"நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்."
-பாரதி பாடைலில் ஒரு சிறு பகுதி-
ஏன் பாரதி சிறுவயதில் இருந்தே அஞ்சாமை பழக வேண்டும் என்றார். அதற்காக நான் ஒரு கதை சொல்கிறேன், நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஒரு கொடிய மிருகங்கள் வாழும் அடர்ந்த காடு. அதனிலிருந்து சற்றுத் தொலைவில் கிராமத்தை ஒட்டி ஒரு வீடு. அங்கே ஒரு வேடன் வசித்து வந்தான். ஒருநாள், ஒரு சிறுவன் அவ்வேடன் வீட்டுக்குச் சென்றான். அங்கே, ஒரு நாயும் ஒரு புலியும் இருந்தன. அவன் புலியைக் கண்டவுடன் பயந்து விட்டான். அது உறுமிக் கொண்டு இருந்தது. அப்போது, அந்த வேடன் ஒரு குச்சியுடன் வெளியே வந்தான். இரண்டும் இரு மூலைகளில் போய் அடங்கிப் போயின. அதனைக் கண்டு வியந்த சிறுவன், அது எவ்வாறு என்று கேட்டான். அதற்கு அவ் வேடன் பின்வருமாறு கூறினான்.
ஒரு நாள், நான் காட்டிற்குச் சென்றேன். அப்போது, இந்தப் புலிக் குட்டியைக் கண்டேன். அதனை அழைத்து வரும் வழியில் ஒரு நாய்க் குட்டியும் இருந்தது. அதையும் அழைத்து வந்தேன். தினமும் அதற்கு இந்தத் தடியால் ஒரு அடி போடுவேன். அப்போது அவை பயந்து மூலைகளில் போய் ஒதுங்கும். அதன் பிறகு தான் இரை போடுவேன் என்றான். இப்போது அவை இந்தக் குச்சியைக் கண்டால் பயந்து மூலையில் போய் ஒதுங்கிக் கொள்கின்றன. தன்னுடைய பலத்தையே புலி மறந்து விட்டது. அதன் மரபணுவின் தன்மையும் தோற்றுப் போனது. என்றான்.
பார்த்தீர்களா! காட்டில் வேட்டையாடும் புலிகூட அச்சப்படக் கற்றுக் கொண்டால் பயந்து நடுங்க வேண்டி இருக்கிறது. இந்த வாழ்க்கையில் நாம் நம்மையும் ஒரு விலங்கு என ஒத்துக் கொண்டால் அனைத்து சூட்சுமமும் விளங்கிவிடும். ஆனால், எமக்கு சற்று அதிக ஆயுள் காலமும், சிந்திக்கும் ஆற்றலும், இயைபாக்கம் அடைந்த உடலும் இருக்கிறது. உயிரினங்களின் மூளை யாவற்றையும் இந்த ஞாலத்திலிருந்தே கற்றுக் கொள்கின்றன.
பிறகு, காட்டில் சிங்கம், புலிக்கு வேட்டையாடக் கற்றுக் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது. இவை, அதன் மரபணுக்களில் பொதிந்த அவற்றின் உடலில் தன்மை. அதற்குப் பசிக்கிறது. அதற்கு வேட்டையாட முடிவதால் வேட்டையாடி உண்கிறது. அதன் நாக்கிற்கு ஊண் உண்ணப் பிடித்திருக்கிறது. அவ்வளவும் தான். (ஒரு வேளை 7 ஆம் அறிவில் சுரியா கூறியது போல ஏதாவது பரம்பரை வழியான அறிவுப் பரிமாற்றம் இருக்கிறதோ தெரியவில்லை). இவற்றில் சூழல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
விலங்குகள் யாவுமே செயல் விளைவுகள் மூலமாகவே அனுபவ அறிவைப் பெறுகிறது. அதாவது, தான் செய்யும் செயலின் விளைவை ஒப்பீடாக நினைவில் வைத்துக் கொண்டு தான் ஞானம் பெறுகிறது. சொல்லித் தந்து நாம் பெறும் கல்வி இவற்றுள் அடங்காது. ஆனால், நிச்சயமாக அதன் ஆரம்பமாங்களான கேட்டல், சொல்லல், எழுதுதல் போன்ற மொழிக் கற்கைககள் இதன் பாற்பட்டவையே. ஆரம்பத்தில் ஒரு குழந்தையானது, நிலாவினைக் காட்டி அது நிலா எனச் சொல்லும்போது அது நிலா என்பதையும் அதன் உச்சரிப்பு அதுதான் என்பதையும் ஒப்பிட்டு நினைவில் கொள்கிறது. இங்கே அந்த ஓசையும் வலி போல ஒரு உணர்ச்சியே. அதை அது நினைவில் கொள்கிறது. (குறிப்பு: அப்போது அது வேறு எந்த வலியையும் கண்டதில்லை).
இப்போது அந்த புலி ஏன் நடுங்கி மூலையில் பதுங்கியது என்று புரிகிறதா! அது தானே நினைத்தாலும் எளிதில் அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள இயலாது. அது அதன் உடல் எங்கும் வியாபித்துவிட்டது. அது பயம் கொள்ள மறுத்தாலும் குச்சியைப் பார்த்தால் தானாக அதன் இதயம் துடிக்கும், இரத்தம் உறையும். அச்சம் என்பது வெறுமனே மனதுடன் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. உடல் காணும் அனுபவ ஞானம் சம்பந்தப்பட்டது. இதனால் தான் பாரதி குழந்தைகளுக்கு இளம்பருவம் முதற்கொண்டே பயம் கொள்ளப் பழக்க வேண்டாம் என்கிறார்.
பலமான யானை உண்டு. வேகமான சிறுத்தை உண்டு. கொடிய விசப் பாம்புகள் உண்டு. சிங்கம் மட்டும் எப்படிக் காட்டுக்கு ராஜா ஆனது. அதன் மனப்பாங்கினால் தான் அது அவ்வாறு ஆனது. அது தன்னை ராஜாவாக நினைக்கிறது. அது போலவே வாழ்கிறது. வேறு எதனையும் அது கண்டு அஞ்சுவதே கிடையாது; ஏன் கருத்தில் கொள்வதே கிடையாது. ஏனையவை அதற்கு ஆசைப்படவும் இல்லை. அவ்வாறு வாழவும் இல்லை. அது காட்டிலே இயற்கை கற்றுத் தரும் தனிமையான சூழல். ஆனால் மனிதனோ சமூகத்தில் ஒன்றித்து வாழ்பபவன். இந்தச் சூழல் அவனுக்குப் பல வலிகளைக் கொடுத்து பலவாறு அவனை மாற்ற முற்படுகிறது. ஆனால், ஒருவன், தன்னை, தன் குணத்தினை தான் தான் முடிவு செய்ய வேண்டும். அவனே அது போல தன்னைச் செதுக்கியாக வேண்டும்.
பிறகு, பயபக்தி, பணிவு என்பவை பற்றி பல ஒழுக்கங்களை வள்ளுவர், ஔவையார் உட்படப் பலர் கூறி இருக்கின்றனரே. அவை என் கூற்றுக்கு முரணாகின்றனவே! உண்மையில் பணிவு அவசியம் தானா? அவ்வாறெனில், இரண்டையும் ஒருங்கே கடைப்பிடிப்பது எப்படி?
பணிவு ஒரு மனிதனைத் தவறான பாதையில் செல்லாது வாழ உதவுகிறது. நாம் சமூகத்திடையே பல உறவு முறைகள் வைத்து வாழ்கிறோம். ஒவ்வொரு உறவுகளும் வெவ்வேறு வகையானவை. அவற்றில் பல கடன்கள், கடமைகள், தேவைகள் நிறைந்தவை. சில உறவுகள் உரிமைகளும் உடையவை. நாம் அந்தக் கடமைகள் நிறைந்த உறவுகளுக்கு எப்போதும் பணிவாக நடக்க வேண்டும். அது நன்றியின் நிமித்தமாகவும் இருக்கலாம். அல்லது அவர்களின் தேவைகள் பல இன்னமும் எமக்கு இருக்கலாம். அவர்களின் மனப்பூர்வமாக நாம் அவற்றை அடைந்து முன்னேற வேண்டும் எனில் நாம் நிச்சயமாகப் பணிவாக இருக்க வேண்டும். வாலாட்டும் நாயிற்குத்தான் அதிக உணவு அளிக்கப்படுகிறது.
இவை மட்டும் பணிவின் பயனல்ல. நீங்கள் எவ்வளவு உயர்ந்தாலும் வெளியே பணிவாக நடந்து கொள்வது உங்களை மேலும் உயர்த்துவதோடு, உங்களுக்கு அது கவசமாகவும் அமையும். இவை தவிர நேரடியாக நீஙகள் அனுபவிக்கும் நன்மைகள் பல உண்டு. "பொறுத்தார் பூமியாழ்வார்! பொங்கினார் காடாள்வார்!" என்பர். பொறுமையாக இருப்பவர்களுக்கு மனம் எப்போதும் அமைதியாக இருக்கும். அவர்களால், எந்த விடயத்திலும் இலகுவில் மனதை ஒருமுகப் படுத்த முடியும். ஆதலால், இலகுவில் விடயங்களைக் கற்கவும் முடியும். இதனால் அவர்கள் செயல்கள் சிறப்பாக அமைய, அவர்கள் வெற்றியடைவது இலகுவாகிறது. அதோடு, அவர்களின் உடலும் இதனால் அரோக்கியமாக இருக்கும். ஆனால், எந்நேரமும் கொந்தளிப்பாக இருப்பவர்கள். மனம் அலை பாய்கிறது. இதனால் உடலில் நாடி நாள ஓட்டங்கள் தாறு மாறாக அமைகிறது. இது அவர்களின் அந்தக் கொந்தளிப்பான எண்ணங்களின் விளைவே. அவர்களின் எண்ணத்தை வெற்றியடையச் செய்யவே அவ்வாறு நிகழ்கிறது. ஆனால், இது அவர்களுக்குள் இருந்து அவர்களையே அழித்துவிடுகிறது.
எந்த ஒரு உணர்ச்சியும் முதலில் மூளையையே சென்றடைகின்றது. பின்னர், அதற்கான மூளையின் எதிர்ச்செயலின் அடிப்படையிலேயே உடலில் அனைத்து மாற்றங்களுமே நிகழ்கின்றன. இவற்றில் சிலவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியாது. உதாரணமாக திடுக்கிடும் ஓசை ஒன்று கேட்டால் உடலில் அதிரினலின் சுரக்கிறது; உடலில் திடிரென்று சக்தி பெருகி உங்களைப் பதற்ற நிலைக்கு உள்ளாக்குகிறது. இப்போது நீங்கள் அந்த மேலதிக சக்தியை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். இதன்போது உங்கள் சுவாசம் மூலமும் இதன் விளைவைக் குறைதுக்கொள்ள இயலும். ”மேலதிக சக்தி உங்களை அமைதியாகக் கொல்லும்”. இதிலிருந்து விலகியே இருக்க வேண்டும். தினமும் உடல்பயிற்சி செய்ய வேண்டும். "Fly or fight mechanism" பற்றிப் படித்து இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
இதிலிருந்து நான் என்ன சொல்ல வருகிறேன். அச்சமின்றி வேண்டுமா அல்லது பணிவு வேண்டுமா? நிச்சயம் இரண்டும் வேண்டும். ஆனால், எப்படி? நீங்கள் பயம் கொள்வது போலே நடித்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையில் பயம் என்ற ஒன்றை உங்கள் மனம் அனுபவிக்கக் கூடாது. நிச்சயம் அச்சமூட்டக் கூடிய செயல்கள் உங்கள் உடலில் பல அதிர்வுகளையும் மாற்றங்களையும் கொண்டு வந்து உங்களை நிலைகுலையச் செய்யும். நீங்கள் அவற்றிற்கு இசைவாக நடந்து அவற்றைக் குறைக்க வேண்டும். இதயம் துடிப்பது நல்லதுதான். அதனை அப்படியே விடுங்கள். ஆனால், ஆத்மார்த்தமாகப் பயம் கொண்டு பழகக் கூடாது. இவ்வாறே நாம் பெரியவர்களுக்கு வேண்டிய மரியாதையை வழங்க வேண்டும். ஆனால், ஒருபோதும் ஒழுக்கத்தைக் கைவிடக் கூடாது.
”துணிவுடமை” என்பது அஞ்சாமையின் இன்னொரு பொருள்தான். ஆனால் அது பற்றி நான் இங்கு அதிகம் பேசவில்லை. அது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.
"பழக்கம் தான் பெரிது" என்று முன்னோர்கள் சொல்வர். அதில் எத்தனை உண்மை உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Latest Updates
-
Highlight: ஆதாமும் ஏவாளும் தாவும் தமிழ் குரங்கும், எலி வாலுமா? Kannan Man Theory தமிழை Reference ஆக்கிய ஆ.தாமோ, பிரித்து அழிக்கும் ஏ.வால் ...
-
The civil war between the Sinhalese and Tamils in Sri Lanka is deeply rooted in religious and cultural divides, where Ravana/Muruga—symbols ...
-
The epics of Mahabharata and Ramayana offer a nuanced history of the lineages, roles, and movements of communities across Bhar...
superb
ReplyDelete