Tuesday, August 25, 2020

உடல் நலம் பேண என்ன செய்ய வேண்டும்? மெய்யுணர மெய்யுணர வேண்டும்

தினமும் உடற்பயிற்சி ஏன் அவசியமாகிறது?
உடலின் அனைத்துப் பாகங்களும் சிறப்புற வேலை செய்ய உடற்பயிற்சி மிக அவசியமாகும். ஆண்டவன் உங்களுக்கென்று தந்தவற்றை நீங்கள் பயன்படுத்தாவிடில், அது உங்களை விட்டு தொலைந்து போகிறது. வெள்ளையர் தமது உடலையும் புத்தி கூர்மையையும் விருத்தி செய்ய உடற்பயிற்சிகளைப் பயன்படுத்தினர். தமிழர்கள் யோகங்கள், வர்மங்கள் மற்றும் அப்பியாசங்கள் பலவற்றைப் பயன்படுத்தினர். அவை இப்போது அழிந்து போயின. உடல் உறுப்புகளை உடனடியாகத் துலக்குவதற்காக எமது மூட்டுக்களில் சக்தி எளிய வடிவில் சேமிக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்யாமல் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்யின் அது பல உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும். அதோடு, உயிரை உடலுடன் பிணைத்து வைத்திருப்பது உடல் உறுப்புகளேயாகும். #அவை மீட்டாமல் போகும் பட்சத்தில் அந்தப் பிணைப்புகள் தளர்வுறுகின்றன. அவ்வுறுப்புகளின் செயற்றிறன் குறைவடைகிறது.

மூளையினால் வேலை செய்பவர்களிற்கு, வேலையில் மூழ்கிய பிறகு இடுப்பிற்குக் கீழ்ப்பகுதி பயன்படுத்தப்படுவது குறைவு. உடலில் சுவாச வீதத்திற்கு ஏற்ப அனுசேபம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதற்காக சுவாச வீதத்தைக் குறைக்க இயலாது. உடல் உறுப்புகளிற்கான இரத்த ஓட்டம் குறைந்துவிடும். அது மட்டுமல்லாமல் அதிகம் துலக்கப்படும் உறுப்புதான் மேம்படுகிறது. இருந்த இடத்தில் இருந்து வேலை செய்தல் உடலுக்கு நல்லதல்ல. மூளையினால் வேலை செய்வதாகக் கூறிக்கொண்டு வாழ்க்கை ஒரு மூடிய கட்டடத்தினுள் வீணடிக்கப்படுகிறது.  தொன்று தொட்டே முளையினால் மட்டும் செய்யப்படும் வேலைகள் இருந்து கொண்டேதான் வந்துள்ளன. ஆனால், அதற்குப் பதிலாக அவர்கள் யோகா போன்ற ஆசனங்களைப் பின்பற்றி வாழ்ந்துள்ளனர். அவை உடலில் உருவாகும் மேலதிக அனுசேப சக்தியை வலுவிழக்கச் செய்ய உதவும். இவற்றைக் கோயில் கோபுரங்களில் சிற்பங்களிலும் செதுக்கிவைத்திருக்கின்றனர்.

இதயம் பெரிதாக வாழ வேண்டும்
சிறிய வட்டத்துக்குள் வாழக் கூடாது.  நமது உயிர் தலைக்குள் மட்டும் அடங்கிவிடக் கூடாது. #கண்களை மூடினால் நீங்கள் இந்த உடலுக்குள் இருப்பதை மறந்துவிட வேண்டும். எங்கும் நிறைந்தது போல உணர வேண்டும். அப்போது உடலின் மூலை முடுக்கெங்கும் இரத்தம் பாய்வதோடு உடற்சமநிலை மீழ்கிறது. #ஐம்புலன்களும் நிரம்பலுறும்போது அது தொடர்பான நியூரோன்கள் அருட்டப்படுவதால் அதுவரை அவை பெற்றுக்கொண்டவை உடனடியாக மீட்கக்கூடியதாக மாறும். உயிர் பிரிந்து சென்று மீண்டும் பிரபஞ்சத்தில் கலக்கும் சுதந்திரத்தையே நாடும். அதைக் கட்டி வைக்க ஐம்புலன்களை மீட்ட வேண்டும். #பிடித்திருந்தால் துன்பம் விட்டு விட்டால் முக்தி.

#உடலும் மனமும் எப்போது நிம்மதி அடைகிறது?
உடலிற்கு சுகம், மனதிற்கு நிம்மதி எப்போது கிட்டும் எனில், ஐம்புலன்களும் இனிமையாக மீட்டப்பட்டு ஓய்வடையும் போதாகும். காதிற்கு இனிய ஓசை, கண்ணிற்குக் குளிர்ச்சியான காட்சிகள், மூக்கிற்கு சுகந்தரும் மணங்கள், நாவிற்கினிய உணவுகள், மெய் காண் வருடல்கள் ஆகியன உச்சம் கண்டு ஓய்வடையின் அவை கிடைக்கப் பெறுகின்றன. அதோடு ஒருவரின்
உடலியல் செயல்பாடுகளைப் பொறுத்தே அவரின் அறிவு மற்றும் சிந்தனைத்திறன் இருக்கும். உம்: ஓடுதல், நடத்தல், கண் இமைத்தல் இன்னும் பல. ”ஓடும் வரையில் வெற்றி நமக்கு. ஓடுதல் நிறுத்தாதே!”

பழக்கம் தான் பெரியது
நினைவில் செயல்கள் எமது நடத்தையில் அதிக செல்வாக்குச் செலுத்துகிறது. நாம் எமது சிந்தனை செய்கையின்றி எத்தனையோ செயல்பாடுகள் செய்கிறோம். இவை ஐம்பொறியால் தகவல்கள் உணரப்பட்டவுடன் செயலாக்கம் பெறுகின்றன. பயிற்சியின் மூலம் எமது வேலைகளை விரைவாக முடிக்க இவைதான் காரணமாகின்றன. எமது பழக்கங்களே அவற்றைத் தீர்மானிக்கின்றன.   எனவே, புதிய பழக்கம் ஒன்றைக் கடைப்பிடிக்கத் தொடங்குகையில் கவனமாக இருக்க வேண்டும்.

உடற்சூடு தணிய என்ன செய்ய வேண்டும்?
உடலில் பிரதானமாக வெப்ப சக்தியும் மின் சக்தியுமே இணைவாகத் தொழிற்படுகிறது. உடல் சூடு அதிகரிப்பின் உடற் பித்தம் தலைக்கு ஏறுகிறது. இதனால் முடி உடிர்தல், மேகச் சூடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்படியும் ஒன்று உண்டு உடலால் வேலை செய்யாமல் மூளையால் வேலை செய்ய செய்ய மூளைக்கு அதிக சக்தி கிடைக்கப்பெறும். ஆனால், அதனை நெறிப்படுத்தவில்லையெனில் வினையாகிவிடும். இதனைத் தவிர்க்க தினமும் உடல் சோர்வுறும்வரை உடலாலே வேலை செய்ய வேண்டும். #வேட்டையாடப் பிறந்திட்டு மூச்சிரைக்க ஓடியாடித் திரியாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு தினமும் தவறாமல் சாப்பிடுவது உடற்சூட்டை மிகையாகக் கூட்டிவிடுகிறது.
That extra energy is your silent killer

உடலை இரண்டு பாகங்களாகப் பிரித்து நோக்கினால், தலை மற்றும் தலை தவிர்ந்த உடல். வெப்ப ஓட்டம் தலையிலிருந்து காலிற்கு இருக்க வேண்டும். #இதற்கு உடல்  தலையை விடக் குறைந்த வெப்ப நிலையில் இருக்க வேண்டும். இதற்கு முரணாகக் காணப்பட 2 காரணங்கள் இருக்கக்கூடும். உடலிலுள்ள மேலதிக சக்தி மற்றும் தலைப் பகுதிக்கான இரத்த ஓட்டம் குறைவாகக் காணப்படுதல்.
தீர்வு:
1. உடற்பயிற்சி அல்லது கடின வேலைகள் உடற் சூட்டைத் தணித்து சாதகமான விளைவை உருவாக்கும்.
உம்: துவிச்சக்கரவண்டி மற்றும் நீச்சல் செய்தல் நல்லது.
2. மேலதிக சக்தியைக் குறைவாகப் பேண விரதம் இருத்தல் (வாரத்தில் ஒருநாள் ஒருவேளை உணவு தவிர்த்தல்) அல்லது உடன் சக்தி வழங்கும் மாப்பொருள் நிறைந்த உணவுகளை வெகுவாகக் குறைத்து மரக்கறி வகைகளை உண்ணல்.
உம்: ஒரு அகப்பை சோறு ஒவ்வொரு அகப்பை கறிகள்.
காலையில் கூழ் குடித்தல் உடல்நலம்ம் மேம்படச் செய்கிறது.

மீட்டாமல் இருக்க உயிருக்கு உடல் மீதான பற்று அற்றுப்போய் இன்பம் மிகாமல் குறுகுகிறது.
#சாமகானப்பிரியன்
#இராவணன்
#சிவன்

# Your physical activities determine your mental activities. Never stop running.
# Unconscious processes may play a larger role in behavior than thought in our activities. Motor reactions are such reaction without cognition. Emotional reaction - very very dangerous if it goes wrong. Out habits influence.
# Energy(plasma) gets deposited near limbs for immediate acts based on your ATP rate. If you don't exercise, it will cause heath issues.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...