Sunday, January 26, 2025

சிவன், இராவணன், மற்றும் இராமன்: நிறம், குணம், மற்றும் இதிகாசத்தின் சூழ்ச்சிகள்: சிவந்தமிழ் - கருந்தமிழ்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவன் சிவன். அவன் பணிந்து தமிழை தத்து எடுத்தவன் இராவணன்.
சிவன் > பரமசிவன் > பரமன் > பன் > பாண்டவர் > பாண்டியர் > ...X
அசுரர் > இராவணன் > முருகன் > சோழர் > தமிழர்

இராவணனை அழிக்கும்போது இதிகாசம் எழுதப்படுகிறது.
ஆனால், இராவணன் சிவனை அழிக்கும்போது இதிகாசம் எழுதப்படுவது இல்லை.
தீயன அழியும்போதே இதிகாசங்கள் எழுதப்படுகின்றன.

இராவணன் ஏன் சிவனை அழிக்கிறான். சிவன் அனைத்திலும் சிறந்து விளங்க, நிறத்தினால் பின் தங்கும் இராவணன், சிவன் மீது பொறாமை கொள்கிறான். தட்சிணாமூர்த்தி என அசுரருக்கும் குருவான சிவனையே அழிக்கிறான். அதுவும் சீதையை அடைய அவன் போடும் போட்டியே ஆகும்.

போட்டியாளான் எப்படி உருவாகிறான். அற்பனாய் இருந்த ஒருவனுக்கு மேலோன் ஒருவன் ஞானப் பால் ஊட்டி வளர்த்த பிறகு, அவன் சீர்தூக்கும் தன்மை படைத்தவன் ஆகிறான். குருவுடனேயே போட்டி போட்டு அழிக்கிறான். அதுவே அவனை வளர்க்காமல் அப்படியே விட்டு இருந்திருந்தால் இன்று ஒன்றும் இல்லாமல் இருந்து இருப்பான்.

இதனால் தான் தேவர் அசுரர்களுக்கு எதுவும் கற்றுக் கொடுப்பதும் இல்லை. தமக்கு வித்தைகள் தெரிந்ததை காட்டிக் கொள்வதும் இல்லை.

இதற்கு சிறந்த உதாரணம், பாண்டியரும் நானும் தான். ஜெசிக்கா ஐ காட்டி இவர்கள் என்னை ஏய்ப்பது ஏன், அது நிறத்தால் ஏற்பட்ட போட்டியில் சிவனை வீழ்த்த, இராவணன் செய்யும் சூழ்ச்சி தானே! இராவணன், எந்த அளவுக்கு அந்த விடயத்தில் உடும்பு பிடியாக, கேவலமாக நடந்து கொள்கிறான் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

சிவனை அழிக்க இராவணன் சூழ்ச்சி செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால், தீயவற்றை, அசுரரை அழிக்க சூழ்ச்சியே செய்யத் தேவையில்லை. ஏற்கனவே இராமன் பலமுறை சூழ்ச்சி செய்து அழித்து விட்டான்; தொடரும். இப்போது அங்கே முருகன் இல்லை. அவன் இராவண குணங்களை நான் வெளிப்படையாக அனுபவிக்கிறேன். எல்லோருக்குமாக மனமுவந்து வாழும் சிவனுக்கு தோல்வியே கிடையாது.

ஆனால், பிள்ளைகளை அழகுக்காக தத்தெடுத்து வளர்ப்பதால், சிவன் குடும்பத்தில் இப்போது இராமனின் (பொன் மனிதன் - பொன் Man - பொன் மான்) பிள்ளைகளைக் காணலாம். அவர்களின் குணங்கள் சிவனைப் போல இருக்காது. அவர்களை சிவன் என்று நான் இங்கே குறிப்படவில்லை. நிறத்தால் மட்டுமல்ல, குணத்தாலும் சிவந்தவனே சிவன்!

3 kinds of bloods
தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது. #Ego #Evil
தனக்கு கிடைத்தது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். #Compassion #Love #Mercy #Shivan
தனக்கு மட்டுமே எதுவும் கிடைக்க வேண்டும். #Exclusive #Greedy #Raman

சிவனின் இரத்தத்தில் குறை ஒன்றும் இல்லை.

சிவன் அனைத்திலும் மேலே இருந்தான்.

அவன் அரக்கருக்கும் அருள் செய்தான்.

ஆனால் அரக்கர் அவன் மீது பொறாமை கொண்ட போது, நாச வேலைகள் செய்த போது, அவமதித்தபோது, அவன் கூனிக் குறுகி நின்றான்.

அதன் பொருளும் அன்புதான்.

அவன் நினைத்திருந்தால் #தேவர்கள் போல பழி வாங்கி இருக்கலாம். ஆனால் அவன் தனது intelligence ஐ அதற்கு பயன்படுத்துவதில்லை. எல்லோரையும் தன்னுடையவராகப் பார்த்தான்.

இதே வேலையை தேவர்களுக்கு அவர்கள் செய்திருந்து இருக்கட்டும். அவன் கருப்பு நிறத்தையே அழிக்க உள்நாட்டு யுத்தம் மூலம் இன அழிப்பு செய்திருப்பான்.

அடங்கிப் போகும் நாய்களிடம் சேட்டை விடுவது அசுரர் வழக்கம் தான். ஒன்றும் செய்ய முடியாது. அவர்களைக் காக்க யாரும் இருக்க மாட்டார்கள். தீயனவை தானே அழிந்து போகும். அனைத்திற்கும் தன்னை சமர்ப்பித்த சிவனுக்கு இடைநிலைகள் அழிவுகள் பற்றிக் கவலை இல்லை.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (௱௰௪ - 114)

எப்போதும் சிவனுக்கும் புத்தருக்கும் போதிதர்மருக்கும் மனிதன் கொடுக்க நினைப்பது விசம் தான்.
மனிதர்கள் மத்தியில் நீ என்னடா, புனிதன்!

"Jesus is coming very soon"
Jesus திரும்ப வந்தால் மட்டும் என்ன, முடி சூடவா போகிறீர்கள்.
சிலுவையில் தான் சுமத்தப் போகிறீர்கள்!

எப்படி சொல்கிறேன்? நான் சற்று நல்லவனாக இருக்கவே உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் தனது நல்கோட்பாடுகளை விதைக்கும்போது, "நீ மூடு, ஏறு சிலுவையில்" என்று உடனடியாக அது நடக்கும். நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள தயாராக இல்லாதபோது யார் வந்து என்ன பயன்!

கடவுளைப் புகழ்வதால் அல்லது இகழ்வதால் கடவுளின் நிலமை ஏறப் போவதும் இல்லை; இறங்கப் போவதும் இல்லை. கடவுளை பாராட்டினால், அவர் நல்ல குணங்கள் மேன்மை என்று பிறர் பின்பற்ற அது வழிவகுக்கும்.
அது தர்மத்தை அறியாதபோது. நீங்கள் தர்மத்தை அறிந்து கொண்டே அதை செய்தால், உங்களுக்கு கடவுள் கோயில் எல்லாம் வியாபாரம் அல்லது சேவை நிலையம் தான்.

"அழகை புறத்தில் பார்க்காதே; அகத்தில் பார்."

"திறமைக்கே முதலிடம், முன்னுரிமை"

என்பது எல்லாம் பழைய பொய். பச்சைப் பொய்.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...