தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
(அதிகாரம்: வான் சிறப்பு, குறள் எண்: 19)
தேவநேயப் பாவாணர் உரை:
மழை பெய்யாவிடின் இப் பரந்தவுலகின் கண் அறக்கொடையும் தவமும் ஆகிய இருவகை நல்வினைகளும் செய்யப்பெறா. தானம் என்பது, நல்வழியில் ஈட்டப்பட்ட பொருளை, தெய்வப் பற்றுக் கரணியமாகக் கோவிற்கும் அடியார்க்கும் , அருளுடைமை கரணியமாக இரப்போர்க்கும், ஈடின்றிக் கொடுத்தல். தவம் என்பது ஐம்புலவடக்கம் பற்றித் துறவறத்தார் கடுமையாகவும், மகப்பேறு முதலியன கருதி இல்லறத்தார் எளிமையாகவும், உடலை வருத்துதல். கடுமையாக வருத்தும் வகைகள் துறவறவியலிற் கூறப்பெறும், எளிமையாக வருத்தும் வகைகள் உண்டி சுருக்குதல், எளிய வுடையுடுத்தல், இன்பம் விலக்கல் முதலியன. "மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்." என்று திருவள்ளுவரும், "முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்து" என்று பட்டினத்தடிகளும் பாடியிருப்பதால், தவம் துறவறத்தின் மேலதென்று வரையறுப்பது பொருந்தாது. தானம் பிறர்க்குக் கொடுப்பது; "தவம் தன்னை ஒடுக்குவது". தானம் என்பது தென்சொல்லென்பதை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலிற் கண்டு தெளிக.
மேற்படி வள்ளுவர் குறளுக்கான தேவநேயப் பாவாணர் உரையின்படி, தவம் எனபது துறவு பூண்டோர் மட்டும் செய்வது அல்ல. இல்லறத்தினரும் பிள்ளைப்பேறு வேண்டி தவம் இருப்பர் என்பது புலனாகிறது. இதற்காகத் தம்பதியினர் உண்டி சுருங்குதல், எளிய வுடையுடுத்தல், இன்பம் விலக்கல் (இதனை அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலில் கண்ணதாசன், ”வரவு 15 நாள் செலவு 1 நாள்” என்றும் கூறியுள்ளார்) போன்றன செய்யக் கடவர் என்று அவர் குறிப்பிடுகிறார். இதன்படி தம்பதியினர் தம்மை ஒடுக்கி ஒரு குழந்தையைச் செய்தற் பொருட்டு மேற்கொள்ளும் இவையும் தவமே என்கிறார்.
”சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று ஒரு பழமொழியும் உண்டு. அங்கே அவர்கள் சந்திரன் தேய்ந்து பின் வளர்கின்ற 6 ஆம் நாளாகிய, சஷ்டி திதியை சிறப்பாகக் குறிப்பிடுகின்றனர். அந்நாளில் முருகக் கடவுளை நினைத்து விரதமிருந்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிட்டும் என்கின்றனர். சிலர் அமாவாசை மறுதினம் முதல் சஷ்டி வரை (6 நாட்கள்) விரதம் இருப்பர்.
ஆணின் சுக்கிலமும் (விந்து) பெண்ணின் சுரோணிதம் (கருமுட்டை) சேர்ந்து கரு உருவாகும் என்பது அனைவரும் அறிந்ததே. இதிலே ஆணின் சுக்கிலத்தில் மிகவும் பலம் வாய்ந்த ஒன்றே கருத்தரிக்கிறது. ஆண் சுக்கிலம் பெண்ணின் சுரோணிதம் இரண்டும் அதிகசக்தி கொண்டவையாக இருக்கும்போது அதன் உறுதியின்மை காரணமாக கருக்கட்டல் நிகழாமல் போக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இருவரில் ஒருவரேனும் விரதம் இருந்து உடலை ஒடுக்கும்போது இந்த உறுதியற்ற தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் என்பதையே இது குறித்து நிற்கிறது.
இதில் மேலும் அமிர்தம் கடைந்தால், இதனை இப்படியும் உபயோகிக்கலாம் என நான் கருதுகிறேன். ஆண், பெண் இருவரது நிறமூர்த்தத்திலும் உயரம், நிறம், கண் நிறம் போன்ற இயல்புகள் இருக்கும். இவற்றில் வெள்ளை நிறம், நீல நிறக்கண், அதிக உயரம் உடைமை போன்ற ஆட்சியான இயல்புகள் குழந்தை கொண்டிருப்பது விரும்பத் தக்கது. இவ்வியல்புகளைக் காவும் நிறமூர்த்தங்கள் பெண்ணிடம் இருந்து 23 உம் ஆணிடம் இருந்து 23 உம் சேர்ந்தே கரு உருவாகிறது. இதில் ஏதாவது ஒருவரிடம் இருந்து ஆட்சியான இயல்பு வந்துவிட்டால் போதுமானது, குழந்தையும் அந்த இயல்பினைக் கொண்டிருக்கும்; #விரும்பத்தக்கது. இருவரிடம் இருந்தும் பின்னடைவான நிறமூர்த்தம் வந்து விட்டால், குழந்தையும் பின்னடைவான இயல்பினையே உடையதாகிறது; #விரும்பத்தகாதது. அதற்காக, அந்த இயல்புள்ளவர் தவிர்ந்த மற்றையவர் விரதம் இருத்தல், ஆட்சியான இயல்புகள் குழந்தையை வந்தடைய அதிக வாய்ப்பினை ஏற்படுத்தும். விரதம் இருப்பவர் உடல் ஒடுக்கப்படுவதாலேயே இவ்வாறு நிகழ அதிக வாய்ப்பு உள்ளது.
வானம் வழங்கா தெனின்.
(அதிகாரம்: வான் சிறப்பு, குறள் எண்: 19)
தேவநேயப் பாவாணர் உரை:
மழை பெய்யாவிடின் இப் பரந்தவுலகின் கண் அறக்கொடையும் தவமும் ஆகிய இருவகை நல்வினைகளும் செய்யப்பெறா. தானம் என்பது, நல்வழியில் ஈட்டப்பட்ட பொருளை, தெய்வப் பற்றுக் கரணியமாகக் கோவிற்கும் அடியார்க்கும் , அருளுடைமை கரணியமாக இரப்போர்க்கும், ஈடின்றிக் கொடுத்தல். தவம் என்பது ஐம்புலவடக்கம் பற்றித் துறவறத்தார் கடுமையாகவும், மகப்பேறு முதலியன கருதி இல்லறத்தார் எளிமையாகவும், உடலை வருத்துதல். கடுமையாக வருத்தும் வகைகள் துறவறவியலிற் கூறப்பெறும், எளிமையாக வருத்தும் வகைகள் உண்டி சுருக்குதல், எளிய வுடையுடுத்தல், இன்பம் விலக்கல் முதலியன. "மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்." என்று திருவள்ளுவரும், "முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்து" என்று பட்டினத்தடிகளும் பாடியிருப்பதால், தவம் துறவறத்தின் மேலதென்று வரையறுப்பது பொருந்தாது. தானம் பிறர்க்குக் கொடுப்பது; "தவம் தன்னை ஒடுக்குவது". தானம் என்பது தென்சொல்லென்பதை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலிற் கண்டு தெளிக.
மேற்படி வள்ளுவர் குறளுக்கான தேவநேயப் பாவாணர் உரையின்படி, தவம் எனபது துறவு பூண்டோர் மட்டும் செய்வது அல்ல. இல்லறத்தினரும் பிள்ளைப்பேறு வேண்டி தவம் இருப்பர் என்பது புலனாகிறது. இதற்காகத் தம்பதியினர் உண்டி சுருங்குதல், எளிய வுடையுடுத்தல், இன்பம் விலக்கல் (இதனை அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலில் கண்ணதாசன், ”வரவு 15 நாள் செலவு 1 நாள்” என்றும் கூறியுள்ளார்) போன்றன செய்யக் கடவர் என்று அவர் குறிப்பிடுகிறார். இதன்படி தம்பதியினர் தம்மை ஒடுக்கி ஒரு குழந்தையைச் செய்தற் பொருட்டு மேற்கொள்ளும் இவையும் தவமே என்கிறார்.
”சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று ஒரு பழமொழியும் உண்டு. அங்கே அவர்கள் சந்திரன் தேய்ந்து பின் வளர்கின்ற 6 ஆம் நாளாகிய, சஷ்டி திதியை சிறப்பாகக் குறிப்பிடுகின்றனர். அந்நாளில் முருகக் கடவுளை நினைத்து விரதமிருந்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிட்டும் என்கின்றனர். சிலர் அமாவாசை மறுதினம் முதல் சஷ்டி வரை (6 நாட்கள்) விரதம் இருப்பர்.
ஆணின் சுக்கிலமும் (விந்து) பெண்ணின் சுரோணிதம் (கருமுட்டை) சேர்ந்து கரு உருவாகும் என்பது அனைவரும் அறிந்ததே. இதிலே ஆணின் சுக்கிலத்தில் மிகவும் பலம் வாய்ந்த ஒன்றே கருத்தரிக்கிறது. ஆண் சுக்கிலம் பெண்ணின் சுரோணிதம் இரண்டும் அதிகசக்தி கொண்டவையாக இருக்கும்போது அதன் உறுதியின்மை காரணமாக கருக்கட்டல் நிகழாமல் போக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இருவரில் ஒருவரேனும் விரதம் இருந்து உடலை ஒடுக்கும்போது இந்த உறுதியற்ற தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் என்பதையே இது குறித்து நிற்கிறது.
இதில் மேலும் அமிர்தம் கடைந்தால், இதனை இப்படியும் உபயோகிக்கலாம் என நான் கருதுகிறேன். ஆண், பெண் இருவரது நிறமூர்த்தத்திலும் உயரம், நிறம், கண் நிறம் போன்ற இயல்புகள் இருக்கும். இவற்றில் வெள்ளை நிறம், நீல நிறக்கண், அதிக உயரம் உடைமை போன்ற ஆட்சியான இயல்புகள் குழந்தை கொண்டிருப்பது விரும்பத் தக்கது. இவ்வியல்புகளைக் காவும் நிறமூர்த்தங்கள் பெண்ணிடம் இருந்து 23 உம் ஆணிடம் இருந்து 23 உம் சேர்ந்தே கரு உருவாகிறது. இதில் ஏதாவது ஒருவரிடம் இருந்து ஆட்சியான இயல்பு வந்துவிட்டால் போதுமானது, குழந்தையும் அந்த இயல்பினைக் கொண்டிருக்கும்; #விரும்பத்தக்கது. இருவரிடம் இருந்தும் பின்னடைவான நிறமூர்த்தம் வந்து விட்டால், குழந்தையும் பின்னடைவான இயல்பினையே உடையதாகிறது; #விரும்பத்தகாதது. அதற்காக, அந்த இயல்புள்ளவர் தவிர்ந்த மற்றையவர் விரதம் இருத்தல், ஆட்சியான இயல்புகள் குழந்தையை வந்தடைய அதிக வாய்ப்பினை ஏற்படுத்தும். விரதம் இருப்பவர் உடல் ஒடுக்கப்படுவதாலேயே இவ்வாறு நிகழ அதிக வாய்ப்பு உள்ளது.


No comments:
Post a Comment