"அவர் ஒரு சுயநலவாதி. இனிமேல்தான் நல்லது செய்வேன் என்கிறார். இதுவரைக்கும் என்ன செய்தவர்."
தங்கள் கருத்துக்கு நான் உடன்படுகிறேன் சேர்.
உலகத்தில் எத்தனை Discriminations, கலவரங்கள் இருந்தாலும் புல்லு புடுங்கி ஆவது 4 காசு சம்பாதிச்சு வைக்கிறவன் தான் பிழைப்பான்.
Discrimination ஐயே காரணம் சொல்லி சும்மா இருப்பவன், அதற்கு எதிரான சண்டையிலேயே முழுவதுமாய் ஈடுபடுபவன் இரண்டு பேரும் காணாமல்தான் போவான்.
காசு இருந்தால் எதை வேண்டும் என்றாலும் வாங்கலாம்.
பிடித்த எதையும் வாங்கக் கூடிய அளவு காசினை திருடி, முறைகேடு செய்துதான் சம்பாதிக்கலாம். திருட இலகுவான வழி #Politics; எங்காக்களுக்கு மட்டும்... 🙆♂️
#Easy Steal
நாடே இல்லாத தமிழர் எப்படி Politics செய்ய முடியும்!
தமிழருக்கு அடிக்கடி தனிநாடு குறித்த எண்ணம் வர இதுவே காரணம் ஆகும்.
Beyond Justice: The Art of Survival
இவை எல்லாவற்றுக்கும் மேலே, திருடுவது பாவம் அல்ல. ஆனால், அதனால், பாதிக்கப்பட்டவர் மனம் நொந்தால், அதுதான் பாவம் ஆகும். என்றால் கொள்ளை அடிக்க எந்த பணம் உகந்தது?
100 பேரை திருடி கோட்டை கட்டும், 5 பேர் மட்டுமே மீதமாக பிழைத்துக் கொள்ளும், சனத்தொகை மற்றும் தேவைகள் கூடிய; வளங்கள் போதாத இந்த உலகத்தில், நியாயம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் அடுத்த குழி நமக்குத்தான்.
இதெல்லாம் இன்றைய மக்களுக்கு விளங்காமல் இல்லை. நாமும் உலகத்திற்கு ஏற்ப விவேகமாக, சாணக்கியமாக மாறாமல், தேறி வருபவரையும் பிடித்து இழுத்துவது பிழையான செயல். நண்டு மாதிரி இருக்கிறத விட, "நம்மாளு ஒருத்தன் இருக்கான்" என்பது பெருமை தானே சேர்!
#கந்தன்

No comments:
Post a Comment