Saturday, February 6, 2021

சாதியும் அதன் நீதியும்

நன்றி: மனுதர்மம் சாதியும் நீதியும், நூல்.

சாதி என்று சொல்வதை விட சாதிசனம் என்று சொல்வது மிகப் பொருத்தமான சொல் ஆகும். மனிதர்கள் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல. ஒரு சிலர் தமது சுயநலத்துக்காக, அணி திரட்டிச் செய்யும் செயல்களால் ஏற்படும் வலி ஆயுள் வரை நீடிக்கிறது. இந்த உலகையும் உலக மக்களையும் வெறுக்கக் செய்கிறது.

ஈஸ்ட் என்று ஒரு பண்டம் கேக் செய்வதற்கு பேக்கரியில் வாங்கிப் பயன்படுத்தி இருப்பீர்கள். அது செயலற்ற நிலையில் பேணப்படும் ஒரு வகை கிருமி (பக்ரீரியா) என்பதும் அதனைச் செயற்படுத்த சுடுநீர் சேர்க்க வேண்டும் என்பதும் பயன்படுத்தும் ஒரு சில பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். பக்ரீரியாக்களில் உடலில் சில பகுதிகளில் தங்கி நன்மை செய்பவையும் உண்டு; தீங்கிளைப்பவையும் உண்டு.

ஆயுதத் தீவிரவாதம் முடிந்து நுண் உயிரியல் தீவரவாதம் தலை தூக்கும் நேரம் இது. யீஸ்ட் போலவே வேறு கிருமிகளையும் உறங்கு நிலைப்படுத்தி பொதி செய்து இரகசியமாக கஞ்சா விநியோகிப்பது போல விநியோகிக்கிறார்கள் போலும். அவற்றைக் கொள்வனவு செய்து சுவாசிக்கும் காற்று, பருகும் நீர், உண்ணும் உணவு என ஒன்று கூட விடாமல் அனைத்திலும் கலந்து  மனிதர்கள் செய்யும் நரித்தனம் கொஞ்ச நஞ்சமாக இல்லை. இவை எல்லாம் தானாக நிகழ்பவையாகவே தோன்றும். காரணம் அந்த வகைக் கிருமிகள் அநேக இடங்களில் இருப்பவை தான். ஆனால், அவை அற்ப அளவிலேயே காணப்படுவதால் எளிதில் நம்மைத் தாக்கி விட முடியாது. அதனை அழிக்கும் ஆற்றல் உடலிற்கு ஏற்கனவே உண்டு. கணிசமான அளவு இருந்தால் மட்டுமே உடலில் நோயெதிர்ப்பு சக்தியைத் தாண்ட இயலும்.

இன்று இனம் தெரியாத நோய்கள் பல படையெடுக்கின்றன. கூட நின்று உண்டு துரோகம் செய்பவர்கள் மத்தியில் இப்படி ஒரு நிலை நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அவர்களை நரி என்றால் தப்பில்லை.

எனக்குத் தரம் 5 இல் கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவர், இனம் காண முடியாத ஒரு சிறுநீர் சார் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கேள்வியுற்றேன். அவர் சாதிக் கலப்புத் திருமணம் செய்தவர் தான். அவருக்கும் இப்படி ஒரு வகைக் கிருமியின் வேலைதான் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆதாரம் இல்லாத மரண தண்டனைக்கு மேலான தண்டனை ஒன்று இருக்குமானால் அது இந்த உலகில் பல வலிகளைத் தாங்கிக் கொண்டு வாழ வேண்டிய நிலையே ஆகும். உயிரிற்கு அரிதாகவே ஆபத்து விளைவிக்கும் எனினும் திரும்ப திரும்ப வந்து நமக்கு சகஜமான வாழ்வில் சிக்கல்கள் கொடுக்கும்.

இவை சாதிப் பழிகளை மட்டும் தீர்க்கப் பயன்படுத்தப்படும், புதிய முறை ஒன்று அல்ல. பல அமைப்புகளால் ஏற்கனவே கையாளப்பட்ட முறை தான். அதற்கு தீர்வு ஒன்றும் உண்டு. புற ஊதாக் கதிர்மூலமான கிருமித் தீர்வுகள் செய்வதற்கென வளர்ச்சியடைந்த பிரதேசங்களில் அமைப்புகள் உண்டு. காரணம், இது ஒரு முறை வந்தால் அப்படியே சென்று விடுவது அல்ல. நாம் வாழும் உறைவிடம், பயன்படுத்தும் உடைகள், உபகரணங்கள் என பல விடயங்களில் அதன் தாக்கம் தேங்கி நிலைத்து நிற்கும். நீரில் கலக்கப்பட்டிருந்தால் ஒரு பாத்திரத்தில் எடுத்த நீரில் ஒரு நாளின் பின், ஆடை போன்ற ஒரு படை மிதப்பதை அவதானிக்க முடியும்.
இதன் உச்சத்தில் நாம் இன்று கொரோனா காண்கின்றொம்.

மனிதன் கீழ்த்தனமான நடவடிக்கைகள் அத்துடன் முடிந்து போய் விடவில்லை. வளியில் எளிதாகப் பற்றும் சில பதார்த்தங்களும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பொஸ்பரஸ் உரங்கள். அவற்றை வளி, நீர், உணவில் கலந்த பிறகு அது இரத்ததில் ஊறி நிற்கும். பின்னர் ஒலி மற்றும் புலன்களில் ஏனையவற்றையும் துலக்குவதன் மூலம் அதனை உடலில் அந்ததந்த இடங்களிற்கு வரவழைத்துத் துன்புறுத்துகிறார்கள். அது மூச்சு அதிகமாயின் உடலினுள் தகனம் அடைந்து இன்னல்களை விளைவிக்கிறது.

இப்போது இதைப் பதிவிடும்போது கூட, இவற்றை அறிந்து கொண்டால் கவனமாக நடந்து கொள்வர் என நினைக்கத் தோன்றுவதை விட தாமும் அதற்குப் பழி தீர்க்கவென்று இவற்றையும் இன்னும் பல முறைகளையும் பயன்படுத்துவீர்களோ என்ற அச்சமே அதிகம் உள்ளது.

ஜெயம்ரவி நடித்த கோமாளி பட எழுத்தாளருக்கு...
இங்கே எங்கே மனிதம் வாழ்கிறது.

அலாப்பல்கள் தொடரும்...

யோக முத்திரைகள்

முத்திரைகள் தொடுகைப் புலனைகளைப் பற்றியதே! எல்லாப் புலன்களும் மூளையில் தூண்டல்களை ஏற்படுத்தும். எனினும் ஏனைய புலன்களை விட இலகுவாக எவரையும் துன்புறுத்தாமல் அமைந்தது தொடுகைப் புலன் ஆகும். அது துணைக் கொண்டு வேண்டிய இடங்களைத் தூண்டி நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ இயலும். இந்து மதமும் பௌத்த மதமும் இதன்பால் ஒன்றுபடுகின்றன.

நகங்களில் நரம்புகள் ஒன்று கூடுகின்றன. உள் உறுப்புக்களின் நரம்புகள் முறையே ஒவ்வொரு விரல்களிலும் முடிவதாக ஒரு கருத்து உள்ளது. மேலதிக சுவாசமானது உள்ளே அதீத சக்தியைப் பிறப்பித்துப் பல சிக்கல்களை உருவாக்க வல்லது. அப்படி சுவாசத்திலிருந்து தொடுப்பற்ற வளிநிரல்களை பாதுகாப்பாக எரித்து முடிப்பதுவும் முத்திரைகளின் ஒரு நோக்கம் ஆகும்.

சின் முத்திரை
சின் முத்திரையின் நோக்கம் இதயத் துடிப்பின் சந்தத்தை நமது மூளையின் முக்கிய பகுதிக்குத் திருப்பி விட்டு அதனை உயிர்ப்புறச் செய்வதாகும். அதற்கு மின் சைககளும் பயன்படுத்த முடியும். அதன் மீடிறனை அதிகரிப்பதன் மூலம் உயிர்களைத் துன்புறுத்தவும் இயலும். தியானத்தின்போதும் யோகத்தின்போதும் இம்முத்திரை பிடிக்கப்படும்.

கைகளைக் கூப்பி வணங்குவது ஏன்?
ஒருவரைக் காணும்போது கைகளைக் கூப்பி ஏன் வணங்குகின்றோம்! கைகள் கூப்பிய நிலை உயர் சக்தி நிலை. கைகளைக் கூப்பியவாறு செய்யும் செயல் மனமார செய்ததாகிறது. அது போலியானதாக இருப்பது அரிது. விரும்பியோ விரும்பாமலோ அவை நிதர்சனமாகும். இது ஐம்புலன்களில் தொடுகையின் செய்கை ஆகும். இதன் அடிப்படையிலேயே சத்தியம் செய்தல் வழக்காகி இருக்கக்கூடும்.

கல்லைக் கரம் கூப்பி வணங்குவது ஏன்?

இது போல கரம் கூப்பி இறை உரு ஒன்றைத் தரிசிக்கும்போது அந்த உரு நம்முள் பிரதிபலிக்கிறது. இதனால் உடலினுள் பல நேயமான செயற்பாடுகள் நிகழ்கின்றன. இவை ஒரு குத்து மதிப்பான ஆய்வின் பெயரில் நமது முன்னோர்கள் வகுத்தவையே தவிர அவை முற்றிலும் சிறந்தவை என்று கூறிவிட முடியாது. நாம் அங்கேயே நின்று கொண்டிருந்தால் நமது சமூகம், தாழ்ந்து போவதையும் ஏனைய விஞ்ஞானத்தில் உயர்ந்த சமூகத்தினரில் இருந்து பின் தங்குவதோடு பலவாறு ஏமாற்றப்படும்.

உடலில் இருக்கும் தூங்கல்களில் கால்களும் கைகளுமே பெரியவை. அவற்றை கூப்பும் போது மிகப் பெரிய தூண்டல் மாற்றம் ஒன்றை மூளை உணர்கிறது. எனவே அதன்போது மனதுள் எண்ணுபவை நிலை பெறும். வலது கைகளால் அதிகமாக வேலை செய்பவர்கள் கை கால் கூப்பி வழிபடும்போது வலது புறத்தை அதிகமாக நிறைத்து வழிபட வேண்டும்.

திருஞானசம்பந்தர் இதனையே கை ”கால் கூப்பித் தொழீர்...” என்று பாடியுள்ளார். இவர் ஐம்புலன்களையும் அதிகம் மீட்டுமாறு வலியுறுத்துகின்றார். நமசிவாய என்ற 5 எழுத்தும் ஐம்புலன்களைக் குறிக்கக் கூடும். இடையில் உண்மைக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி அனைத்தையும் மாற்றி அமைத்து விட்டது.

காயப்பட்டால் வலி ஏன் வருகிறது?
உணர்ச்சி இருந்தபடியால்தான் வலி வருகிறது.
சதை பிண்டத்தில் எப்படி வலி?
தொடர்ந்து கிடைத்த ஒன்று இல்லாமல் போகிறது அல்லது மிகையாகிவிட்டது.
இது போன்ற விளைவுகளை ஆராய்ந்தே முத்திரைகளும் யோகமும் வளர்ந்தன.

மண் சூடாகும் வரை உரம் போடுதல் வேண்டும். அது போல உடலில் சூடு இருந்தாலேயே அது உயிர்ப்புடன் இருப்பதாகப் பொருள். இள வயதில் இது சற்று அதிகமாகவே இருப்பதோடு அது அலை பாய்ந்து திரியும். எனினும் அதிக சூடு அல்லது மாறுபடுகின்ற சூடு நல்லதல்ல. கண நேரத்தில் மணி நேரப் பயணம் செய்பவன் யோகி ஆவான். அதாவது அதனை அப்படி அவன் உணர்ந்து கொள்ள அவனது உடலுக்கும்  மனதுக்கும் வேகம் வேண்டும்.  அதனை முத்திரைகள் அவனுக்கு வழங்கும். அத்தோடு, ”இடையறாத ஓசையில் அமைதியையும் அமைதியில் இடையறாத வேலையும் கண்டு கொள்ளக் கூடியவனே சிறந்த யோகி” என விவேகானந்தர் சொகின்றார்.

உடலில் ஓரிடத்தில் வலி இருந்தால் ஏனைய இடங்கள் அதிகம் ஊழியம் செய்யப்படுவது இல்லை. ”ஆட்டி விட்டு விட்டால் ஏறும்”. அதாவது உடலின் எந்த உறுப்பையும் துலக்கி விட்டு ஓய்வாக்கினால் அந்த உறுப்பு இரத்ததால் நிறைக்கப்படும்.

தேடல் தொடரும்...
நன்றி!

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...