Thursday, May 21, 2020

நம் மனதில் நவக்கிரகங்களின் ஆதிக்கமும் அவற்றில் இருந்து விடுவிக்கும் மந்திர ஜெபமும்



நான் இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். கடந்த வருடங்களில் ஒரு தேதியில் நீங்கள் செய்த அல்லது நினைத்த விடயங்கள் அதே தேதியில் இந்த வருடம் ஞாபகம் வந்ததுண்டா? இது போலே எனக்குப் பல அனுபவங்கள் உண்டு.

நான் முகப் புத்தகத்தில் ஏதாவது ஒரு விடயத்தை முன்னைய வருடங்களில் பதிவிட்டு இருப்பேன். அதே திகதியில் எனக்கு அது தொடர்பான சிந்தனைகள் வரும். பிறகு நான் முகப் புத்தகத்தைத் திறந்தால் "நினைவுகள்" பகுதியில் அவை காட்டப்பட்டு இருக்கும். இது போல எனக்குப் பல தடவை நடந்ததுண்டு.

ஏன் இப்படி நிகழ்கின்றது என்று நோக்கினால், அதே திகதியில் சூரியன், பூமி அதே நிலைக்கு வருகிறது. ஆகையால், அதே போன்ற சூழல் உண்டாகிறது. அப்போது அதற்குரிய மூளையின் பகுதி தூண்டப்படுகிறது;  அவை ஞாபகம் வருகின்றன்.

இது போல இன்னொரு விடயமும் உண்டு. அது ஒரு விடயத்தை நினைத்துவிட்டு மறந்து விட்டோம் எனில் மீண்டும் எங்கு எப்படி இருந்து யோசனை செய்தோமோ அங்கே சென்று அவ்வாறு இருந்து யோசனை செய்யின் அது ஞாபகம் வந்துவிடும்.

இதற்காகத்தான் படுத்துக் கொண்டு படிக்கக் கூடாது என்பர். உண்மையில் இதன் ஆதிக்கம் குறைவு தான் ஆனாலும் புறக்கணிக்க முடியாது. அதோடு நாம் பரீட்சை மண்டபத்தில் இருந்து எழுதும் மேசையின் ஒத்த ஒரு மேசையில் இருந்து எழுதிப் படித்து வந்தால் அது பல வகையில் கை கொடுக்கும். வேகமாக எழுத முடிவதோடு நமது அறிவை மீட்கும் வேகமும் அதிகமாக இருக்கும்.

ஏன் நல்லதே பார்க்க, கேட்க, அறிய வேண்டும் என்று முன்னோர் சொல்வர்? விதை ஒன்று போட்டால் மரம் ஒன்றா முளைக்கும். அது போல எவற்றை நாங்கள் உள் வாங்குகின்றோமோ அவற்றை ஏதாவது ஒரு வடிவில் நாம் கக்கியே ஆக வேண்டும். "எதை இங்கிருந்து எடுத்தோமோ அதை இங்கேயே கொடுக்க வேண்டும்" என்கிறது கீதை.

இறைவனை நோக்கி மந்திரங்களை ஜெபிப்பது எதற்கு?
மூட நம்பிக்கைகளை உடையவனும் திணிப்பவனும் தன் குலத்தையே தாழ்வான பாதைக்கு இட்டுச் செல்கின்றான். ஒரு நாள்... ஆனால் என்னுடைய நோக்கம் அதுவல்ல. உண்மை யாது என்பதை தெளிவிப்பது மட்டுமே. அத்துடன் நான் உங்களையும் ஆராய்ந்து பார்த்து உணரவே அழைக்கின்றேன்.

இறைவன் என்று ஒரு பொருள் வர இன்னொரு காரணமும் இருக்கிறது. அது நமது வாழ்வில் துன்பத்தில் துவண்டு பிடியற்றுப் போகும் போது துணைக்கென அழைக்கப்படுபவன் இறைவன். "மரத்தின் நிழலில் இருப்பதில் தானே இனிமை இருக்கிறது." ஆனால் நீங்கள் அன்பால் அனைவரையும் மகிழ்ச்சியாக்கி வாழ்பவராயின் அதுவும் தேவைப்படாது. ஆனாலும் தேவை இருக்கிறது. எப்படி?

முன்பு கூறியது போல, எண்ணங்கள் நமது கட்டுப்பாடு இன்றி, நவக்கிரகங்களினால் ஏற்படும் மின், காந்த, ஈர்ப்பு விசைகளின் ஆதிக்கத்திற்கு உட்படும்போது அது குழப்பத்தினை ஏற்படுத்தும். அவற்றிலிருந்து விடுபடவே இந்த மந்திரங்கள் பயன்படுகின்றன.

நீங்கள் சதாகாலமும் ஒரு கடவுளை நினைத்து, அவன் பெயரை ஜெபித்து வருகின்றீர்கள் ஆயின், உங்கள் சிந்தையில் காலத்துடன் அது கலப்பதோடு, காலம் கடந்த ஒன்றாகவும் அது மாறிவிடும். இப்போது எந்தவிசை தூண்டி என்ன பயன். உங்களுக்கு ஞாபகம் வருவது உங்களுக்கு அருளைக் கூட்டும், பக்தியைக் கூட்டும், சக்தியைக் கூட்டும், மகிழ்ச்சியைப் பெருக்கும் அந்த இறைவனின் நாமமே! "நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" எனவே எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள்.

அவன் நெறியில் நீங்கள் நிற்க, அவன் பெயர் நீங்கள் உச்சரிக்க, நிற்க நாளும் கோளும் அதன் நிலைகொள் தானங்களும் உங்களை ஒன்றும் செய்யாது.

இப்போது, பழைய சோகமான அனுபவங்கள் மறைக்கப் படுகின்றன; மறக்கப் படுகின்றன; மீண்டும் கோள்களின் சக்திகளால் தூண்டப்படுவதும் இல்லை. ஆகவே, நீங்கள் நவக் கிரகங்களின் ஆதிக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவர் ஆகின்றீர்கள்.

இதற்கு மொழி, சமய வேறுபாடு எதுவும் கிடையாது. இங்கு சம்ஸ்கிருதம் சம்பந்தப்படவே இல்லை. இது முற்றிலும் உளவியல் அறிவியல். இங்கே, மந்திரங்களை சத்தமாக உச்சரித்து ஏனைய மதத்தவருடன் சண்டை செய்ய வேண்டிய தேவையும்   இல்லை. அந்த மதத்தினரிடமும் உண்மை இல்லை.

சத்தமாக சில மந்திரங்கள் ஜெபிப்பதில் வேறு சில நன்மைகள் உண்டு. நாதத்தின் சக்தி அளப்பரியது. அது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம். முடிந்தால் பகிரவும்.

1 comment:

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...