Sunday, January 31, 2021

நினைத்தபோது நீ வர வேண்டும் - வேலும் மயிலும் - குண்டலிலினி எழுகை


வேலும் மயிலும் ஞானத்தின் அடையாளங்கள் ஆகும்.

மூலாதாரத்தில் கணபதியும் சிரசினில் முருகனும் இருத்தி வழிபடுவது வழக்கமாகும். மூலாதாரம் எனப்படுவது முள்ளந்தண்டின் அடிப்பகுதியில், குரங்குகளிற்கு வால் காணப்படும் இடம் ஆகும். அதாவது குண்டலினி எனப்படும் வளித் திரளையை (குண்டலினி) மூலாதாரத்தில் பேணுவதே வழமையாகும். முதல் வணக்கத்துக்குரியவர் கணபதி ஆவார். ஆனால் சிந்திக்கும்போது உடனே அது மேலே முனைப்படைந்து தலையை அடைய வேண்டும்.

சிந்திக்கும் போது அதற்குத் தேவையான சக்தி, புஜம் கொண்டு கொடும் வேலை செய்யும் போது தேவையான சக்திக்கு இணையானது. அதன் பிறப்பாக்கத்திற்கு மூச்சு அதிகம் தேவைப்படுவதோடு மூளைக்கு அருகிலேயே அது நடைபெற வேண்டும். அதற்கு குண்டலினி எழுகை என்று சித்தர்கள் சொல்வது நிகழ வேண்டும். ஆனால், செயற்பாடு எதுவும் இல்லாதபோது மூச்சு குறைந்து, குண்டலினி மீண்டும் குளிர்ச்சியடைந்து மூலாதாரத்தை அடைய வேண்டியது கட்டாயம் ஆகும். அல்லாத பட்சத்தில் உடல் அளவிலும் மனதளவிலும் பல சீர்கேடுகள் நிகழும் என்பது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டியது.

ஞானத்தின் நிறம் கருநீலம் என ஞானி ஒருவர் குறிப்பிடுகின்றார். அதாவது மனம் தெளிவடைந்து ஞானம் உச்சம் பெறும்போது கண்களை மூடினால் மயில் நீல நிறத்தில் ஆங்கே ஒளி தோன்றும். அப்போது மூளையானது உடல் கடந்து உச்ச மீடிறனில் செயற்படத் தொடங்குகிறது என்று பொருள். ஆகவே நான் நினைக்கும்போது முருகன் வேல் கொண்டு நீல மயில் ஏறி வர வேண்டும் என்பதே வேல் மயில் வழிபாட்டின் நோக்கம் ஆகும். ”வேலும் மயிலும்” என்று பெயரிட்டுக் கொள்ளும் வழக்கமும் இருந்தது.

Sunday, January 24, 2021

மஹாபாரதம் உண்மைக் கதையா? புனை கதையா? மஹாபாரதமும் 7 சக்கரங்களிலான சித்து மருத்துவமும்

மஹாபாரதம் கதையா, வரலாறா? என்பதை விட்டு விடுவோம். ஆனால், மஹாபாரதம் என்பது வெறும் இதிகாசம் மட்டுமல்ல. இது ஒரு மருத்துவமுறை யோகம் ஆகும். அதனை ஒழித்து மறைத்து இந்த இதிகாசம் எழுதப்பட்டுள்ளது. இங்கே கண்ணன் என்பவன் நமது மனம் ஆவான். மனமே இறைவன் உறையும் இடம் மற்றும் வழிபாட்டின் பிரதானம் ஆகும். விஷ்ணுவை முதல் கடவுளாக வழிபடுபவர் மஹாபாரதத்தை எழுதியமையால் விஷ்ணுவை கண்ணனாக அமைத்து எழுதியுள்ளார்.

உடலில் சித்தர்கள் கூறும் 7 சூட்சும சக்கரங்கரங்களும் பாண்டவர்களும் + கர்ணன்

  1. குந்தி - மூலாதாரம்
  2. கர்ணன் - சுவாதிஷ்டானம் - இடை - அம்பு
  3. பீமன் - மணிபூரகம் - வயிறு - கதை
  4. அர்ஜுனன் - அனாஹதம் - மார்பு - அம்பு
  5. தர்மர் / யுதிஷ்டர் - விசுக்தினி - கண்டம் - ஈட்டி
  6. நகுலன் - ஆக்னா - நெற்றி - வாள்
  7. சகாதேவன் - சகஸ்ரம் - உச்சி - அங்குசம்.

7 சக்கரங்களும் அவற்றை இயக்கின் உடல் அரோக்கியம் பெறும். கண்ணன் வைத்திருக்கும் குழலில் உள்ள துளைகளும் இதனையே குறிக்கின்றன. வில்லேந்திய அர்ஜுனனின் சாரதி என்பதால் கண்ணனுக்கு பார்த்தசாரதி என்று பெயர் உண்டு. ”சுவாச வீச்சை வைத்து வைத்து அர்ஜுனன் மனம் அறிந்து வண்டியைச் செலுத்துபவன் கண்ணன்” என்று மஹாபாரதத்தில் கூறப்படுகிறது. இந்த 7 சூட்சும சக்கரங்கள் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகக் காண்போம்.

குந்தி மூலாதாரத்தில் உள்ள முதல் சக்கரம்.
குந்தியின் புதல்வர்கள் நால்வர்:

  • கண்டத்தில் யுதிஷ்டன்
  • வயிற்றில் பீமன்
  • தோளில் அர்ஜுனன்
  • இடையில் கர்ணன், பாண்டுவின் திருமணத்திற்கு முன் பிறந்தவன்.

மாத்திரையின் புதல்வர்கள் இருவர். இவர்கள் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்கள்.

  • புருவத்தில் நகுலன் - தொடா வர்மங்கள்
  • சஹஸ்ராரத்தில் சகாதேவன் - எதிர்காலம் அறியும் ஆற்றல்.

மாத்திரை - மிகச்சுருக்கமான இடம், கண்ணிமைக்கும் காலம், பாக்கியம்(அதிஷ்டம்)

திரௌபதை, பாண்டவர் மனைவி: நாடிகள் (இடை, பிங்கலை)
நாடிகளைப் பெண்களாக உருவமைப்பது சித்தர்கள் வழக்கமே! உதாரணமாக திருமூலர் நாடி மற்றும் நாளங்களை கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்... என்று திருமந்திரத்திலே குறிப்பிடுகின்றார்.

துரியோதனன் எனப்படுவது கட்டறுந்து அலையும் சுவாச அங்குலங்கள் மற்றும் தொடையில் ஓடாது தேங்கிய  இரத்தம் ஆகும். இவன் இடையிலுள்ள கர்ணனின் மித்திரன் ஆவான். மனிதனுக்கு உடலிலேயே பிணிகள் ஏற்படுகின்றன. உடலின் 100 தசைப் துண்டங்களையும் அவற்றில் தேங்கிய சுவாச அங்குலங்களையும் திருதராட்சனின் 100 புதல்வர்களாக வடிவமைத்து இருக்கின்றனர்.

இது போல ஏனைய பாத்திரங்களும் கீழ்க் கண்டவாறு உறுப்புகளாகவே இருக்க வேண்டும். ஏனையவை எனது புத்திக்கு எட்டவில்லை.

  • நாசி - அசுவத்தாமன்
  • நாக்கு - துரோணர்
  • அஸ்தினாபுரம் - வாய்
  • கடோற்கயன் (பீமன் மகன்) - தொப்பை, இவனைக் கர்ணன் சக்தி அஸ்திரம் கொண்டு வதைப்பான்.
  • பீஸ்மர் - இரப்பை
  • திருதராட்சன் - உள் மூச்சு - உயிர்வாயு / பிராணனும் அதன் ஆசைகளும் (பிரேத ஆத்மா) + வலது கண்ணுக்குரிய நாடி என்றும் பொருள் உண்டு (தச நாடிகள்).
  • காந்தாரி - வெளி மூச்சு - கரியமில வாயு + இடது கண்ணுக்குரிய நாடி என்றும் பொருள் உண்டு.

பார்த்திபன் (அர்ஜுனன்) இலக்கு வைப்பதில் கை தேர்ந்தவன். பார்ப்பதன் மூலம் இலக்கு முடிவு செய்யப்படுகிறது. ஆனால் அது இரு புஜங்கள் கொண்டே அது அடையப்படும்.

பார்த்தசாரதி (கண்ணன்) அந்த இலக்குகளைச் செலுத்துபவன். புறத்தில் மட்டுமல்ல பார்வையால் அகத்திலும் அக உடலிலும் மாற்றங்களை உண்டாக்கும் சிறப்பை உடையவன். இதனால் தான் அவனுக்குக் கண்ணன் என்றும் பெயர் உண்டு. 

கண்ணன் மகாபாரதத்தில் மனதைக் குறிக்கின்றான்.
அனைவருக்கும் மனமாக இருந்து வழி நடத்துபவன். இதனை அவனே கீதையில் தெளிவாகச் சொல்கின்றான்.

கண்ணன் ஒரு தனிப்பொருள் இல்லை. நமக்கு மேலே நம்முள் நாமாக இருந்து நம்மை வழி நடத்துபவன். நாம் அவன் இடத்தை அடைந்து சிந்தித்தால் நல் மார்க்கம் கிட்டும். அதாவது அவனது ஞானத்தையும் அவன் நின்றதாகச் சொல்லப்படும் நெறியினையும் மேல் நிறுத்தி கண்ணனாக நின்று முடிவுகளை எடுக்க வேண்டும்.
உதாரணமாகக் கீதையில் நான் என்று கண்ணன் கூறுபவற்றை, நீங்கள் உங்கள் ஆசை, சுயநலம், ஆணவம் யாவும் துறந்து சற்று மேலே சென்று, நீங்கள் கூறுவது போல "நான் ..." என்று கூறிப் பாருங்கள்... அனைத்தும் புலனாகும்.

அர்ஜுனன் உடலிலுள்ள 7 சூட்சுமச் சக்கரங்களில் அநாகதச் சக்கரத்தைக் குறிக்கின்றான். நாங்கள் கண்களால் சிறந்த அகச் சூழலை உருவாக்க முடியும். ஆரோக்கியத்தையும் மனத் தெளிவையும் ஏற்படுத்த முடியும்.

கர்ணன் என்றால் சிறந்த காதுடையவன். கர்ணன் மஹாபாரதத்தில் அந்தச் சக்கரங்களில் சுவாதிஷ்டானத்தைக் குறிக்கின்றான். சுவாதிஷ்டானம் கவசம் மற்றும் குண்டலத்தை வழங்கும். அதாவது கட்டுடல் (6 packs) மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட கூர்மையான கேட்கும் திறன் கிட்டும். கண்ணன் கர்ணனுக்கு துரோகம் செய்கின்றான். கண் இருப்பதால் காது என்னும் புலன் பூரணமாகப் பயன்படுத்தப்படுவது இல்லை.
கண், காது இரு புலன்கள். 

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகாபாரதப் போர் நிகழும். இளம் பருவத்தில் வளர்ச்சியின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் மஹாபாரதம் அனைவர் வாழ்விலும் நிகழ்கிறது. சரியான உணவுமுறை இல்லாத போதும் போதிய உடற்பயிற்சி இல்லாத போதும் மீண்டும் மஹாபாரதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நன்றி!
தேடல் தொடரும்...

இற்றைப்படுத்தியது (3): 06 மாசி 2121
இற்றைப்படுத்தியது (4): 25 பங்குனி 2121

Wednesday, January 13, 2021

சூரியன் திருநாள்

thanks: oneindia.com
சூரியன் இல்லாவிடில் விடியாது, இருளாது, காற்றடிக்காது, கடலலை இருக்காது, உண்ண உணவிருக்காது, இவ்வுலகில் உயிர்களே இருக்காது.

சூரியன் தன்னை வணங்குபவர்களையும் வெறுப்பவர்களையும் சமமாக ரட்சிக்கிறான்.

இவ்வுலகில் படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் காரண கர்த்தா அவர்தான்.

சூரியன் நிலை குலைந்து போனால் அனைத்தும் ஸ்தம்பித்து விடுகிறது.
ஈரேழு உலகங்களுக்கும் அவர்தான் கடவுள்.

திருமூலர் திருமந்திரத்தில் சிவனைச் சூரியன் எனக் குறிப்பிடுகின்றார்.

ஒரு கடவுளுக்கான இலட்சணங்களில் எதுவும் குறைந்தில்லை.


thanks: oneindia.com

மனதில் ஒரு தீர்க்கமான நோக்கத்துடன் காலையில் சூரியனை தரிசித்தால் ஒரு மாயம் நிகழும்.

#அடி முடி தேடிய கதை
உயிரின் இலக்கணம் சூரியன் ஆகும். உடலின் இலக்கணம் பூமி ஆகும்.

உயிரிக்குப் புதுமை அளிப்பது சூரியன் ஆகும்.
உயிருக்குப் பழமை புகட்டுவது பூமி ஆகும்.

புவி வாழ் உயிர்களிற்கு ஆதி பூமி ஆகவும் அந்தம் சூரியன் ஆகவும் இருக்கிறது.

எமது உயிர் சூரியனுக்கு ஒப்பானதும் உடல் புவிக்கு ஒப்பானதும் ஆகும்.
உயிர் நிலைக்க சுவாசம் அவசியம் ஆகும். உடல் நிலைக்க இதயத் துடிப்பு அவசியம் ஆகும்.
"அண்டத்தில் இருப்பதைப் பிண்டத்தில் காண்பாய்" என்பது முன்னோர் வாக்கு.

#சத்துவ குணம்
சூரியன் போல நீங்கள் ஒளி வீசிக் கொண்டு இருந்தால்,
சூரியனைத் தனது கையால் மறைப்பவர் ஒளியை இழந்து இருளில் தவிப்பதுபோல,
உங்களை ஏமாற்றுபவர்கள் தாமே நஷ்டம் அடைவர்.
நல்லவர்களை ஏமாற்றுவதால் அவர்கள் அடையும் நஷ்டத்தை விட அதிக நஷ்டத்தை இந்தப் புவி சந்திக்க நேரிடும்.

நெருப்பு சுடும் என நெருப்பினை நீங்கின் விரைவில் பனியும் சுடத் துவங்கும்.
உயிர்கள் பூமியை நீங்கினாலும் சூரியன் தீண்ட மறுத்தாலும் அதை விடுத்து ஒரு பெருவாழ்வு ஒருபோதும் கிட்டாது.

சூரியன் போல நீ சுடர் விட்டுக் கொண்டு இருந்தால் நட்சத்திரங்கள் அடங்கித்தான் போக வேண்டும்.

#தாமத குணம்
ஆனால் தாமத குணம் படைத்தவர்களோ தாமும் துன்புற்று அது நிமித்தம் பிறரையும் துன்புறுத்துவர்.

உடலிற்கு ஆதாரம் உயிர் என்பதுபோல
இதயத் துடிப்பிற்கு ஆதாரம் சுவாசம் என்பதுபோல
புவிக்கு ஆதாரமும் உலகின் முதலாவது அதிசயமும் சூரியன் ஆகும்.
எல்லா உயிர்களுக்கும் ஆதரமாக விளங்கும் சூரியனைப் போற்றி
இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

thanks: vegrecipesofindia.com

Sunday, January 10, 2021

”சிவாய நம” எனும் பஞ்சாச்சரத்தின் பொருள்

இற்றைப்படுத்தியது (2): 22 தை 2021
இற்றைப்படுத்தியது (3): 08 ஆவ 2021

சிவன் என்பதன் பொருள் யாது?
அது ஒரு இடுகுறிப் பெயர் ஆகும். எல்லாவற்றிற்கும் மேலான ஒரு பொருளை சிவம் எனப் பெயரிட்டது சைவ சமயம். ஸ்வ என்பது மூச்சுவிடும் போதான காற்றின் ஓசை ஆகும்.  சுவாசமே உயிரின் ஆதாரம் ஆகும். அதனால் ”ஸ்வ” (சிவ) என்றால் உயிரின் ஆதாரம் என்று பொருள். வடமொழியில் “நம” என்றால் தமிழில் போற்றி என்று பொருள். அந்த உயிரின் ஆதாரமான மூச்சை வணங்குகிறேன் என்று பொருள் வரும். அதோடு சிவனுக்கு என்று சில விசேட இயல்புகள் உண்டு.

சிவ நாம ஜெபம் என்றால் என்ன?
முதலில் அவனை அறிதல். அறிந்த பின் அவனுள் உறைதல். அதாவது அவனாகவே வீற்றிருத்தல். அப்போது சிவ குணங்கள் எம்மிலும் நிறையும்.

இதன் பயன் யாது? சிவனருட் பயன் என்ன?
இதனால் அருள் என்று ஒன்றும் கிட்டுவது இல்லை. நமக்குள்ளே ஒரு மாற்றம், நம் உள்ளத்தில் ஒரு மேன்மை ஏற்படுகிறது. உள்ளத்தில் மேன்மை ஏற்பட வாழ்க்கையிலும் மேன்மை ஏற்படும். அதனால் அருளை நீங்களே உங்களுக்கு வழங்க வேண்டும். ஏனெனில் சிவன் பெயரை ஜெபித்தலின் பொருள் சிவமாக வீற்றிருத்தல் ஆயிற்றே! இப்போது நீங்கள் சிவன்! இதன் உச்சத்தில் சிவனடியார்கள் எங்கும் சிவத்தினைக் காண்பர். அனைவரும் சிவனின் குணங்களுடன் காட்சியளிப்பர்.
மந்திர ஜெபத்தின் இதர நன்மைகள் பற்றி அறிய மனதை நெறிப்படுத்தும் மந்திர ஜெபமாலை என்னும் பதிவைப் படிக்குக.

சிவனது உயர் குணங்களில் அன்பு மிக முக்கியமானது.
" அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே "
                                   திருமூலர் திருமந்திரம் - 270/3047. 

ஒருவன் தர்மத்தை ஒழுக்க நெறிகளை அறிந்திருந்தாலும் அதைக் கடைப்பிடிப்பது சுலபமான காரியம் அல்ல. அதற்கு மனமும் உடலும் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு அவனைப் போற்றி, அவனை உணர்ந்து, அவன் அருள் பெற வேண்டும். இதனையே "அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி..." என்று சிவ புராணத்தில் சொல்லப்படுகிறது.

ஔவையாரின் விளக்கம்
வடமொழியில் உள்ள சிவாய நம என்னும் பஞ்சாட்சரத்திற்கு தமிழ்ப் புலவர் ஔவையாரின் விளக்கமும் ஒன்று நல்வழியில் உண்டு. அதனை அப்படியே மறுப்பு ஏதும் இன்றி ஏற்றுக் கொள்வோருக்கு நன்மை உண்டாகிறது; வாழ்வில் சந்தேகம் ஒழிகிறது.

”சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.”
                                                நல்வழி - 15

பொருள்: சிவாய நம என்னும் சிந்தனையில் ஆழ்ந்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை. மகிழ்வாக வாழ்வதற்கு உரிய தந்திர மந்திரம் இதுதான். இதுவே நமது அறிவு கண்ட மதியாக இருக்கவேண்டும். அல்லாத அறிவின் மதிப்பீடு எல்லாம் விதியால் நமக்குக் கிடைத்தவை.
சிவாய நம, சிவ்+ஆயம்+நம, சிவன் துணவர் நம்முடையவர், சிவன் தோழராக நாம் இருப்போம், நிகழ்வுகள் எல்லாமே சிவ் என்னும் உணர்வு. (diamondtamil.com)

சிவ நாமம் ஜெபிப்பவர் எவ்வாறு இறைவனின் குணங்களைப் பெறுகின்றார்?
 ஒரு அழகிய வாசமுடைய பூவின் வாசத்தினை நாம் நுகர்கின்றோம்; நமக்கு சுகம் உண்டாகிறது. அதன் அழகினை ரசிக்கின்றோம்; நமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. அதனை வருடுகிறோம்; நமக்கு நல்ல உணர்ச்சி உண்டாகிறது. ஆனால் அந்தப் பூவானது நம்முடைய அங்கம் அல்ல. ஆனால் அந்த சுகம், மகிழ்ச்சி, உணர்ச்சி நமக்குள் உண்டானவை. அந்தப் பூவினை அறிந்து கொண்ட பிறகு, அதனை நினைக்கும் போதெல்லாம், அவை மீண்டும் எம்முள் உண்டாகின்றன. அவற்றை நாம் நினைக்கும் ஆழத்தைப் பொறுத்து அவை மேலும் எம்முள் வலுப்பெறுகின்றன.

இறை வழிபாடும் அதே மாயத்தையே நிகழ்த்துகிறது. முதலில் நாம் இறவனின் குணங்களை அறிகின்றோம். அவர் உண்மையில் இருக்கலாம்; இல்லது இருக்கலாம்; கவலையில்லை. சிவனின் குணங்களை அறிந்து கொண்ட பிறகு, சிவனை நினைக்கும் பொழுதெல்லாம் ”சிவாய நம” உச்சரிக்கும் போதெல்லாம், சிவ குணங்கள் எம்முள் வலுப்பெறுகின்றன. அவன் வழி நடக்கின்றோம்; அவனையே வெளியிலே காண்கின்றோம். அவனது குணங்களை பாமரரும் அறிய இலகுவான வழி கதைகள் ஆகும். அதனால்தான் வேலின் சிறப்பு என்ற பதிவில் இறைவனின் கதைகள் வாழும்வரைதான் இறைவன் வாழுவான் என்று குறிப்பிட்டிருந்தேன்.

சிவனின் குணங்கள் யாவை?
சைவ சமயம் சிவனுக்கென்று தனியாக குணங்களை அதிகம் வகுக்கவில்லை. மாறாக பொதுவான இறைவனின் குணங்கள் கூறப்படுகின்றன. இறைவன் குணங்களை எட்டாகச் சுருக்குகின்றது சைவசமயம். பரிமேலழகர் வரையறுத்த இறைவனின் எண்குணங்கள் ஆவன,

  1. தன்வயத்தினர் ஆதல்
  2. தூய உடம்பினர் ஆதல்
  3. இயற்கை உணர்வினர் ஆதல்
  4. முற்றும் உணர்தல்
  5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்
  6. பேரருள் உடைமை
  7. முடிவு இல் ஆற்றல் உடைமை
  8. வரம்பு இல் இன்பம் உடைமை

இவற்றை ஒரு கசடு அற அறிந்து கொண்ட பின்னர் இறை வழிபாடு செய்வதே ஒருவருக்கு முழுப் பயனையும் அழிக்கும். இல்லையெனில் அவன் சிந்தையில் வைப்பவன் பொருள் ஓதுவோரிலும் மேலோங்கும். அதன் பின் செய்யப்படும் சிவ நாம ஜெபம் ஒருவருக்கு சிறப்பான நன்மைகளை நல்கும்.

”காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

பிற் குறிப்பு: சைவசமயம் பஞ்சாட்சரத்தை தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், மற்றும் அதிசூட்சும பஞ்சாட்சரம் என 3 வகைப்படுத்துகிறது.
அதில் தூல பஞ்சாட்சரம் எனப்படும் “ந” இல் தொடங்கும் நகர பஞ்சாட்சரம் - நமசிவாய. இது இனிய உலகியல் வாழ்வை நல்குவது. வலிய தீவினைகள் எல்லாம் அடங்கிவிடும்.
சூட்சும பஞ்சாட்சரம் எனப்படும் ”சி” இல் தொடங்கும் சிகர பஞ்சாட்சரம் - சிவாய நம. இது வீடு பேறு அல்லது முக்தியை நல்குவது. சதாசிவம் முதல்வகை இருந்து கருணைபுரிந்து அருள் செய்வன்.
இவற்றின் விளக்கம் தெரியவில்லை. 

குறிப்பு: இது இந்து மதத்தையோ சைவ சமயத்தையோ வளர்ப்பதற்காக செய்யப்பட்ட பதிவு அல்ல. சிறந்த தெளிவைப் பெற முதற்படி.

Tuesday, January 5, 2021

Earth Coinsides a Darkspot of the Sun in December and Coronavirus SARS - 2

thanks: laprovincia.es

"The first human cases of COVID-19, the disease caused by the novel coronavirus causing COVID-19, subsequently named SARS-CoV-2were first reported by officials in Wuhan City, China, in December 2019." [1]

The Tsunami also caused 227,000 fatalities in 14 countries in December 26 2004. [2]

December seems to be the month with high riskiness and source of dread.

"A selfish cytoplasmic gene is a gene located in an organelle, plasma or intracellular #parasite that modifies reproduction to cause its own increase at the expense of the cell or organism that carries it." [3]

"Intracellular parasites are micro-parasites that are capable of growing and reproducing inside the cells of a host."
There are two types namely, Facultative intracellular and Obligate intracellular.
Obligate intracellular parasites need a host cell to live and reproduce. [4] eg: All viruses

"Virus or Bacteria that can enter and survive within eukaryotic cells are shielded from humoral antibodies and can be eliminated only by a cellular immune response. Some examples of infectious diseases of global importance that are caused by intracellular microorganisms include tuberculosis, leprosy, typhoid, listeriosis, Legionnaire’s disease, malaria, leishmaniasis, Chagas’ disease, and toxoplasmosis. Most microorganisms are destroyed by the host tissues through processes that usually involve phagocytosis and lysosomal disruption. However, some organisms, called intracellular pathogens, are capable of avoiding destruction by growing inside macrophages or other cells. During infection with intracellular pathogenic microorganisms, the element #iron is required by both the host cell and the pathogen that inhabits the host cell." [5]

Iron percentage the surface and the underground water increase when there is changes inside the earth. For example, when the subducted primordial crust, resting under the bottom of the upper mantle descended towards the core mantle boundary, mantle plumes ascended front the lower mantle to the upper mantle. This phenomenon is known as mantle over turn. Look at this video. This may cause volcanic eruption, tectonic plate moments, earth quakes and hence the Tsunami. Also, #iron and other elements are pushed into the upper layer of the earth which would makes the water contaminated with the elements. It helps the intracellular pathogens already exists rarely in the earth lives to infect and spread widely.

References:



Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...