”நீ எது நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய்” என்று விவேகானந்தர் கூறினார். இதையே முன்னோர் இதனையே "எண்ணம்போல வாழ்க்கை" என்பர். நீ எண்ணங்களின் பிரதிபலிப்பே. இந்த விளைவின் உக்கிரம் அவ் எண்ணத்தில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் தீவிரத்திலேயே தங்கியுள்ளது. இதனை ஊக்குவிக்கவே ஆன்மீகம், கடவுள், பக்தி, வழிபாடு எல்லாம் வளர்ந்தன; வளர்க்கப்பட்டன.
எண்ணங்கள் நித்திரையில்தான் ஆழ் மனதுடன் சங்கமிக்கும். அதனால்தான் விஞ்ஞானி அப்துகலாம் ”இளைஞர்களே கனவு காணுங்கள் என்றார்”. அவர் ஆழமான சிந்தனையை அவ்வாறு கூறியிருக்க வேண்டும். ஒரு இலட்சியத்தை வைத்து, அது குறித்தே சதாகாலம் சிந்தித்திருப்பதைத்தான் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். நீங்கள் என்பது நீங்கள் அல்ல; உங்கள் எண்ணங்கள், நீங்கள் பிறந்ததிலிருந்து நீங்கள் கண்டவற்றின் சாரம். இது உள்ளே ஆழ்மனதில் பதிவாகியிருக்கும். அதன்படியே உங்கள் சிந்தனைகளும் முடிவுகளும் அமைகின்றன. ஆனால் நீங்களோ அந்த முடிவுகளை நீங்களே எடுப்பதாகக் கருதுகிறீர்கள். ஆனால் உண்மையில் முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர்தான் அவை உங்கள் சிந்தனைக்கே அது வரும்.
என்னைப் பொறுத்தவரையில் இந்த உடலிலுள்ள ஒவ்வாமை தவிர்ந்த ஏனைய நோய்களை நாமே பிடித்து வைத்திருக்கிறோம். அதாவது சுயநினைவோடு அல்ல. ஆழ் மனதினால் பிடித்து வைத்திருக்கிறோம். நம் நிறம், அறிவு, அழகு முதல் கொண்டு பழக்க வழக்கம் யாவற்றையும் நம்மால் மாற்ற முடியும். இன்னொருவருக்கும் மாற்ற முடியும். பரம்பரை இயல்பு என்பவை இவை தான். ஏனையவை போலியானவை. நான் பரம்பரை எடுத்து வருபவை என்று கருதுவது இவற்றைத் தான். அந்த ஆழ்மனம் கொண்டுள்ள பழக்கவழக்கங்களும் நமது இரத்தமும். இல்லையெனில் குரங்கிலிருந்து மனிதன் எப்படி வந்தான். எண்ணம் போல் வாழ்க்கை.
மெஞ்ஞானத் தேடல் இருந்த போது மெஞ்ஞானம் வளர்ந்தது. விஞ்ஞானத் தேடல் இருந்த போது விஞ்ஞானம் வளர்ந்தது. இனி என்ன ஞானம் வளர இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இவை அனைத்தும் தாண்டி எல்லாம் பொய். காயமே இது பொய்யடா! காற்றடைத்த பையடா!
”Imagination can takes you anywhere” - Sir. Albert Einstein

No comments:
Post a Comment