Monday, July 20, 2020

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் - கவிதை

தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பற்றிய கவிதை.
பிறப்பிடம்: நவாலி, யாழ்ப்பாணம்
நன்றி: IBCதமிழ்.com
தென்னுலகு தமிழ் மேவிய மூவேந்தர் வழி
இப் பொன்னாட்டிலும் பொன் சுரக்கும்
முத்தமிழ் ஒளி கூட்டிய
தங்கத் தாத்தா சோமசுந்தரம்.

ஊர்த் தோப்பில் தனியாக சுகித்திருக்கிறேன்
இதய அரங்கினிலே நாமிருவர்
வெண் மேலாடை
வெண் வேட்டி
தோழில் மஞ்சள் சால்வை
நீள்பட்டை தரி ஏறு நெற்றி
நரை மீசை தாடி கொண்ட
சுந்தரத் தாத்தாவுடன் செந்தமிழ் பழகுகிறேன்
அத்தோப்பு நாவல் தோப்பு;
கவி பேசுகிறார் சோமசுந்தரம்.

தேன் தமிழ் கொண்டு - நீ
செதுக்கிய சிற்பங்கள் பொன்னா!
பேரா! தங்கம்.. தாத்தா சால்வை நிறமல்ல,
தாத்தாக்குத் தமிழ் அளித்த மிகை.

78 இல் நீர் அவதரிக்க
செந்தமிழும் அறியாது உன் புலமை
முத்தமிழ் தெவிட்ட - நீர்
ஊட்டிய கவியின் பெருமை
பிறவியில் எய்தியது என்று
சொல்லப் பிரியமில்லை
தாயிடம் கொண்டதில் கொஞ்சமாய்
கொடுத்ததாய்க் கொள்கிறேன்

வரகவி நீயோ!
முருகு கவியில் - பல
கருவறைகள் காண்கிறாய்!
நாமகள் நாமம் யாவும் பாவேற்றுகிறாய்!
நம்பிக்கை வாழ்க்கையின் பிடியாம்,
தாத்தாக்குத் தமிழ் வேந்தன் கழல்
வாழ்வது ஜீவ முக்தி.

அந்தாதி, கலம்பகம், வெண்பா பதிகமும்
பல இலக்கியமும் தந்தீர்!
உயிரிளங்குமரன் எனும் இலக்கியக் காட்சி வரைந்து
புலவர் பட்டமும் பெற்று விட்டீரே!
உள்ளத்தில் தமிழ் ஊற்றெடுத்தால்
பாட்டுக்குப் பஞ்சமும் உண்டோ!
தமிழின் பொருள் இனிமையன்றோ!

தமிழ் மூச்சு எனினும் - வெள்ளையன்
மொழியிலும் சளைக்காத உபாத்தியாயன் நீ!
247 தமிழுக்கு 26 ஆங்கிலம் பேரிலகு!
மொழிகள் பல அறிய நாம் அழவும்
எல்லை விரியுமென நீங்கள் அறிவீரே!

இளமையில் கொடுமையாம் வறுமை,
அதிலும் தளராத தமிழ்ப்பற்று உனது!
வறுமை உடலுக்கல்லவோ!
நின் உயிர் தமிழெனும் இனிமையில் வாழுமே!

கவிதை நாடகம்...
கருப்பொருள் என்னவோ!
நாடகமாய்ப் பாலர் நடிக்கும்
இப்புலவன் கவிகள் காண் புகழ்!
கத்தரி காய்கையில் காவலில் சேவகன் - என
பொம்மைக்கும் உயிர் தந்து
சித்தரிக்கும் உன்பா.

உன் சிறுவர் செந்தமிழ் பாலர் பாட்டு
தெவிட்டாத தேனாக - நீ
பாடிய பொய் மட்டும் ஏனோ
ஆடிகளில் சினமூட்டும்
இது மறைவில் பாட்டில் இனிமை
இல்லை என்கிறதா
இல்லை விடுதலை இல்லை!
53 இல் நின் உடல் மரிக்க,
விடுதலை கொண்டது தமிழ்
கவிக்கோடி தன் கடலை
நிறைக்காமல் மாண்டானே என்று

ஏழ் கடல் ஐநிலம் மோதி மீழ
ச(ஜ)னிக்கும் கானம் தோற்கும் உன்கவி
வாழ்க தங்கம்.. தாத்தா என்றும் தமிழுடன்..!

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...