Friday, September 4, 2020

எங்கும் நிறை பரப்பிரம்மம்

## எங்கும் நிறை பரப்பிரம்மத்துடன் இணைய நாம் எங்கும் நிறைய வேண்டும்!
# கண்களை மூடி மனதை விரிவாக வைத்து உயிரை உடல் தாண்டி எங்கும் பரப்பி உடலைத் தியானிக்க வேண்டும். இயல்பாகவே நமது உடலிலுள்ள சக்கரங்கள் இதைச் செய்து கொண்டுதான் உள்ளன. ஆனால் அதன் அளவு மிகக் குறைவு. இராவணன் கையில் முள்ளந்தண்டுடன் தலை கொண்ட வீணையின் அர்த்தம் அவன் குறித்த சக்கரங்கள் கொண்டு வேண்டிய பரவசநிலை அடைவதாக இருக்கலாம். இல்லையெனில் உடலியல் காரணங்கள் ஏதாவது இருக்கவும் முடியும். சூட்சுமமாகச் சொன்னால் இறைவன் நம் நெஞ்சில் உறைகின்றான். நாம் அதை நிமிர்த்தி உதவ வேண்டும்.

பிரமிப்பு, பரவசம், ஆச்சரியம், மெய்சிலிப்பு ஆகியன துவண்ட மனதிற்கும் உடலிற்கும் சக்தியூட்டுபவை ஆகும். இவை நமது உயிரை மெய் மறந்து எங்கும் நிறையச் செய்கின்றன. அதனாலேயே பேரானந்தத்தை உணர்பவர் எண்ணங்கள் இலகுவில் வெற்றியாகின்றன. #மகிழ்ச்சி

சூரிய தரிசனம்
இருட்டிலே தொடங்கி இருட்டிலே முடியும் நாட்கள். அது போல வாழ்க்கையும் இருட்டிலே தொடங்கி இருட்டிலே முடிகிறது. இடையிலே கொஞ்சம் வெளிச்சம்.
## சூரிய தரிசனத்தின்போது குண்டலினி மேலே நிலைக்கிறது. அதாவது நமது உயிரானது உச்சம் கொள்கிறது. அது நமது உடல் தாண்டி வெளியே எல்லாத் திசைகளிலும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுகிறது. அப்போது நாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற நமது உடலும் உயிரும் பூரணமாக ஒத்துளைக்கும். இதை ஒட்டியே தினமும் காலை சூரிய தரிசனம் செய்வது வழக்கமாக ஆகியிருக்கும்.

நித்திரை அளிப்பது
நாம் நித்திரை கொள்ளும்போது நமது உயிரானது ஆசை, பிடிவாதம், ஆணவம் யாவும் அகன்று பரப்பிரம்மத்துடன் சங்கமிக்கிறது. அதாவது நடுநிலை கொள்கிறது. அப்போது சிறிது ஞானம் கிடைக்கிறது. அந்த ஞானமானது பட்டை தீட்டப்படாத வைரம் போன்றது. அதனை சரியாகப் பயன்படுத்தினால் வாழ்வில் முன்னேறம் அடையலாம். பயன்படுத்தாதவர் அதிக நித்திரை கொள்ளத் தேவை இல்லை.

# சாந்தியையும்
மகிழ்ச்சியையும்
ஞான ஒளியினையும் பரவ விடுங்கள்.

உணர்ச்சிகள் யாவும் அதிர்வலைகள் போன்றவை. மனிதர்க்கு மட்டுமன்றி சடப்பொருட்களும் உணரக் கூடியவை.  இசையும் இது போல அதிர்வுகளே ஆகும். சடப்பொருட்கள் இசையின் பொருளை உணர முடியாது. ஆனால், அதிலுள்ள மன உணர்ச்சியை அவையும் பிரதிபலிக்கும்; உணர்ந்து பேணும்; அவ் உணர்ச்சியைப் பரவச் செய்யும். அக்கால இசை வல்லுனர்கள் இசையால் மழை வரச் செய்தல் போன்ற பல விந்தையான செயல்களை சாதித்துள்ளனர். “நளின நாட்யமிட அசைந்தது பரமிது ஈசா!”.

## எதையும் வெறுக்கக் கூடாது.
ஒரு விடயத்தை வெறுத்தால் நீங்கள் மனதில் அதன்பால் முனைவாக்கம் அடைவீர்கள். நீங்கள் நினைப்பதையே வெளியில் காண்கிறீர்கள் என விவேகானந்தர் கூறியுள்ளார். அதன்படி அந்த வெறுக்கும் விடயத்தையே அடிக்கடி வெளியில் காண்பீர்கள். அது உங்கள் மனதை மேலும் காயப்படுத்துவதோடு உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிடும்.

## பிரார்த்தனைகள் பலிக்கின்றன
அல்லாது போனால், பிரார்த்தனைக்கான நோக்கம் தெளிவாக இல்லை அல்லது மனத்தூய்மை போதாது எனப் பொருளாகும்.

## பரிவும் பரிவும் மீழும்.
சிலந்தி வலை போல இந்த அண்டபேரண்டம் எங்கும் விரிந்து கிடக்கின்ற வெற்றுக் கண்ணுக்கு மட்டுமன்றி ஞானக் கண்ணுக்கும் கிட்டாத தொடர்பு பரிவு ஆகும். இது ஜப்பானியர்கள் விளையாடும் ”domino effect” போல பிரமிப்பானது. இதனால் தான் பக்திப் பரவச நிலையில் ஏதோ ஒரு பரிவு இந்தப் பிரபஞ்சத்துடன் நிகழ்கிறது. 

இப்பிரபஞ்சம் அமைதியானது. அதிலுள்ள எதுவும் அதன் இயல்புத் தன்மையை மாற்ற விரும்பாது. அதன் மீது சலனத்தை ஏற்படுத்தாமல் இருப்பதையே அவை விரும்பும். சாந்தமே ஜடங்கள் கூட உணரும் மொழி ஆகும். அதுவே அன்பின் முதற் படியுமாகும். ஆகவே நாம் இயன்ற அளவுக்கு எதிரான அதிர்வுகளை அசைவுகளைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அமைதியாக இருக்கும் மனிதனிடம் இப்பிரபஞ்சமே சரணடைந்துவிடுகிறது.

“புறவிசை தாக்காதவிடத்து இயங்கிக் கொண்டிருக்கும் பொருட்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்; ஓய்விலுள்ள பொருள் தொடர்ந்து ஓய்விலேயே இருக்கும்.”

”ஆலயம் தொழுவது சாலவும் நன்று”
#கோயில் செல்வதன் நோக்கங்களில் ஒன்று  சும்மா இருத்தல் ஆகும். ஏனைய சிந்தனைக் குழப்பங்களில் மனம் (உயிர்) அலைவதைத் தவிர்த்து நமது #ஆன்மாவைச் சிறிது நேரம் நாமே ஆராதிப்பது அதன் நோக்கம் ஆகும்.

ஊழ் வினை
எல்லாமே வரையறுத்தது போல தானாக நடந்து கொண்டு இருக்கும். நாம் வெறுமனே பார்வையாளர்களாகவே இருக்கின்றோம். நாம் நமது #ஞான ஒளியை ஏற்றாது போனால் இதுதான்  எப்போதும் நிலைமை ஆகும். நமது சுயாதீன எண்ண எழுகைகளில் புற மின்காந்த அலைகளே (சக்திகள்) அதிக செல்வாக்குச் செலுத்துகின்றன. அதிலும் மிக முக்கியமாக சூரியனிலிருந்தான கதிர்கள் புவியில் ஆதிக்கம் மிகுந்தவை. இதனாலேயே திருமூலர் சூரியனை சிவன் என்று ஒரு திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தலையில் சந்திரனையும் தரித்துள்ளான் அவன்.

இப்போது நம்மைக் குழப்பமடையச் செய்யும் பல மின்காந்த அலை ஊற்றுக்கள் நம்மை சூழ்ந்துவிட்டன. அவை நமது மனதின் இயற்கையான சிந்தனை ஓட்டங்களைக் குழப்பும் தன்மை கொண்டவை. உம். தொலைபேசி, தொலைக்காட்சி அலைக்கற்றைகள். ஆனால், நமது சக்தி கொண்டு ஞானதீபம் ஏற்றினால் புறக்காரணிகள் நமது மனதின் எண்ணங்களை சிதைக்காது.

கனி இருக்கக் காய் கவர்ந்தற்கு
இயற்கை நமக்கு சிறந்ததை அளிக்கும் ஆனால் மனம் இன்னொன்றை நாடும். இயற்கை கொடுப்பதை அப்படியே ஏற்க வேண்டும்; கொடுக்க மறுப்பதை, நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று கடக்கப் பழக வேண்டும். அதோடு, இயற்கையும் சரி, மனிதர்களும் சரி, ஏனைய உயிரினங்களும் சரி அவை எதை எதிர்பார்க்கின்றனவோ அதைத்தான் கொடுக்க வேண்டும். அது தான் அவற்றுக்கும் நமக்கும் மகிழ்ச்சியைத் தரும்.

நன்றி!

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...