எம்மொழியும் சிந்தையுறும் கவி நம் செம்மொழியில்:
"வானிலே நாம் வீழ்ந்தால்..."
மழைத் துளிகள் விளையும் கருநீல முகில்காடு - முத்துச் சிதறல்கள்.
ஆங்கே பலவண்ணத்தில் தோன்றும் அரைநாண்கள் - வானம் வளைந்த போதுகள்.
தாரகைகள் பூத்த வெறுமை நிறத்தடாகம் - தங்க தெறிப்புகள்.
அங்கே கதிரோன் ஒளிநிழலாய் நிலவு - தங்கப் பதக்கம்.
பஞ்சுவிதைகள் திரணைகளாக வெடித்துலவும் நீல வெளி - மனம் கொள்ளும் பள்ளியறை.
அங்கு நிதம் உருண்டுருண்டு உறங்கும் ரசத் திவளை - பகல் அவன்.
பிறப்பிறப்பின் சாட்சிகள், காலை மாலை - செம்மேனியில் வெண்ணாரைத் துளை.
கார்மேகக் குவியலைப் பிளந்திறங்கும் மின்னல்கள் - எரிவான் வெடிப்பு.
அம் மின்னல்கள் உயிர் படைக்கும் வான் விம்பம் - நீல்கடல் மாயம்.
இம்மாய உலகில் யாவும் மாயமே...
வீழ்வோமா மெய் வானிலே!
மனமெனும் உடல் தரித்து...
வானிலே நாம் வீழ்ந்தால்...
- கீதன்

No comments:
Post a Comment