Saturday, May 2, 2020

எதிலும் அதிகமாக ஆசை வைக்கக் கூடாது?

அழகான பெண்களில் ஏன் ஆசை வைக்கக் கூடாது. அவை சீதா போல அரிய வகை உயிரினங்கள். அதன் பிறகு அவற்றில் எதனைப் பார்த்தாலும் அந்த அழகியைப் பார்ப்பது போல இருக்கும். எண்ணமெல்லாம் அவள் நினைப்பாகி, அதுவே சித்திரவதை ஆகிவிடும்.

”வாழ்க்கையில் துன்பத்திற்குக் காரணம் எதிர்பார்ப்பு” என்று சொன்னார் புத்தர். நீண்டகால தவத்தின் பின் அவர் கண்டு கொண்ட அரிய ஞானங்களில் இதுவும் ஒன்று.

நாம் ஒரு காதலை எதிர்பார்க்கும் போது, அதில் பல முடிவுகள் எடுக்கும் தருணங்கள் வரும். இதனால் சிந்தையெல்லாம் அதே எண்ணமாகிக் குழம்பி ஏனையவற்றில் நாட்டம் விட்டுப் போகும். பின் நாம் தனிமையை உணர்ந்து கொள்கிறோம். காதலில் வெற்றி அடைந்து வாழ்வோரைக் கண்டு குழம்புகிறோம். உள்ளத்தில் உள்ளதையே வெளியே காண்கிறோம். தற்காலத் தமிழ் திரைப்படங்கள் கூட, அதை மட்டுமே ஊக்குவித்து அதில் ஒரு ஏக்கத்தை உண்டு பண்ணுகின்றன. அதில் அவர்கள் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். இளைஞர்களோ ஜோடிகளைத் தேடி, ஏக்கங்கொண்டு துன்புறுகிறார்கள். முன்னேற்றம் முற்றாகத் தடைப்படுவதால் மன அழுத்தத்துக்கும் உள்ளாகிறார்கள். காதல் பாடல்களும் காதல் தோல்விப் பாடல்களும் அவர்களை மெய்மறக்க வைத்து ஏக்கத்தைக் கூட்டுகின்றன. அந்த ஏக்கம் அப்போது இன்பமாக இருக்கலாம். நாளடைவில் உனக்குள்ளேயே அது குட்டையில் கழிவு போலத் தேங்கித் துன்பம் தரும்.

”யாரோ யாரோடு இங்கு யாரோ, யாருக்குக்குள் இங்கு யாரோ, யாரோடு இங்கு யார் சொல்வாரோ? புரியாத ஒரு கேள்வியே” என்பது ஒரு பாடல் வரி. இது தான் வாழ்க்கையில் துன்பத்திற்குக் காரணம் ஆகும். அந்த ஏக்கம், இளைஞர்களின் அனைத்துக் கவனத்தையும் அதற்கே திருப்பி ஏனைய வளர்ச்சிகளைச் சிதறடிக்கிறது. திரையுலகு கூட அதையே, அதைக் குறித்த தேடலையே இளைஞர்கள் மனதில் விதைக்கிறது. இதுவே தெற்காசியச் சமூகத்தின் நாகரீக வளர்ச்சி இன்மைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஆனால் என்ன, அங்குள்ள மக்கள் அவர்களுக்குப் பிடித்ததைச் செய்கிறார்கள், அவ்வளவு தான்.

Love is everything
Trust is love

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...