத்திற்கு 3 முறை உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


  • மாதுளம்பழச் சாறு 200ml இற்குச் சர்க்கரை கலந்து தினம் குடித்து வர  ஞாபகசக்தி கூடும்.


  • அரிசித் திப்பிலியை தேனில் ஒரு வாரத்திற்கு ஊறவிட்டு காலையில் உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


  • 20 வல்லாரை இலைகளைத் தினம் மென்று உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


  • தினமும் தேனுடன் விளாம்பளம் உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


  • வெண்டைக்காய்ப் பிஞ்சு தினமும் உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

இனிய குரல் வர சித்த மருத்துவம்

  1. சுக்கு (காய்ந்த்த இஞ்சி)
  2. திப்பிலி
  3. ஏலரிசி (ஏலக்காய்)
  4. வால் மிளகு

ஆகியவற்றை வறுத்துத் தேனுடன் உண்டு வர இனிய குரல் கிட்டும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

வயிற்றுக் கோளாறு நீங்க மருத்துவம்

  1. 300ml நீர் 200ml ஆகும்வரை
  2. தேசி இலை
  3. முருங்கை இலை
  4. மிளகு
  5. உப்பு

சேர்த்துத் தீனீர் செய்து குடித்து வர வயிற்றுக் கோளாறு நீங்கும்.

கொய்யாப்பழம் ஒரு மலம் இழக்கி ஆகும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.


முகத்திலுள்ள கறுப்புகள் நீங்க மருத்துவம்

1. பெண்கள் முகத்திலுள்ள கறுப்புகள் கருப்பப்பை சுத்தம் இன்மையினாலேயே ஏற்படுகிறது.

  • ஒரு பட்டாணி அளவு வெள்ளறுகு எடுத்து அரைத்து,
  • ஒரு வாரத்திற்குத் தினமும் உண்டு வர கருப்பப்பை சுத்தமாகும்.
  • முகத்தில் உள்ள அழுக்கு நீங்கும்.

 

முகப்பரு, கரும்புள்ளி, முகச்சுருக்கம் போக்க மருத்துவம்

2. தேசித் தோலைப் பிழிந்து முகத்தில் பிரட்டி முகத்தில் பூசுதல்.

 

3. தேசித் தோலைத் தலையில் பூசி சிறிது நேரம் பின் கழுவுதல். இதனால் பேன் நீங்கும். தலைக்கும் குளிர்ச்சி கிட்டும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

சர்க்கரை வியாதிக்கான மருத்துவம்

  • தினமும் காலையும் மாலையும் நித்தியகல்யாணிப் பூவினை அவித்துக் குடித்தல்.
  • பறங்கிப் பட்டை நிவேரணம்
  • பெரு நெல்லிக்காய் லேகியம்


குறிப்பு: கொய்யாப் பழமும் சலரோகத்திற்கு மருந்தாகும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

குழந்தை பிறக்காமை மற்றும் கருப்பையில் நீர்க்கட்டி ஆகியவற்றுக்கு மருத்துவம்

வெள்ளறுகு அரைத்து ஒரு பட்டாணி அளவு உண்டு வருதல்.

முள்முருங்கைப்பூ மற்றும் வெள்ளறுகு ஆகியவற்றை அரைத்துத் தேன் சேர்த்து உண்ணலாம்.

பிரதானமாக மாதவிடாயின் போதான 7 நாட்கள் உண்டுவர கட்டி கரைந்து குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகரிக்கும்.

 குறிப்பு: கருப்பையில் இவ்வாறு கட்டி இருப்பின் மன அழுத்தம், கவலைகள் போன்றனவும் அதிகரித்துக் காணப்படும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

எலும்பு தெரியும் குழந்தைகள் புஷ்டியாக தேற லேகியம் - பெரியவரும் உபயோகிக்கலாம்

வயது 1 முதல் 13 வரையான குழந்தைகளிற்கு,

  • 1 மேசைக்கரண்டி நெய்யினில் 50g உலர் திராட்சையைப் பொரித்து எடுத்து வைத்தல்.
  • 5-10 முருங்கை விதைகளை அவித்தல்.
  • அது அவிகையில் பனை வெல்லம் மற்றும் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்தல்.
  • பிறகு அதனில் பொரித்து எடுத்து வைத்த அந்த உலர்திராட்சையைச் சேர்த்துப் பாகுபோலக் காய்ச்சி இறக்கினால் அது இறுகிவிடும்.

குறிப்பு: இறுதியில் 100ml வருமாறு காய்ச்ச வேண்டும்.

இதேபோல காய்ச்சியோ அல்லது குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தியோ
தினமும் 1 மேசைக்கரண்டி அளவு சாப்பிட்டு வர கொழு கொழு எனச் சிறுவர்கள் வளருவர். (இது பசியினினை ஏற்படுத்தும்).
பிஞ்சு முருங்கை விதை பயன்படுத்துவது நல்லது.

  • நெய் சேர்ப்பதால் காச நோய் உள்ள குழந்தைகள் காச நோய் நீங்கிக் குணமடைவர்.
  • பனை வெல்லம் சேர்ப்பதால் இருதய அடைப்பு நீங்கும்.

பெரியவர்கள் முத்திய 2 முருங்கை விதையை பாலுடன் குடித்துவர இயலாமை மூட்டுவலி, நரம்பு நோவு போன்றன நீங்கித் தென்படைவர்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

26 வகை காய்ச்சலும் மாற மருத்துவம்

காய்ச்சல் என்பது அறிகுறியாகும். அது 26 வகையான காரணங்களால் ஏற்படலாம் என சித்த மருத்துவத்தில் வரையறுக்கப்படுகிறது.


முறை 1:

  1. சீந்தில் இலை (அற்புத வல்லி இலை)
  2. சின்ன வெங்காயம்
  3. சேர்த்துத் 300ml நீர் 200ml ஆகும்வரை தீனீர் ஆக்கிக் குடித்துவர மாறும்.


அல்லது

முறை 2:

4 சீந்தில் இலையுடன் 2 சின்ன வெங்காயம் சாப்பிட்டு வர சகல வகையான காய்ச்சலும் நீங்கும்.

குறிப்பு: சீந்தில் இலை அகத்தி இலை வடிவம் உடையது.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

பித்த மயக்கம் தீர மருத்துவம்

இதேபோல உயிருக்கு ஆணவம், கன்மம், மாயை போன்ற நோய்களை அதிகம் பிடித்தவையாக இருத்தல் போல வாதம், பித்தம், சிலேத்துவம் ஆகியன உடலுக்கு மிகவும் பிடித்த நோய்களாகும்.

பித்தத்திற்கான  அறிகுறிகள்:

  • உடல் காய்ந்துவிடும்
  • தலை சுற்றுதல்
  • குமட்டல்

தேவையான் பொருட்கள்:

  1. 250g பன்னீர் திராட்சை (விதைகள் உள்ள திராட்சை)
  2. 20g மல்லி

திராட்சையை நன்கு உப்புநீர், மஞ்சள் நீரில் கழுவி மல்லியுடன் நன்கு அரைத்து மூன்று நாள் தொடர்ந்து

  • 5 - 10 வயது: 120ml - 200ml
  • 10 வயதிற்கு மேலே 200ml - 400ml வரையும் சாப்பிட்டு வர 10 வருடங்கள் வரையில் மயக்கம் வராது.

குறிப்பு: தேனீர் அருந்துவதால் பித்தம் கூடும். மேற்கண்டவாறு செய்ய பித்தப்பை அளவான பித்தத்தை மட்டும் சுரக்கும். உப்புநீர், மஞ்சள் நீரில் கழுவுவது நச்சு மருந்துகளை நீக்க ஆகும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.



சிறு நீரகக் கல் கரைய/ சிறுநீரக எரிவு நீங்க மருத்துவம்

சிறுநீரகத்தில் படிந்த கல் நீங்க,

மருத்துவம் - 1

  1. தேங்காய்ப்பூக் கீரை 10g,
  2. உப்பிலும் மஞ்சள் தண்ணியிலும் கழுவிய பன்னீர் திராட்சை (விதைகள் உள்ள திராட்சை) சாறு 100g
  3. மிளகு 10

ஆகியவற்றை நன்கு ஒன்றாக அடித்து தினமும் ஒருமுறை மாறும்வரை குடித்து வரலாம்.

மருத்துவம் - 2
தேவையான் பொருட்கள்

  1. 100ml - நீரில்
  2. மல்லி- அரைத் தேக்கரண்டி
  3. சிறுநெருஞ்சி இலை - 10g
  4. சிறுநெருஞ்சி முள்ளு - 10g

ஆகியவற்றை இட்டு நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து வடித்துத் தீனீர் செய்ய வேண்டும். அதனைக் குடித்து வர மேற்கண்ட பிரச்சினைகள் குணமாகும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

தோல் நோய் மருத்துவம்

  1. பப்பாளியை அரைத்தது
  2. வாகை இலை 50g, சீந்தில் இலை(அற்புத வல்லி இலை) 50g, அகத்தி இலை 50g ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சியது
  3. மருதாணி இலை அரைத்தது

மூன்றையும் அடுத்தடுத்த நாள் மாறி மாறி உள்ளங்கை அளவு எடுத்து தோய் நோய் உள்ள இடத்தில் பூசிவர குணமாகும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

சிறிய விசப் பூச்சிக்கடி மருத்துவம்

விசம் குறைந்த பாம்புகளுக்கும்  இதனைப் பயன்படுத்தலாம்.

  1. 300ml நீர் 200ml  ஆகும்வரை
  2. 50g வாழைப்பூ
  3. 20g மிளகு
  4. 10g சீரகம்
  5. 10 சின்ன வெங்காயம்

இட்டுக் காய்ச்சி தினமும் 2 தேக்கரண்டி அளவு ஒரு வாரத்திற்குக் குடிக்க வேண்டும்.


குறிப்பு: விசக்கடிக்கு வைத்தியசாலையில் ஊசி போட்டாலும் கூட 10 வருடத்தின் பின் மயக்கம் வரலாம். ஊசி போடினும் இதனைச் செய்து குடித்தல் நல்லது.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

Monday, August 31, 2020

வேலின் சிறப்பு

 முருகவழிபாட்டினை முதன்முதலில் தொடங்கியவர் ஆதிசங்கரர் ஆவார். பார்வதி  சூரனை அழிக்க தன்னுடைய சக்தி முழுவதையும் வேலாக மாற்றி முருகனுக்கு அளித்து  ஆசிர்வதம் செய்து அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. குன்று இருக்குமிடமெங்கும் குமரன் இருப்பது போல வேல் இன்றி முருகனை வழிபடுவது மிக மிக அரிது. வேல் ஞானத்தின் அடையாளம் ஆகும். ஞானம் எனும் ஆயுதம் கொண்டு மாயை எனும் இருளை நீக்க முடியும்.

ஆன்மீகம்
வேலினை அதன் பாதத்திருந்து தலைக்கு தரிசித்தால் அல்லது மனதில் கற்பனை செய்தால் உடலும் உள்ளமும் எழுச்சி பெறும். அதன்போது குண்டலினி மேலெழுகின்றது. உடலில் சேர்த்து வைக்கப்பட்ட சக்தியும் எண்ணங்களும் பிரபஞ்சத்தில் கலக்கும். சக்தி சிவத்தினைச் சேர்கிறது. சக்தி பிறப்பிக்கும் அளவு அதிகரித்து உடலின் அதிர்வு உச்சம் அடைகின்றது. கோபுர #தரிசனமும் இதன் அடிப்படையிலானதே!

வேலினை அதன் தலையிலிருந்து பாதத்திற்கு தரிசித்தால் உடலும் உள்ளமும் சாந்தமுறும். அதன்போது குண்டலினி சாந்தம் கொள்கிறது. உடலில் பிரபஞ்ச சக்தியின் சேர்க்கை நிகழ்கிறது. சிவம் சக்தியில் சேர்கிறது. சக்தி பிறப்பிக்கும் அளவு குறைவடைந்து உடலின் அதிர்வு தாழ்ச்சி அடைகின்றது.

கூரான இடத்தில் ஏற்றங்கள் செறியும் என்பது விஞ்ஞானத்திலும் சொல்லப்படுகின்ற உண்மை ஆகும். இதனால் கூரான பொருளில் முனைவாக்கம் ஏற்படும். இது போன்றதொரு முனைவாக்கம் அல்லது உருக்குலைவுதான் இந்தப் பிரபஞ்சமே தோன்றக் காரணமாக இருந்திருக்கும் என்றும் விஞ்ஞானம் நம்புகிறது. நாம் அப்பொருட்களை காணும்போது அதே முனைவுத் தன்மை நமது மனதிலும் எழுகிறது. காரணம் அப்பொருளின் விம்பம் நமது விழித்திரையிலும் விழுகிறது. திக்கற்று இருப்பவருக்கு ஒரு திசை கிடைப்பது போல, நோக்கங்கள் இல்லாது இருப்பவருக்கு ஒரு முனைவு ஏற்படுகிறது. அதிலே ஒரு நம்பிக்கையும் நிலைத்த தன்மையும் ஏற்படுகிறது. அவருடைய வாழ்வில் முன்னேற்றம் கிட்டுகிறது. இது ஒரு ஞானம் கிடைப்பதையே குறிக்கிறது. இது உண்மையில் ஞானத்தின் சின்னமாகிறது.

வேல் உள்ள இடங்களில் உள்ள ஏற்பட்டுள்ள சலனமான ஏற்றங்கள் யாவும் வேலினால் உறிஞ்சப்பட்டு அந்த இடம் சாந்தம் அடைவதோடு வேலின் சக்தியும் பெருகுகிறது. இதனால் அதனை #பிரார்த்தனை செய்பவர்க்கு வேண்டியவை கிட்ட வழி பிறக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் அதனை வைத்து பூஜிக்கக் கூடாது. அதனால் தீய சக்திகளும் எண்ணங்களும் வளர வாய்ப்புகள் உள்ளது. ஏன் இது போன்ற சக்திவாய்ந்த மூலகங்களைக் கோயில் என்று புனிதமாக ஒன்றை அமைத்து அங்கே வைத்தார்கள்? அங்கே நல்லவர்கள் மட்டும்தான் வருவார்கள். அவர்கள் எண்ணங்கள் மட்டும் நிறைவேறும். நன்மை விளையும். தீயவர்கள் எண்ணங்கள் இதன்பாற்பட்டால் அனைத்தும் பாழாகிவிடும்.

சித்தாந்தம்
வேலானது நுனியில் மிகக் கூர்மையாகவும், இடையில் அகலமாகவும், முடிவில் ஆழமாகவும் இருக்கும். நுனியில் கூரானது போல அறிவானது கூர்மையாகவும் தெளிவாகவும் இருத்தல் வேண்டும். இடையில் அகலமானது போல எண்ணங்கள் மிகவும் அகன்று இருக்க வேண்டும். அனைத்திலும் பரந்த அறிவு சிறிதளவு இருக்க வேண்டும். அனைத்தையும் விரிவான பார்வையில் நோக்க வேண்டும். அடியில் ஆழமாக இருப்பது போல எதிலும் ஆழ்ந்த அறிவு கொண்டிருக்க வேண்டும். எதைக் கற்றாலும் ஆழமாகக் கற்க வேண்டும். இவ்வாறு ஞானத்தின் தன்மையை வேல் விளக்குவதாக ஒரு பொருள் உண்டு.

புராணம்
முருகன் தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுக்கின்றார். தமிழ்க்குலம் காக்க வேல் கொண்டு அவர் போரிட்டு பல போர்களின் வென்றதன் நினைவாக வேலினை வைத்து வழிபடுவதாகவும் ஒரு கதை உண்டு. ஆதிகாலத்தில் ஈட்டியே சக்தி வாய்ந்த ஆயுதமாகக் கருதப்பட்டது. வேலும் ஈட்டியின் வடிவமுடையதே!

முருகனின் கதைகள் மக்கள் மனதில் இருக்கும் வரைக்கும் தான் முருகனுக்கு சக்தி இருக்கும். முருகனுக்கு மட்டுமில்ல அவன் அப்பன் சிவனுக்கும் இது தான் நிலை.
#ஆன்மீக_சூட்சுமம்_1
#மெய்ப்பொருள்_காண்பதறிவு

Tuesday, August 25, 2020

உடல் நலம் பேண என்ன செய்ய வேண்டும்? மெய்யுணர மெய்யுணர வேண்டும்

தினமும் உடற்பயிற்சி ஏன் அவசியமாகிறது?
உடலின் அனைத்துப் பாகங்களும் சிறப்புற வேலை செய்ய உடற்பயிற்சி மிக அவசியமாகும். ஆண்டவன் உங்களுக்கென்று தந்தவற்றை நீங்கள் பயன்படுத்தாவிடில், அது உங்களை விட்டு தொலைந்து போகிறது. வெள்ளையர் தமது உடலையும் புத்தி கூர்மையையும் விருத்தி செய்ய உடற்பயிற்சிகளைப் பயன்படுத்தினர். தமிழர்கள் யோகங்கள், வர்மங்கள் மற்றும் அப்பியாசங்கள் பலவற்றைப் பயன்படுத்தினர். அவை இப்போது அழிந்து போயின. உடல் உறுப்புகளை உடனடியாகத் துலக்குவதற்காக எமது மூட்டுக்களில் சக்தி எளிய வடிவில் சேமிக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்யாமல் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்யின் அது பல உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும். அதோடு, உயிரை உடலுடன் பிணைத்து வைத்திருப்பது உடல் உறுப்புகளேயாகும். #அவை மீட்டாமல் போகும் பட்சத்தில் அந்தப் பிணைப்புகள் தளர்வுறுகின்றன. அவ்வுறுப்புகளின் செயற்றிறன் குறைவடைகிறது.

மூளையினால் வேலை செய்பவர்களிற்கு, வேலையில் மூழ்கிய பிறகு இடுப்பிற்குக் கீழ்ப்பகுதி பயன்படுத்தப்படுவது குறைவு. உடலில் சுவாச வீதத்திற்கு ஏற்ப அனுசேபம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதற்காக சுவாச வீதத்தைக் குறைக்க இயலாது. உடல் உறுப்புகளிற்கான இரத்த ஓட்டம் குறைந்துவிடும். அது மட்டுமல்லாமல் அதிகம் துலக்கப்படும் உறுப்புதான் மேம்படுகிறது. இருந்த இடத்தில் இருந்து வேலை செய்தல் உடலுக்கு நல்லதல்ல. மூளையினால் வேலை செய்வதாகக் கூறிக்கொண்டு வாழ்க்கை ஒரு மூடிய கட்டடத்தினுள் வீணடிக்கப்படுகிறது.  தொன்று தொட்டே முளையினால் மட்டும் செய்யப்படும் வேலைகள் இருந்து கொண்டேதான் வந்துள்ளன. ஆனால், அதற்குப் பதிலாக அவர்கள் யோகா போன்ற ஆசனங்களைப் பின்பற்றி வாழ்ந்துள்ளனர். அவை உடலில் உருவாகும் மேலதிக அனுசேப சக்தியை வலுவிழக்கச் செய்ய உதவும். இவற்றைக் கோயில் கோபுரங்களில் சிற்பங்களிலும் செதுக்கிவைத்திருக்கின்றனர்.

இதயம் பெரிதாக வாழ வேண்டும்
சிறிய வட்டத்துக்குள் வாழக் கூடாது.  நமது உயிர் தலைக்குள் மட்டும் அடங்கிவிடக் கூடாது. #கண்களை மூடினால் நீங்கள் இந்த உடலுக்குள் இருப்பதை மறந்துவிட வேண்டும். எங்கும் நிறைந்தது போல உணர வேண்டும். அப்போது உடலின் மூலை முடுக்கெங்கும் இரத்தம் பாய்வதோடு உடற்சமநிலை மீழ்கிறது. #ஐம்புலன்களும் நிரம்பலுறும்போது அது தொடர்பான நியூரோன்கள் அருட்டப்படுவதால் அதுவரை அவை பெற்றுக்கொண்டவை உடனடியாக மீட்கக்கூடியதாக மாறும். உயிர் பிரிந்து சென்று மீண்டும் பிரபஞ்சத்தில் கலக்கும் சுதந்திரத்தையே நாடும். அதைக் கட்டி வைக்க ஐம்புலன்களை மீட்ட வேண்டும். #பிடித்திருந்தால் துன்பம் விட்டு விட்டால் முக்தி.

#உடலும் மனமும் எப்போது நிம்மதி அடைகிறது?
உடலிற்கு சுகம், மனதிற்கு நிம்மதி எப்போது கிட்டும் எனில், ஐம்புலன்களும் இனிமையாக மீட்டப்பட்டு ஓய்வடையும் போதாகும். காதிற்கு இனிய ஓசை, கண்ணிற்குக் குளிர்ச்சியான காட்சிகள், மூக்கிற்கு சுகந்தரும் மணங்கள், நாவிற்கினிய உணவுகள், மெய் காண் வருடல்கள் ஆகியன உச்சம் கண்டு ஓய்வடையின் அவை கிடைக்கப் பெறுகின்றன. அதோடு ஒருவரின்
உடலியல் செயல்பாடுகளைப் பொறுத்தே அவரின் அறிவு மற்றும் சிந்தனைத்திறன் இருக்கும். உம்: ஓடுதல், நடத்தல், கண் இமைத்தல் இன்னும் பல. ”ஓடும் வரையில் வெற்றி நமக்கு. ஓடுதல் நிறுத்தாதே!”

பழக்கம் தான் பெரியது
நினைவில் செயல்கள் எமது நடத்தையில் அதிக செல்வாக்குச் செலுத்துகிறது. நாம் எமது சிந்தனை செய்கையின்றி எத்தனையோ செயல்பாடுகள் செய்கிறோம். இவை ஐம்பொறியால் தகவல்கள் உணரப்பட்டவுடன் செயலாக்கம் பெறுகின்றன. பயிற்சியின் மூலம் எமது வேலைகளை விரைவாக முடிக்க இவைதான் காரணமாகின்றன. எமது பழக்கங்களே அவற்றைத் தீர்மானிக்கின்றன.   எனவே, புதிய பழக்கம் ஒன்றைக் கடைப்பிடிக்கத் தொடங்குகையில் கவனமாக இருக்க வேண்டும்.

உடற்சூடு தணிய என்ன செய்ய வேண்டும்?
உடலில் பிரதானமாக வெப்ப சக்தியும் மின் சக்தியுமே இணைவாகத் தொழிற்படுகிறது. உடல் சூடு அதிகரிப்பின் உடற் பித்தம் தலைக்கு ஏறுகிறது. இதனால் முடி உடிர்தல், மேகச் சூடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்படியும் ஒன்று உண்டு உடலால் வேலை செய்யாமல் மூளையால் வேலை செய்ய செய்ய மூளைக்கு அதிக சக்தி கிடைக்கப்பெறும். ஆனால், அதனை நெறிப்படுத்தவில்லையெனில் வினையாகிவிடும். இதனைத் தவிர்க்க தினமும் உடல் சோர்வுறும்வரை உடலாலே வேலை செய்ய வேண்டும். #வேட்டையாடப் பிறந்திட்டு மூச்சிரைக்க ஓடியாடித் திரியாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு தினமும் தவறாமல் சாப்பிடுவது உடற்சூட்டை மிகையாகக் கூட்டிவிடுகிறது.
That extra energy is your silent killer

உடலை இரண்டு பாகங்களாகப் பிரித்து நோக்கினால், தலை மற்றும் தலை தவிர்ந்த உடல். வெப்ப ஓட்டம் தலையிலிருந்து காலிற்கு இருக்க வேண்டும். #இதற்கு உடல்  தலையை விடக் குறைந்த வெப்ப நிலையில் இருக்க வேண்டும். இதற்கு முரணாகக் காணப்பட 2 காரணங்கள் இருக்கக்கூடும். உடலிலுள்ள மேலதிக சக்தி மற்றும் தலைப் பகுதிக்கான இரத்த ஓட்டம் குறைவாகக் காணப்படுதல்.
தீர்வு:
1. உடற்பயிற்சி அல்லது கடின வேலைகள் உடற் சூட்டைத் தணித்து சாதகமான விளைவை உருவாக்கும்.
உம்: துவிச்சக்கரவண்டி மற்றும் நீச்சல் செய்தல் நல்லது.
2. மேலதிக சக்தியைக் குறைவாகப் பேண விரதம் இருத்தல் (வாரத்தில் ஒருநாள் ஒருவேளை உணவு தவிர்த்தல்) அல்லது உடன் சக்தி வழங்கும் மாப்பொருள் நிறைந்த உணவுகளை வெகுவாகக் குறைத்து மரக்கறி வகைகளை உண்ணல்.
உம்: ஒரு அகப்பை சோறு ஒவ்வொரு அகப்பை கறிகள்.
காலையில் கூழ் குடித்தல் உடல்நலம்ம் மேம்படச் செய்கிறது.

மீட்டாமல் இருக்க உயிருக்கு உடல் மீதான பற்று அற்றுப்போய் இன்பம் மிகாமல் குறுகுகிறது.
#சாமகானப்பிரியன்
#இராவணன்
#சிவன்

# Your physical activities determine your mental activities. Never stop running.
# Unconscious processes may play a larger role in behavior than thought in our activities. Motor reactions are such reaction without cognition. Emotional reaction - very very dangerous if it goes wrong. Out habits influence.
# Energy(plasma) gets deposited near limbs for immediate acts based on your ATP rate. If you don't exercise, it will cause heath issues.

Sunday, August 16, 2020

வானிலே நாம் வீழ்ந்தால்... - கவிதை

எம்மொழியும் சிந்தையுறும் கவி நம் செம்மொழியில்:
"வானிலே நாம் வீழ்ந்தால்..."


மழைத் துளிகள் விளையும் கருநீல முகில்காடு - முத்துச் சிதறல்கள்.

ஆங்கே பலவண்ணத்தில் தோன்றும் அரைநாண்கள் - வானம் வளைந்த போதுகள்.

தாரகைகள் பூத்த வெறுமை நிறத்தடாகம் - தங்க தெறிப்புகள்.

அங்கே கதிரோன் ஒளிநிழலாய் நிலவு - தங்கப் பதக்கம்.

பஞ்சுவிதைகள் திரணைகளாக வெடித்துலவும் நீல வெளி - மனம் கொள்ளும் பள்ளியறை.

அங்கு நிதம் உருண்டுருண்டு உறங்கும் ரசத் திவளை - பகல் அவன்.

பிறப்பிறப்பின் சாட்சிகள், காலை மாலை - செம்மேனியில் வெண்ணாரைத் துளை.

கார்மேகக் குவியலைப் பிளந்திறங்கும் மின்னல்கள் - எரிவான் வெடிப்பு.

அம் மின்னல்கள் உயிர் படைக்கும் வான் விம்பம் - நீல்கடல் மாயம்.

இம்மாய உலகில் யாவும் மாயமே...
வீழ்வோமா மெய் வானிலே!
மனமெனும் உடல் தரித்து...
வானிலே நாம் வீழ்ந்தால்...

- கீதன்

உளநலம் பேணும் மந்திர ஜெபமாலை

மனதை நெறிப்படுத்தும் மந்திர ஜெபமாலை


(2020 புரட்டாதி 16 இற்றைப்படுத்தப்பட்டது)

ஞானம் ஒன்றே என்றும் அளியாத மெய்ப்பொருள் ஆகும். முருகன் கையிலுள்ள வேலும் ஞானத்தின் பொருளையே குறித்து நிற்கிறது. ஞானத்தில் உளநலம் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகிறது. உடலை நோய்கள் பல பீடிப்பதைப் போலவே மனதினையும் நோய்கள் பீடிக்கின்றன. ஆனால் அவற்றை எளிதில் இனங்காண முடிவதில்லை. மனதை நெறிப்படுத்த ஆன்மீகம் பின்பற்றிய யுக்திகள் பல. உதாரணமாக, தொழுகை செய்தல், திருநீறு அணிதல், கோபுர தரிசனம், தோப்புக்கரணம் இன்னும் பல. அவற்றை நமது வாழ்வியலோடு இணைத்தே மதங்களும் சமயங்களும் தோன்றின. அவற்றுள் ஜெபம் செய்தலும் ஒன்று. பல குழப்பங்களிலிருந்து விடுபட்டு மனதை நெறிப்படுத்த ஜெபம் செய்தலும் ஒரு கருவியாக அமைகிறது.

நமது வாழ்க்கையில் பல வகையான குழப்பங்கள் வந்து சூழக் கூடும். நாம் அன்றாடம் சந்திக்கின்ற ஒவ்வொரு விடயங்களும் நமது அறிவிற்கு உரமாகும். அதிலே விசத் தன்மை கொண்ட மறைபொருட்கள் கலந்திருப்பின் அவையும் அழியாமல் அங்கேயே நிலைகொண்டுவிடும். எந்த ஒரு விடயமும் நமது மனதிற்குள் சென்று விட்டால், அவற்றை எளிதில் நீக்கிவிட முடியாது. தீயவையும் இதற்கு விதிவிலக்கல்ல. தீய எண்ணங்கள் நம் மனதில் விதைக்கப்பட்டால் அவை தோப்பாக மாறி, ஞான ஒளியை நம்மிடம் இருந்து மறைத்துவிடுகிறது. அவற்றை மறக்க நினைத்தால் அவை மேலும் வலுவாக வேரூன்றிவிடுகிறது.

ஜெபம் செய்தல் இது போன்ற தீய எண்ணங்களில் இருந்தும், இதுவரை நாம் செய்த பாவங்களில் (குற்ற உணர்ச்சி) இருந்தும் நம்மை விடுவிக்கிறது. அதோடு, மனதை ஒருமுகமாக வைத்திருக்கவும் இது உதவுகிறது. மனதில் பல மாறுபட்ட எண்ணங்கள் வராமல், நம்மைத் தெளிவித்து சரியான மார்க்கத்தை காட்டவல்லது. ஞாபக மறதி ஏற்படுத்தும் காரணிகளில் குழப்பமும் ஒன்று ஆகும். ஆகையால், இது மறதி எனும் நோயை விரட்டும் மருந்தும் ஆகும். இதன் தொழிற்பாடு முற்றிலுமாக உளவியலுடன் தொடர்புடையது.

இதனை அளவீட்டுடன் செய்வதற்காக ஜெபமாலை பயன்படுத்தப்படுகிறது. கண்ணை மூடிக்கொண்டு, ஒரு ஜெபமாலையைக் கையில் பிடித்து அதை எண்ணி எண்ணி ஒரே பொருளை மீண்டும் மீண்டும் உச்சரிப்பர். இந்த வழக்கம் அநேக மதங்களிலும் உள்ளது. கிறிஸ்தவர்கள் சிலுவை பொருந்திய மணிமாலையைப் பயன்படுத்தி மேரி மாதா அல்லது இயேசுவின் நாமம் ஜெபிப்பர். இஸ்லாம், பௌத்த மதங்களிலும் ஜெபம் செய்யும் வழக்கம் உண்டு.

இந்து மதத்தில் அநேகமாக 108 மணிகள் கொண்ட மாலை பயன்படுத்தப்படும். அதோடு இந்துக்கள் ”ஓம் - அஉம்” என்ற இந்த உலகம் தோன்றும்போது உருவான ஓசையையும் மந்திரத்தில் இணைத்து ஓதுவர். சுவாச வீதத்தைச் செம்மைப்படுத்த அது உதவுகிறது. விஷ்ணு பக்தர்கள் துளசி மாலை கொண்டு நாராயண நாமமும், சிவபக்தர்கள் உருத்திராட்ச மாலையும் வைத்து பஞ்சாட்சரமும் உச்சரிபர். சந்தன மாலை, ரத்த சந்தனமாலை, ஸ்படிக மாலை, ருத்திராட்ச மாலை, துளசி மாலை, செந்துளசி மாலை என இன்னும் பலவகை உண்டு.

இதன் பயனை மேலும் செம்மைப்படுத்த

  • ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து,
  • கண்களை மூடிக்கொண்டு,
  • வேறு சிந்தனைகள் தவிர்த்து,
  • கைகளில் சின் முத்திரை பிடித்து அல்லது ஜெபமாலையின் மணிகளை எண்ணிக்கொண்டு,
  • ஏதாவது மனதிற்கு பரவசம் தரும் சிறு வசனங்களை
தொடர்ச்சியாக மனதினுள் உச்சரிக்க வேண்டும்.

இதனையே சம்பந்தர், “விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்...” என்னும் பாடலில் பின்வருமாறு கூறுகின்றார். வான்வரை விறகுகள் அடுக்கப்பட்டு இருந்தாலும் அதனுள் புகுகின்ற சிறு கொடிய நெருப்பானது அவை அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்க வல்லது. அது போல நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் எரித்து அவற்றிலிருந்து நம்மை விடுவிப்பது “சிவாயநம” என்ற ஐந்தெழுத்தாகும் என்கிறார். “சிவாயநம” எனும் ஓசை மனதிற்கு அமைதியைத் தருவதாக சைவர்களால் உணரப்பட்டிருக்கிறது.

Tuesday, August 11, 2020

நீ நல்லவனா இல்லை கெட்டவனா?

எவரும் இங்கு பிறக்கும்போது முழுமையாக நல்லவராகவோ கெட்டவராகவோ பிறப்பது கிடையாது. அவரவர்களுக்கு ஏற்படும் சூழ்நிலைகள் அப்படி அவர்களை ஆக்கிவிடுகிறது. அதற்கு போதிய வழிகாட்டி இன்மை, வளரும் சூழல், போட்டி பொறாமைகள், சில மன உளைச்சல்கள், வறுமை போன்றன காரணமாக அமைகின்றன. இதைத் தவிர்க்க சில வழிகள் உள்ளன. எப்போதும் பொறுமையே நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும் அனைவருக்கும் நன்மை பயப்பது.

”தவளையும் தன் வாயால் கெடும்”
அவசரப்பட்டு வார்த்தைகளை வெளிவிடுதல் மிகவும் தீங்கானது.
கூறிய வார்த்தைகள் மற்றும் செய்த சபதங்களுக்காக வஞ்சனைகள் செய்வதுவும் ஒருவர் தீயவராக மாறுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. இது பல வேளைகளில் நண்பர்களையும் எதிரியாக்கிவிடுகிறது. இதனால் நண்பர்கள் தீய வழியில் செல்வதோடு அவர்களால் நமக்கி கிட்டவிருந்து உதவிகள் பலவும் தூரம் செல்கின்றன. அதனால்தான், எப்போதும் அமைதியாக இருத்தல் பல பிரச்சினைகளைத் தவிர்த்துவிடுகிறது. நாம் அன்பாக நடந்து கொள்ளாமல் அதை மற்றவரிடம் எதிர்பார்த்தல் சற்றும் முறையல்ல. ஒருவர் வறுமையில் இருக்கும்போது கை கொடுக்காமல் இருத்தல் அவரைத் தீய வழிப்படுத்தலாம்.

நாம் நமது வாயினால் தான் அநேக விடயங்களைக் கெடுத்து வைக்கிறோம். தீயவற்றை எல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நல்லனவற்றை மட்டும் வெளியே சொல்லுங்கள். அது உங்களுக்கும் நல்லது கேட்பவருக்கும் நல்லது. ஏனெனில் நீங்கள் சொல்வது நல்லன மட்டுமாயிற்றே! தீயவை உங்களுடன் முடங்கிக் கிடக்கும்; உங்களுடன் முடிவடையும். நல்லவை பெருகும்.

அநேகர் நல்லவர்களாக இருந்தாலும் ஏன் சிக்கல்கள் ஏற்படுகிறது?
1. ஏமாற்று வேலைகள் செய்யும் சில பேராசை பிடித்தவர்கள் தவறு செய்துவிட்டு பிறர் மீது சுமத்துதல்

2. இதனால் தவறு செய்யாத நிரபராதிகள் தண்டிக்கப்படுதல்.
தவறேதும் செய்யாது தண்டனை அனுபவிக்கும் வலி மிகவும் கொடியது. பொறுத்துக் கொள் தோழா! அதனால் கிடைக்கும் ஞானமும் அளப்பரியது. அதன் பின்னே உன்னை வெல்ல இங்கே யாரும் கிடையாது. சிரித்துக் கொண்டே இரு. அதுவும் பழகிடும்.

3. அனைவரையும் ஒரே மாதிரி எடைபோடுதல்.
ஒருவர் தவறு செய்யும்போது எல்லோரையும் கெட்டவர்கள் என நினைத்து விலகிச் செல்லுதல். அனைவரையும் சந்தேகித்து அவசரத்தில் எதிர்வினை ஆற்றுதல்.  பிறகு உண்மையை உணரும் போது யாவும் கடந்து போய்விடுகிறது. நெருப்பு தூய்மையானது. ஆனால் தொட்டால் எரித்துவிடும்.

4. பொறுப்புகள் என்றவுடன் ஓடி ஒழிவது; உரிமைகள் என்றவுடன் தூக்கிக் கொண்டு வருவதல்.
எல்லோரும் தமக்கு நிகழ்வதே அதிகூடிய துன்பம் / வலி என்று நினைத்துக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தானே அதிகமான பங்கு கடமைகளை நிறைவேற்றி விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். அதனால் தமக்குத்தான் அங்கிகாரம் அளிக்க வேண்டும்; பதவி வழங்க வேண்டும் என்று கோருகின்றனர். எல்லோரும் அவ்வாறே வாதிட்டால் உண்மை என்ன? வலியின் எந்த எல்லை வரை நீங்கள் சென்று கடமை புரிந்தாலும் அதுவே உச்சம் போல தோன்றும். ஆனால் அது மாயை. “கடமையைச் செய். பலனை எதிர் பாராதே என்பர்”. இக்காலத்தில் முட்டாளாக வாழ அதுவே சிறந்த வழி. ஆனால் சமூகம் சுமூகமாக இருக்கும்.

போன்றனவே சமூகத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.

கோபம் இயலாமையின் வெளிப்பாடு ஆகும். ”ஆத்திரக்காரனுக்குப் புத்தி மத்திமம்” என்பதால் கோபத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் யாவும் யாவர்க்கும் மீட்க முடியாத நட்டத்தினையே பெற்றுத் தரும்.

இறைவன் இருக்க ஏன் நன்மை தீமை இரண்டும் இருக்கின்றன? அநியாயங்கள் நிகழ்கின்றன?
இதற்கான பதிலை கீதையிலே கிருஷ்ணர் சொல்கிறார். நன்மை, தீமை யாவும் மனித அறத்துடன் தொடர்புடையவை. உண்மையில் அப்படி எதுவும் இல. மனித அறத்தில் நான் தலையிடுவதில்லை. நான் அனைத்திற்கும் சாட்சி பூதமாகவே இருக்கின்றேன். நான் சாட்சியாக இருப்பதை உணர்ந்து கொண்டவர்கள் தவறுகளையோ தீவினைகளையோ ஆற்ற மாட்டார்கள்.
இதுவும் உண்மை, இருள் என்று ஒன்று உள்ளபடியால்தான் ஒளியின் தேவை இருக்கிறது.


Sunday, August 9, 2020

மனதிற்கு எரிச்சலூட்டும் புறக்காரணிகளைக் கையாழுதல்

Thanks: lianedavey.com
எரிச்சலூட்டும் செயல்பாடுகளைக் கண்டு இருவர் எளிதில் குழப்பம் அடைவர்.

  1. அச் செயல்பாடுகளை பிறருக்கு வழமையாகச் செய்வோர்.
  2. அச் செயல்பாடுகளால் வழமையாகத் துன்புறுபவர்கள்.

  ஒருவர் உங்களை எரிச்சலூட்டும் வகையில் ஏதாவது செய்யின் அதனைச் சகித்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். உங்களது கடமைகளை செய்வதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உண்மையில் அந்த நோக்கத்தில் அவர் செய்திருந்தால் உங்களிடம் இருந்து எரிச்சலூட்டும் செயல்பாடு ஒன்றை அவர் எதிர்பார்ப்பார். நீங்கள் அமைதிகொள்வதால் ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து களைத்துப் போய்விடுவார். ஒருநிலையில் அவர், மனநிலை பாதிக்கப்பட்டு நீங்கள் செய்யும் சாதாரண செயல்பாடுகளை தனக்கு எரிச்சலூட்டச் செய்யும் பதில் செயற்பாடுகளாக அவர் எடுத்துக் கொள்வார். இதனால் ஒவ்வொரு முறை அவர் உங்களுக்கு எரிச்சலுட்டும்போதும் உங்களது ஒவ்வொரு வழமையான செயல்பாடுகளைப் பார்த்துக் குழம்புவார்; துன்பமடைவார்; மனநிலை மேலும் பாதிக்கப்படுவார். நீங்கள் எந்த எதிர்வினையும் ஆற்றாமலேயே, பாவம் எதுவும் ஈட்டாமலேயே உங்கள் கணக்கு முடிந்தது.

  பலவீனமானவர்கள்தான் இது போன்ற காரியங்கள் செய்து தங்களை பலவான்கள்போல காட்டிக் கொள்ள முயல்வர். எப்படியாயினும் நீங்கள் உங்கள் நிலையிலிருந்து தளர்ந்து, அவர்களின் கீழ்மை நிலைக்குச் சென்றுவிடக் கூடாது. ஆனால், ஒருமுறை நீங்கள் அவ்வாறு செய்பவருக்கு அதன் தன்மையை எடுத்துரைக்க வேண்டியது உங்கள் கடமை ஆகும். அதற்கு மேலே அவர் அல்லலுறட்டும். தன் கர்மாவால் தானே மாழட்டும். நமக்கென்ன!

  உங்கள் கடமையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெறுமனே கைகளால் வேலை செய்யாமல் முழுமனதாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் செய்யும் கருமங்கள் செவ்வணே அமையும்.  நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்யும்போது அவற்றை, பிறர் தவறாக நினைப்பார்கள் என்று பலவாறு குழம்பி நிற்கக் கூடாது. அவ்வாறு குழப்பம் கொள்ளின் உங்கள் கடமையைக் கூட உங்களால் சரிவரச் செய்ய முடியாமல் போய்விடும். எந்த சூழ்நிலையிலும் உங்களது வேலைகளை தயக்கமேதுமின்றி செய்து பழக வேண்டும். இயன்றவரை அவை பிறரைப் பாதிக்காது என்று உறுதி செய்வது நல்லது. அவை பிறருக்கு இடையூறாக இருப்பின் அதனை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவர்தம் கடமையாகும். எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க முயல வேண்டும்.
“நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது உன் நம்பிக்கையும் சக்தியும்  கூடுகிறது; எதிரியின் சக்தி குறைவடைகிறது. நீ குழப்பமாக கவலையாக இருக்கும்போது உன் சக்தியும் நம்பிக்கையும் குறைகிறது; எதிரியின்  சக்தி அதிகரிக்கிறது.”

  ஒவ்வொருவரும் இவ்வாறு செயற்பட்டால் சமூகத்தில் குழப்பங்களின் ஊடுருவல் குறைந்து அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும். குழப்பமே நோக்கமாகி அதன் மூலம் நன்மை அடைய நினைக்கும் நாரதர்கள் சிலர் இருக்கும்வரையில் அது நடைமுறைச் சாத்தியம் குன்றியதுதான்.

”ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரிலும் ஓம்பப்படும்.”

சவால்களை முறியடித்து வாழ்வில் வெற்றி அடைவது எப்படி?

thanks: sial.school

"அதிஷ்டத்திற்காகத்தான் காத்திருக்க வேண்டும், கடின உழைப்புக்காக அல்ல. உங்கள் #மதியால், உங்கள் #உழைப்பால் வரும் விளைவை அதிஷ்டம் எதுவும் செய்ய முடியாது. ஏன் கர்மாவும்கூட ஒன்றும் செய்துவிட முடியாது."

நாம் யாரிற்கும் தீங்கின்றி நேர்மையாக வாழ்ந்தாலும் பல பிரச்சினைகள் அறியாமல் வந்து ஒட்டிக் கொள்வது ஏன்?
நாம் ஒவ்வொரு இடங்களுக்குச் செல்லும் போது, ஒவ்வொரு நிகழ்வுகளில் பங்கு கொள்ளும்போது அடுத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கின்றோம். இந்த உலகில் பெறுமதி உள்ள பொருட்கள் அனைத்திற்கும் கேள்வி அதிகம் உண்டு. ஆனால் இருப்பு குறைவாகவே உள்ளது. அதனாலேயே அவை பெறுமதி உடையவையாக உள்ளன.

ஆகையால், வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் சவால்களாகவே இருக்கும். பிரச்சினைகளைச் சந்திக்காமல் வாழ விரும்பினால் அதற்கு ஒரே வழி எங்கும் செல்லாமல், எதிலும் பங்கு கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். பிறகு என்ன செய்ய? பிரச்சினைகளையும் தடைகளையும் தாண்டி உங்கள் பயணம் தொடர வேண்டும். "தடையைத் தாண்டி நீ நடையைப் போடுடா! வாழ்க்கை முழுக்க இருக்கு ஜோருடா!" பல தோல்விகள் வரினும் இலக்கை நோக்கிய உங்கள் ஓட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். "நதி போல ஓடிக் கொண்டிரு!", "ஓடும் வரையில் வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே!" உண்மையில் இது இரு பொருள் கொண்டுதான் கவிஞர் எழுதி இருக்க வேண்டும். அது குறித்து பிறிதொரு பதிவில் பார்ப்போம்.

மிரட்டல்கள் செய்து ஏமாற்றும் கயவர் கூட்டம்
இந்த உலகில் அநேக செயற்பாடுகள் மிரட்டல்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது. அனைவருமே ஏதாவது ஒரு வகையில் மிரட்டலுகளுக்கு உள்ளாகி இருப்பார். பலரும் இன்னமும் மிரட்டல்களின் பிடியிலேயே செயற்படுகின்றன. அவை வெளியில் சொல்ல முடியாதவையாக இருக்கலாம். சொத்துக்களை ஏமாற்றி அபகரிப்பதற்கு அன்று தொட்டுக் கையாளப்படும் முறைகளில் இதுவும் ஒன்று. முதலில் உங்களை ஏதாவது தவறு செய்ய வைப்பர். அதற்கான சூழல்களை ஏற்படுத்துவர். பிறகு அதனை சாட்சிப்படுத்தி வெளிப்படுத்தி விடுவேன் என மிரட்டுவர். அநேகமாக அவை மானத்திற்குப் பங்கம் விளைவிக்கும் தவறுகளாக இருப்பதே வழக்கம். உ.ம்: மது, மாது, களவு இன்னும் பல... இதனை எச்சக்களை நாய்கள் என்று அழைப்பர்.

"திருடனுக்குத் தேள் கொட்டினால் பேசாமல் இருக்க வேண்டும்" அல்லவா!

இது போன்ற சவால்களிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. தவறு செய்வதற்குச் சந்தர்ப்பம் இடங் கொடுத்தாலும் தவறுகள் செய்யக் கூடாது. எப்போதுமே நேர்மையாகவே நடக்க வேண்டும். அதோடு அது போன்ற மிரட்டல்களிற்கு அடி பணியவே கூடாது. குறுகிய கால விளைவை சிந்திப்பதை விடுத்து நீண்ட காலத்துக்குச் சிந்திக்க வேண்டும். நீங்கள் செய்யும் செயற்பாடுகளின் விளைவுகள் தெரியாதவிடத்து அவற்றைச் செய்யவே கூடாது. அந்தச் செயற்பாடுகள் பலரின் உயிரைக்கூடக் குடிக்கலாம். அத்துடன் ஒரு போதும் நிதானத்தை இழந்துவிடக் கூடாது.

வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுவதும் இரண்டாவது பிரபல்யமான ஏமாற்றுமுறை ஆகும். அதனிலிருந்தும் கவனமாக இருக்க வேண்டும்.

நவீன முறைத் சித்திரவதை முறைகளைக் கண்டுபிடிக்க முடியாதது ஏன்?

தவறு செய்பவர்கள் ஒரே முறையினையே தொடர்ந்து பின்பற்றினால் மாட்டிக் கொள்வர். அதனால், அதையே தடையின்றி தொடர்ச்சியாகச் செய்ய #ஒரே #மாதிரியான #விளைவுகளுடைய, அதனை ஒத்த பல திட்டங்கள் வைத்திருப்பர். அதனை மாற்றி மாற்றி செயல்படுத்துவர்.  ஒவ்வொரு முறையிலும் பல மாற்றங்கள் இருக்கும். இதனால், அது எங்கிருந்து செய்யப்படுகிறது, அதற்குப் பயன்படுத்திய உத்தி என்ன, செய்பவர் யார் போன்றவற்றைக் கண்டுபிடிப்பது கடினம். அதனால் அவர்கள் வெளிப்படையாகவே நடமாடக் கூடியதாக உள்ளது.

இவ்வாறான சவால்களை முறியடித்து வாழ்வில் வெற்றி அடைவது எப்படி?
நீங்கள் எங்கே சென்றாலும் என்ன செய்தாலும், உங்களது வீட்டுடனான உறவு மட்டும் வலுவாக இருக்க வேண்டும். உங்கள் நலனுக்காகக் குரல் கொடுக்க ஒரு கூட்டம் இருக்க வேண்டும். அது நண்பர் கூட்டமாகக் கூட இருக்கலாம். இலக்குகளை வரையறுத்து அதை நோக்கித் தினம் ஒரு அடியாவது எடுத்து வைக்க வேண்டும். ஒன்றை அடைவதற்காக இன்னொன்றை கடமையாகச் செய்பவர்கள் விரைவில் அதன் மீதும் வாழ்க்கையின் மீதும் வெறுப்படைகிறார்கள். இலக்குகளை வைத்து அதை நோக்கி அதையே முழுமூச்சாகச் செய்பவர்கள் அதிலே மேலும் நாட்டம் கொண்டு வெற்றியடைகிறார்கள். எத்தனை தோல்விகள் வரினும் துவண்டுவிடக் கூடாது.

எல்லோரும் போல சுலபமான பாதையைத் தெரிவு செய்யாது, வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுங்கள். எது வந்த போதும் அதிலேயே நிலைத்து இருங்கள். ஆனால் நீங்கள் தனித்து விடவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். தடைகள் இல்லாத பாதையில் செல்ல நினைப்பதைவிட, தடைகளைத் தகர்க்க, தவிர்க்க, தாங்கிக் கொள்ளக் கற்றிருத்தல் வேண்டும். தடைகளின்றிப் பாதைகளே கிடையாது.

வாய்ப்புகள் எப்போது கிட்டாது; உங்களுக்காகக் காத்திருக்கப் போவதுமில்லை
உழைப்பால் உயர்ந்த காலம் கற்காலம். இப்போது வாழ்க்கை ஒரு சூதாட்டம், அதிலும் தர்மம், அதர்மம் உண்டு. உடையவற்றை உடையவரே நம்பும் வகையில் ஏமாற்றியே இங்கே அநேக பணம், பொருள் ஈட்டப்படுகிறது. எங்களால் முடிந்தவரை நம் இருப்பை உறுதிப்படுத்துவதிலேயே மக்கள் நாட்டம் செல்கிறது.

உதாரணமாக, எத்தனை இலட்சங்கள் ஊதியம் பெறுபவராக இருப்பினும் ஒருவர் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகையில் மிகுதியையும் கேட்டுப் பெற மறப்பதில்லை. அவர் நின்று பயணம் செய்தாலும் இருந்து பயணம் செய்தாலும் அதே அளவு பணம்தான் அறவிடப்படுவார். ஆனால், அவர் ஒரு தனிப்பட்ட வாடகை வண்டியில் சென்றால் அது போல் பல மடங்கு பணம் கொடுத்தே தீர வேண்டும்; கொடுக்கின்றார். முந்திக் கொள்பவர்கள் இருக்கைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். எப்போதும் வாய்ப்புகள் வருவதில்லை. அத்தோடு வரும் வாய்ப்புகளின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டதே! முந்திக் கொள்பவர் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வர். வருகின்ற வாய்ப்புகள் உங்களது விருப்பம் அல்ல எனில் ஒதுங்கி நிற்கலாம். ஆனால் எதுவும் இங்கே உங்களுக்காகக் காத்திருக்கப் போவதில்லை.

உங்கள் கைமீறிப்போன விடயங்களைக் கடந்து செல்வது மேல்
உங்களுக்கு நடந்த அநியாயங்களைச் சொன்னால், அதனால் பாதிக்கப்பட்டவர் தவிர ஏனையவர் அனுதாபம்தான் கொள்வரே தவிர எதுவும் மாறிவிடப் போவதில்லை. அவற்றைப் பறைசாற்றித் திரிவது வீணானது. அவற்றை நினைத்து வருந்துதல் உங்களை மேலும் கீழே கொண்டு செல்லும். ஏனெனில், கவலை வாழ்க்கைக்கு அனைத்து வகையிலும் எதிரி ஆகும். அதற்கான நியாயத்தினை உங்களால் வழங்க முடியாவிடின், அதனை உங்கள் கட்டுக்குள் கொண்டு வர முடியாவிடின் அவற்றைக் கடந்து செல்வதே மேலானது. அது உங்கள் மேலதிக இழப்புகள் ஏற்படாமல் தடுப்பதோடு உங்களது முன்னேற்றத்திற்கும் தடையாக நிற்காது.

இந்த உலகில் எவை எல்லாம் நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அவை எல்லாம் கண்டிப்பாக நடந்தே தீரும். ஆகையால் இதுவரை நடந்த, இப்போது நடைபெறுகிற விடயங்களை நினைத்து மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஒரு சில விசமக் குணம் படைத்தவர்களைப் பார்த்து எல்லோரையும் அவ்வாறுதான் என்று எடை போடாதீர்கள். அது உங்களுக்கு வாழ்க்கை மீதான வெறுப்பை ஏற்படுத்தும்.  நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. அவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

கிடைக்கிறது கிடைக்காமலிருக்காது.
கிடைக்காமலிருக்கிறது கிடைக்காது.
எவை நமக்குக் கிடைக்க வேண்டும் என்று இருக்கிறதோ அவை மட்டுமே கிடைக்கும். “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” ஆகும்.
ஆனால், அவை கிடைப்பதில் முயற்சிக்கும் பங்கு உண்டு!

இந்த உலகில் இலட்சியமாக வாழ்வது கடினம்
குழப்பம் விளைவித்து வெற்றி கொள்ளும் இந்த உலகில் நடிக்காமல் நேர்மையாக வாழ்வது கடினம்.நேர்மையாக வாழ்ந்தால் சிலரின் நட்பைச் சம்பாதித்தாலும் பலரின் எதிர்ப்பைப் சந்திக்க வேண்டி வரும். இங்கே எல்லோரும் 100% நல்லவர்கள் அல்ல. உங்கள் நேர்மைக்காக அவர்களைக் காட்டிக் கொடுக்க வேண்டிய நிலைமைகள் பல வரும். அப்போது அது உங்களுக்குப் பல வகையில் தீங்கு பயக்கும். நீங்கள் உங்கள் கடமையில் மட்டும் நேர்மையாக இருத்தல் நலம்.

நடிக்காவிடில் கிடைக்க வேண்டிய பல கிடைக்காமல் போகும். நடித்தால் கிடாகாததது பலவும் கிடைக்கும். பிறகு சிறிய சிறிய துரோகங்கள் மறந்தும் போகின்றன. நேர்மையாக வாழ்வது என்று கூறி அனைத்தையும் இழக்கவா! அல்லது நடித்து அனைத்தையும் அனுபவித்து விட்டு மீண்டும் எதுவும் அறியாதது போல் நடிக்கவா ஒருவர் விளைவார்...
”உலகத்தோடு ஒத்து ஒழுகு”
குழப்பங்களிற்கு ஈடு கொடுக்க நீங்கள் கொடியவர்களாக மாறினாலும், உள்ளே எரிந்து கொண்டிருக்கும் நேர்மை எனும் நெருப்பை மட்டும் அணைய விட்டுவிடாதீர்கள்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு
நீங்கள் கேட்கும் பார்க்கும் அனைத்தையும் அப்படியே நம்பி விடாதீர்கள் சில சம்பவங்கள் ஒருவரைக் காரணம் வைத்துச் செய்யப்படுகின்றன. வெற்றுக் கண்ணால் பார்த்தால் அது தவறான ஒருவரையே குற்றவாளியாகக் காட்டும். நிதானமாகக் காத்திருந்து முடிவுகள் எடுப்பது அனைவருக்கும் சுபம்.

ஏன் என்று தெரியாமல் பல தாக்குதல்கள் நிகழும், இது குறித்துக் காரணம் தேடி நிற்கையில், "உன் கூட்டாளியை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் தாக்கினேன்" என்று பதில் வரும். அத்துடன் அந்தக் கூட்டு முடிவடைகிறது. உன் கூட்டாளி கொள்கை உன் கொள்கை அல்லாதவிடத்து, அனுசரித்து நடக்க முடியாதவிடத்து தனித்திருப்பதே சுபம்.

கதைகட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்கு தேவை மனசாட்சி

தீயதைப் பாக்காதே!
தீயதைக் கேட்காதே!
தீயதைப் பேசாதே!
தீய எண்ணங்கள் உள்ளே போனால் திரும்பத் திரும்பத் தடக்கலுறும். தீயவனாக வாழாதவிடத்து, தீயவனாக மாறாவிடத்து அது துன்பமே விளைவிக்கும்

Everyday our life has something to attain our goals. Do them all and never quit. You will achieve it one day.

Monday, July 20, 2020

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் - கவிதை

தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பற்றிய கவிதை.
பிறப்பிடம்: நவாலி, யாழ்ப்பாணம்
நன்றி: IBCதமிழ்.com
தென்னுலகு தமிழ் மேவிய மூவேந்தர் வழி
இப் பொன்னாட்டிலும் பொன் சுரக்கும்
முத்தமிழ் ஒளி கூட்டிய
தங்கத் தாத்தா சோமசுந்தரம்.

ஊர்த் தோப்பில் தனியாக சுகித்திருக்கிறேன்
இதய அரங்கினிலே நாமிருவர்
வெண் மேலாடை
வெண் வேட்டி
தோழில் மஞ்சள் சால்வை
நீள்பட்டை தரி ஏறு நெற்றி
நரை மீசை தாடி கொண்ட
சுந்தரத் தாத்தாவுடன் செந்தமிழ் பழகுகிறேன்
அத்தோப்பு நாவல் தோப்பு;
கவி பேசுகிறார் சோமசுந்தரம்.

தேன் தமிழ் கொண்டு - நீ
செதுக்கிய சிற்பங்கள் பொன்னா!
பேரா! தங்கம்.. தாத்தா சால்வை நிறமல்ல,
தாத்தாக்குத் தமிழ் அளித்த மிகை.

78 இல் நீர் அவதரிக்க
செந்தமிழும் அறியாது உன் புலமை
முத்தமிழ் தெவிட்ட - நீர்
ஊட்டிய கவியின் பெருமை
பிறவியில் எய்தியது என்று
சொல்லப் பிரியமில்லை
தாயிடம் கொண்டதில் கொஞ்சமாய்
கொடுத்ததாய்க் கொள்கிறேன்

வரகவி நீயோ!
முருகு கவியில் - பல
கருவறைகள் காண்கிறாய்!
நாமகள் நாமம் யாவும் பாவேற்றுகிறாய்!
நம்பிக்கை வாழ்க்கையின் பிடியாம்,
தாத்தாக்குத் தமிழ் வேந்தன் கழல்
வாழ்வது ஜீவ முக்தி.

அந்தாதி, கலம்பகம், வெண்பா பதிகமும்
பல இலக்கியமும் தந்தீர்!
உயிரிளங்குமரன் எனும் இலக்கியக் காட்சி வரைந்து
புலவர் பட்டமும் பெற்று விட்டீரே!
உள்ளத்தில் தமிழ் ஊற்றெடுத்தால்
பாட்டுக்குப் பஞ்சமும் உண்டோ!
தமிழின் பொருள் இனிமையன்றோ!

தமிழ் மூச்சு எனினும் - வெள்ளையன்
மொழியிலும் சளைக்காத உபாத்தியாயன் நீ!
247 தமிழுக்கு 26 ஆங்கிலம் பேரிலகு!
மொழிகள் பல அறிய நாம் அழவும்
எல்லை விரியுமென நீங்கள் அறிவீரே!

இளமையில் கொடுமையாம் வறுமை,
அதிலும் தளராத தமிழ்ப்பற்று உனது!
வறுமை உடலுக்கல்லவோ!
நின் உயிர் தமிழெனும் இனிமையில் வாழுமே!

கவிதை நாடகம்...
கருப்பொருள் என்னவோ!
நாடகமாய்ப் பாலர் நடிக்கும்
இப்புலவன் கவிகள் காண் புகழ்!
கத்தரி காய்கையில் காவலில் சேவகன் - என
பொம்மைக்கும் உயிர் தந்து
சித்தரிக்கும் உன்பா.

உன் சிறுவர் செந்தமிழ் பாலர் பாட்டு
தெவிட்டாத தேனாக - நீ
பாடிய பொய் மட்டும் ஏனோ
ஆடிகளில் சினமூட்டும்
இது மறைவில் பாட்டில் இனிமை
இல்லை என்கிறதா
இல்லை விடுதலை இல்லை!
53 இல் நின் உடல் மரிக்க,
விடுதலை கொண்டது தமிழ்
கவிக்கோடி தன் கடலை
நிறைக்காமல் மாண்டானே என்று

ஏழ் கடல் ஐநிலம் மோதி மீழ
ச(ஜ)னிக்கும் கானம் தோற்கும் உன்கவி
வாழ்க தங்கம்.. தாத்தா என்றும் தமிழுடன்..!

Friday, July 17, 2020

மூப்பு ஏன் வருகிறது? நம் உடலில் நம் மனதின் ஆதிக்கம் என்ன?

நன்றி: tamil.webdunia.com
நாம் மனதில் நினைப்பதையே நமது உடல் செய்கிறது. நமது மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. ஒரு குழந்தை பிறக்கும்போது தாய், தந்தை கொடுத்த #உடலை மட்டும் கொண்டிருக்கிறது. அதனால், அது வலிகளை எப்படிக் கையாள்வது என்று அறியாமல் அழுகிறது. அக்குழந்தை இப்புவியில் பிறந்த நாள் தொட்டு அதன் மனமும் (கர்மா) சேர்ந்தே வளர்கிறது. இந்த உடல் அதன் கட்டளைகளிற்கு ஏற்பவே தொழிற்படுகிறது. இவ்வாறு, மனம் இந்த உடலில் பலவாறு ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறது.

சிறுவயதில் நமக்கு மனதில் எந்தக் கவலையும் இருப்பதில்லை. பின்னாளில் சிறிது சிறிதாகப் பல கவலைகள் வந்து ஒட்டிக் கொள்கின்றன. பல துன்பங்கள் நமது மனதை சிறிது சிறிதாகப் பாதிக்கின்றது. இதனால், சிறிது சிறிதாக நம்மை அறியாமலே நமக்கு நம்வாழ்க்கையில் பிடிப்பின்றிப் போகிறது. ஏன் வாழ்கின்றோம், என்று தோன்றுகிறது. சில சமயங்களில் ஏன் பிறந்தோம், என்று கூடத் தோன்றும். இவை நமது உடலை நமது மனதின் கவனத்தில் இருந்து சிறிது சிறிதாக விலக்குகிறது. இதனாலேயே நமது உடல் மூப்படைகின்றது.

இயல்பாகவே நமது மனமானது நமது வாழ்க்கை மீது பாரிய ஆதிக்கம் உடையது. நமது மனதின் எண்ணங்கள் நமது எதிர்காலத்தில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இதனையே விவேகானந்தர், "நீ எது நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகின்றாய்" என்றார்.

இவை எதுவும் ஒரு உடற் பயிற்சியாளனைப் பாதிக்காது. உடற்பயிற்சி செய்யாதவர்தம் உடல் மீட்டாத வீணையைப் போன்றது. அதன் தந்திகள் மற்றும் உடலானது, நாதத்துடன் சங்கமிப்பதில்லை. இதனையே இராவணன், தனது ஒரு தலையுடன் உடலை உருவி சாமகானம் வாசிப்பது போல நமக்குக் கூறியிருக்கலாம். அதாவது, உடற்பயிற்சி செய்யாதபோது நமது உடலானது நமது மனதில் (பெரும் பகுதி மூளையில்) இருந்து விலகிச் செல்ல ஆரம்பிக்கின்றது. இதனால், நமக்கு பல உடலியல் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஏற்படுகிறது. தற்காலத்து வேலைகள் இது போன்ற நிலமையையே நமக்குத் திணிக்கின்றன. நாம் உடற்பயிற்சி செய்து வந்தால், நமக்கு அது பலவகையில் நன்மை பயக்கும்.
#சாமகானப்பிரியன்

சிலவேளை, "பணம் வந்தவுடன் அவனின் முகத்தில் செந்தழிப்பு வந்துவிட்டது. இளமையாக தோன்றுகின்றான்" என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். அதுவும் நான் கூறும் செயல்விளைவிற்கு அமையவே நிகழ்கிறது. பணம் வந்தவுடன் ஒருவருடைய கவலைகள் அகல்கிறது. மகிழ்ச்சி தாண்டவம் ஆடுகிறது. நாளடைவில் அது அவர்தம் முகத்திலும் பிரதிபலிக்கிறது. இதில் மாய மந்திரம் எதுவும் கிடையாது. "மகிழ்ச்சி" ஒன்றே அவரை அழகாக்குகின்றது. இந்த விளைவு நாம் நினைப்பது போல சில நாளிகைகளில் நிகழ்வதல்ல. சில மாதங்கள் அல்லது வருடங்கள்கூட ஆகலாம். எந்த அளவிற்கு அந்த விளைவு மனதைப் பாதிக்கிறது என்பதைப் பொறுத்தே அவன் வீச்சு, வேகம் அமைகிறது.

எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே! இந்த உடல் நமது மனதின் விம்பமாக மட்டும் அமையாது ஒன்றில் ஒன்று பின்னிப் பிணைந்தது. ஒன்றில் ஏற்படும் பாதிப்பு இன்னொன்றில் பிரதிபலிக்கிறது. ஆனால் எது நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால் அது நமது மனம்தான். அதனை சரியாகக் கையாண்டால் நமது வாழ்வை வெற்றி கொள்ள இயலும். பல சோதனைகள் நம்மை வாட்டும். பல துயர்கள் நம்மைத் துரத்தும். ஆனால், நாம் நம்மனதைத் தளராமல் வைத்திருந்தால் அனைத்தையும் வெற்றிகரமாகத் தாண்டிவிடலாம். எதுவும் நம்மை அசைத்துவிட முடியாது. எந்த ஒருபோதினிலும் மனம் உடைந்து போகக் கூடாது; பின்வாங்கி விடக் கூடாது; முயற்சியைக் கைவிடக் கூடாது.

மனம் ஒரு மாய மந்திரக் கட்டு. இது ஒரு நூலின் தலைப்பு ஆகும். உடலில் #தானாக வரும் அநேக பாதக விளைவுகள் மனதில் ஏற்படும் கோளாறுகளாலேயே நிகழ்கிறது. நீங்கள் தொடர்ச்சியாகப் பல குழப்பங்களை, தீர்க்க முடியாத புதிர்களைக் சந்தித்தால் நாளடைவில் அதன் விளைவு உங்கள் உடலிலும் பிரதிபலிக்கும். உங்கள் இரத்த அழுத்தங்கள் மாறுபடும். உங்கள் இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாகும். உடலில் இன்னும் பல பாகங்களில் என்ன என்னவோ #சொல்ல முடியாத நோய்கள் எல்லாம் ஏற்படும். சிலவேளை பல பாகங்களில் காயங்களைக் கூட ஏற்படுத்த வல்லது, இந்த மனம். இதன் உச்சத்தினை இங்கே காணலாம், ஒருவர் தனக்குத் தீ சுட்டது போல அல்லது இரும்பால் அடித்தது போல கனவு கண்டு எழும்போது உடனே அல்லது நாளடைவில் அந்த இடத்தில் தீக் காயம் அல்லது அடிபட்ட தழும்பு ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடியும்.

ஒரு குட்டிக் கதையுடன் இந்தப் பதிவை முடிப்போம். என் அன்னை கூறினார், தான் நடராஜர்பத்து படித்த நாளன்று, இரவு கனவில் பயங்கரமாக ஒருவர் வீட்டின் முன் இருந்தது போலவும் அதனை ஒரு பாம்பு தன் கைகள் மற்றும் வால் கொண்டு பிடித்துச் சென்றது போலவும் கனவு கண்டதாகச் சொன்னார்.

அதற்கு நான், பஜனையும் பக்தியும் நமது மனதிற்குத் தென்பு தருபவை. மனம் உடைந்து விடாமல் தாங்கிப் பிடிப்பவை. மனதின் தெளிவே நமது நிம்மதி மற்றும் எதிர்கால வெற்றியைத் தீர்மானிக்கிறது. நீங்கள் அது போன்ற பக்தியினால் திருப்தி அடைந்தமையால் உங்கள் மனம் நிம்மதி, பலம், தெளிவு அடைந்திருக்கிறது. உங்கள் மனம் தெளிவு அடைந்தமையால் அது தனது எதிர்கால நிகழ்வுகளை வெற்றிகரமாகச் செய்ய இயலும் என்பதை உணர்கிறது. இதனை உணர்த்தவே உங்கள் மனம், நீங்கள் ஏற்கனவே கேட்ட, பார்த்த ஆச்சரியம் நிறைந்த கதைகளின் பகுதிகளை இணைத்து உங்களிற்குக் கனவாகக் காட்டி இருக்கிறது, என்றேன்.

மனதின் ஒட்டுமொத்த நிலவரமே நமக்குக் கனவாக வருகிறது. கனவு நனவாவதாகப் பலர் சொல்லும் கதைகளும் இதன் பாற்பட்டவையே. காலைக் கனவு பலிக்கும் என்பதும் கூட இதனுடன் தொடர்புபட்டதுதான். இங்கு கூறப்பட்ட கருத்துக்களில் பல ஆன்மீக மர்மங்களுடன் தொடர்புபட்டவை. ஆனால், அவை எதிரியின் கைகளில் சிக்காமல் இருக்கும் நோக்குடனும் தீய எண்ணங்கள் கொண்டவர்களை, பயத்தினால் அடக்கி வைத்திருக்கும் நோக்குடனும் அவை கதைகள் கூறி, பல சடங்கு சம்பிரதாயங்களில் மறைத்து வைக்கப்பட்டன. ஆனால், இந்நாளில் அவை பயனின்றிப் போய்க்கொண்டு இருக்கின்றன.

தொடர்ந்து, இதிலிருந்து வேறுபட்டு மனங்களின் சங்கமத்துடன் தொடர்பான ஒரு கதையும் சொன்னார். தான் ஆதிசேடன்(பருந்து) வீட்டின் மேலே பறக்க அதனை வழிபட்ட போது, அன்று இரவு கனவில், ஒரு பருந்து மேலிருந்து இறங்கி முற்றத்து மணல் கும்பியில் இருந்த பாம்பினைப் பிடித்துச் சென்றது. மறுநாள் காலை அதே இடத்தில் ஒரு பருந்து இறங்கி மண்ணைக் கவ்விச் சென்றதாகச் சொன்னார். இது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.

"மனம்போல வாழ்க்கை"

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...