Friday, January 10, 2025

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - இயேசு மற்றும் சிவனின் இதய மொழி

உன்னோட நல்ல மனசுக்கு நீ ஓஹோன்னு இருக்க வேண்டியவன் என்று சொல்வார்கள்
Oh(m), my god!

உண்மையில் எல்லோருக்குமான மனதுடன் (empathy) உடன் வாழ்பவர்கள், இயேசு-சிவன் போல மிக அரிது. நான் கிறிஸ்தவர்கள், சைவர்கள் (Saivarkal) குறித்து சொல்லவில்லை. இயேசு, சிவனாகவே வாழும் அவரின் இரத்தம் குறித்து சொல்கிறேன்.
"வேறு யாருக்கும் இடமில்லை. ஆனால் அவர்கள் என்றால் கண்டிப்பாக இடம் உண்டு"
இருக்க வேண்டிய (deserved) இடம் அதிலும் உயர்ந்ததாகவே இருக்கும். உண்மையில் அவர்கள் சாமான்ய மக்கள் மத்தியில் துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் நினைத்திருந்தால் இவர்களை உதாசீனம் செய்துவிட்டு ஓஹோ என்று வாழ்ந்திருக்கலாம். ஆனாலும் அவர்கள் அதிக தாழ்ந்து போயிருக்க மாட்டார்கள்; கடவுள் அவர்களை சிறப்பாகவே வைத்திருப்பார். இப்போதும் நான் நீங்கள் கருதும் மதக் கடவுள்கள் பற்றி சொல்லவில்லை. காரண காரியம் என்னும் கர்மக் கடவுளைப் பற்றி சொல்கிறேன். கடவுள் என்றால் அவர் இருக்கும் இடம் ஒளி மயமான முடிவில்லாத சொர்க்கம் (eternal) என்று எல்லோருக்கும் தெரியும். அவர் சாமான்யர்கள் மீது கொண்ட கருணையால் இறங்கி வந்திருப்பார்.

உதாரணமாக, இயேசு கடவுள் என்றால் அவர் நினைத்திருந்தால் இந்த பூமிக்கு வாராமல் போய், சொர்க்கத்திலேயே ஆனந்த மயமாக இருந்திருக்கலாம். ஆனாலும் அவர் இந்த மக்களுக்காக மனிதவுடலில் பிறந்து வந்தார். அ-து அவர்கள் மனம் இறங்கி வருகிறார்கள். அப்போது அவர்கள் நிலமை இறங்கிப் போனாலும், அவர்கள் சிறப்பு கெடுவது இல்லை. பிறந்தது மாட்டுத் தொழுவமே ஆனாலும் அவரை சிறப்பாகவே வைத்திருந்தது இயற்கை. அவர் பிறந்ததால் அந்த மாட்டுத் தொழுவம் பெயர் பெறுகிறது.
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
ஆனால் இதனைக் கண்டிப்பாக கீழ்மக்கள் ஏற்க மாட்டார்கள். அதற்கு அவர்கள் மனம் பக்குவப்பட்டது அல்ல.

நான், செருக்கு, ego, பொறாமை அற்ற புனிதர்களைப் பற்றிப் பேசும்போது, அவை எல்லாம் உள்ளவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தாமும் அந்த இறை நிலையை அடையாமல், அந்த அன்பையும் போற்றாமல், அவர் எங்களை விட என்ன உயர்ந்தவரா! அப்படி என்ன எனக்கு நன்மை செய்தார்? என்று கேட்பார்கள். குறைந்த பட்சம் எல்லோரையும் இதயத்தில் வைத்து, எவருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல் ஆவது இருந்து விட்டு (no harm), இப்படியான மனிதர்கள் மத்தியில் போர் அதிகாரங்களைத் தவிர்த்து, தங்களையே sacrifice செய்து கொண்டு அழிந்து போகிறார்கள்.


சிவன் இயேசு என்பது அன்பு கொண்டு இதயத்தால் ஞானம் (intelligence) அடைந்த இரத்தம். ஆனால், சிவனுக்கும் அசுரருக்கும் (பார்வதி) பிறந்த கந்தன், சிவனுக்கும் தேவருக்கும் (தேவகி) பிறந்த கண்ணனும் அவர்கள் போல அல்ல. அவர்கள் உலகியலில் நாட்டம் உள்ளவர்கள். தேவர் அல்லது அசுரர் என்று பக்கச் சார்பானவர்கள்; ஒரு தரப்பையே ஓம்புவார்கள். வடநாட்டு தேவர்கள், தென்னாட்டு அசுரர்கள், இருவருக்கும் இடையே பாலமாக இருந்தவர் சிவன் (Avura Bridge - சாம்ப சதாசிவன் - சாம்பலா) அவருடைய எல்லைகள் நலிவடைந்து அழிந்து போயின. இவை சொல்வது, சிந்துசமவெளி நாகரீகம் சிவனின் நாகரீகம் என்பதைத்தான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. அதை ஆரியர் என்னும் தேவர்கள் வந்து, கிரகணத்தின்போது சூரியனை நிலவு விழுங்குவது போல விழுங்கிக் கொண்டார்கள். சங்கமித்துக் கொண்டார்கள். நான் நல் எச்சம் குறித்துப் பேசும்போது, சிவனின் மகன் முருகனால் பக்கச் சார்பாக வளர்க்கப்பட்ட தமிழர்கள், தமிழ் மொழி குறித்துப் பேசக் கூடாது!

சிவனும் இயேசுவும் இதயத்தால் மனிதனைக் காணும் நடுநிலையான கடவுள்களாகவே பார்க்கப் படுகிறார்கள். அன்பு ஒன்றே அவர்கள் வழி. Jesus.Shiva
Yes.yes. ஆமேன். ஆம். ஓம். அஞ்சேல். அடையா நெடுங்கதவு. தட்டுங்கள் திறக்கப்படும்.
இப்போது மீண்டும் சாம்பாலா கதவு திறந்து இருக்கிறது. #Corona

நீங்கள் கடவுளை எண்ணி வாழ்கிறீர்கள். நான் அந்தக் கடவுளாகவே வாழ்வது குறித்து ஆலோசித்துக் கொண்டுள்ளேன்.
எத்தனை வாசம் வீசி இருக்கும் என் தோட்டத்து மலர்கள்; பல தேசங்கள் கடந்து வர வண்டுகள் தேடி வர...
அவற்றின் மகரந்தம் இடம் மாறிப் போயிருந்தாலும் அதன் வாசனை ஒரு நாளும் குறைவதில்லை.
ஆனால் என் தோட்டத்துப் பூக்கள் தான் அவற்றின் பிரிவால், வாடிப் போகின்றன; வாசம் குன்றிப் போகின்றன; அதன் குணம் கெடுக்கின்றன.
- சிவன்
சத்தியம் ஒன்றே கடவுள். அந்த சத்தியத்தின் பெயரால் இவை!

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...