தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (௱௰௪ - 114)
சிறப்பும் குணமும் நிலமும் குடிக்களுக்கே உரியது; மொழிக்கோ வேறு எதுக்குமோ அல்ல என்பதை கூறும், சிவன்வழி வள்ளுவன் திருக்குறள். ஒரே குறளில் மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறார். இதை உணர்ந்து கொள்ள ஒரு பிறவி போதாமல் இருக்கலாம். ஆனால், சத்தியத்தை, ஞால இரகசியத்தை, தன் ஞானத்தால் உரைத்திருக்கிறார், வள்ளுவர்.
சிவன் என்னும் நடுநிலையான கடவுளை பின்பற்றி சிவத்துவம் அடைந்த குலம் பரமசிவன் குலம்.
வடக்கில் தேவரும் தெற்கில் அசுரரும் இருக்க நடுவே, தலைகீழான மலையான கையிலாயம் என்னும் பாரதத்தில், பரமசிவன் வளர்த்த தமிழை, சிவனை தஞ்சம் அடைந்து, தெற்கில் குமரியில் தத்தெடுத்து வளர்த்த அசுரன் இராவணன். இராவணனும் சிவத்துவம் அடைந்து இராவண.கணேஷ்வரன் என்று புகழ் பெற்றான்.
சிவனின் நடுவு நிலைமை
குணத்தை மேலாக நினைத்த சிவனோ, மனிதர்களை இதயத்தால் அளந்தான். தமிழை, தோலின் நிறத்தை, குடிகளை, குறைகளை பெரிது என்று பாராது, நல்லவர்களை ஏற்றுக் கொண்டான். தன்னை நல்லவர்க்கு இழந்தான்.
வடபகுதியை கங்கை என்னும் வெள்ளை தேவருக்கும் தென்பகுதியை பார்வதி எனும் அசுரருக்கும் விட்டுக் கொடுத்தவன். சிந்து வெளி முழுதும் சிவன் விழுதுகள்தான். எவரையும் பயன்படுத்தி பின் கருவேப்பிலை போல தூக்கி போடுவது, தேவர் மற்றும் அசுரரின் பரம்பரை இயல்பு.
தேவர் அசுரர் உலகியலில் நாட்டம் உள்ள, பூரண ஞானம் அற்றவர்கள். சூது வாது களவு எல்லாம் செய்தாவது உலக இன்பங்களை அனுபவித்து விட வேண்டும் என்று நினைப்பவர்கள். எல்லோருக்கும் நியாயம் புரிபவர்கள் அல்ல. ஃ எல்லோரின் மீதும் அன்பு உடையவர்கள் அல்ல.
ஆனால், இராவணன் குரங்கு பிடி போல, தான் கொண்ட தமிழே தனக்கு சிறப்பு, தன் அடையாளம் என நினைத்தான். அதை வளர்த்து சிவன் மகன் கந்தன், முருகன், கொள்ளி கண்ணன் (தீப்பொறியில் உதித்த ஞான மகன்) என்று பெயர் பெற்றான். அதுபோல சிவனின் தேவர் மகன், கண்ணன், சிவனின் கலைகள் அனைத்தையும் தனது மொழிக்கு மாற்றம் செய்து, சமஸ்கிருதம் புது என்று புதிய தேவ பாசையே உருவாக்கிக் கொண்டான். இருவரும் தன் குலத்து நியாயம், வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டவர்கள். இவர்கள் சண்டையில் சூழ்ச்சிகளில் நடுநிலையான சிவன் அழிந்தான்.
தேவ அசுர நிற பேதம் பார்க்காமல் மனிதரை பார்த்த படியால், சிந்து வெளி முழுவதும் தேவர் வசம் சென்றது. சிவன் வளர்த்து எடுத்த தமிழ், இராவணன் தத்து எடுத்த தமிழ் அழியத் தொடங்கியது. தமிழின் மூலமாக இருந்த சிவனே அழியும்போது, அவன் மொழியும் அழிந்து போவது இயல்தகவு உள்ள மாற்றம் தான்.
சிவன் இலங்கை காடு முழுவதும் இயக்கர் என்னும் பார்வதி பிள்ளையார் குலத்திற்கே சொந்தம் என்று சிவன் தீர்ப்பு வழங்கியபோது அதை ஏற்காது அன்று தொட்டு சிவனை எதிர்த்தவன், முருகன் முன்னவன் இராவணன்.
சுயநலத்தால் உற்றவன் சிவனை வெறுத்து வதைத்த முருகன், மீண்டும் அசுர குணம் மேலோங்கி இராவணேஸ்வரன் என்ற புகழ் நீங்கி இராவணன் என்று மறுதலிக்கிறான்.
நான் குருவை பேசியதாக சொல்லும் அவர்கள், சான்றோர் ஆன்றோர் ஆகிய நாகர்களை வதைத்து மேலோங்குவது சரியா! பாண்டியர்களை வதைப்பது சரியா! பக்கசார்பான தேவரை ஒதுக்கிய, தேவர்க்கும் அருளிய, நடுநிலையான மகாதேவனை எதிர்த்தது சரியா! அத்தனையும் கொடுத்து வளர்த்து விட்டவனை அடிமைத்தனம் செய்தவன் என்று சொல்வது சரியா! அசுரரை சேர்த்து, வேலை வாங்கி, அமிர்தம் கடைந்து விட்டு, அதை கொடுக்காமல் திருடும் தேவர்களுடன் சிவனை ஒப்பிட்டது சரியா!!!
இது ஒன்றும் முதல் தடவை அல்ல. இராவணன் இன்று புலம்பும் குமரியே அன்று அழிந்தது, இராவணன் சிவனுக்கு செய்த கொடுந் துரோகத்தால்தான். நான் குற்றவாளி என்றால், இன்று உள்ள இராவண தமிழர் அனைவரும் குற்றவாளி. அதில், நானே உணர்ந்து அனுபவிக்கும் துரோகம், இவர்கள் செய்த, இல்லை; செய்யும் Jessica வஞ்சனை. எல்லாம் எப்படி சரி வந்தது என்ற கேள்விக்கு சிவனின் ஞானப் பதில் இவைதாம்.
குமரி அழிந்தது
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே..!
அதனால் தமிழை சிவந்தமிழ் கருந்தமிழ் என்று பிரிக்க வேண்டும் என்று சொன்னேன். இல்லையென்றால், தமிழை இன்று ஆழும் இராவணன், சிவனுக்கு தீனி அழிக்க மாட்டான். சிவன் குலம் அழிந்து போகும். பாண்டவர் பாண்டியர் குலம், தமிழர் தேடும் தொல், மட் பாண்டங்களோடு போகும்.
என்னுடையது குறுங்கால நன்றிக் கடன். அதிலும் ஒரு நியாய கோரிக்கை உள்ளது. ஆனால், இராவணன் சிவனை எதிர்ப்பது நீண்ட கால துரோகம். இது முன்பே சிவனுக்கு நன்கு தெரியும். தேவர்களும் அடிக்கடி அறிவுறுத்தியதுதான். ஆனால் அவன் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை. அவன் அன்புக்காக செய்யும், இதயத்தில் வாழும் ஈசன். அசுரர் என்று தெரிந்தும் அன்பு செய்தவன்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் புன் கணீர் பூசல் தரும்.
ஆனால், சிவனையே (பரமசிவன், பரமன், பாண்.டவர், பாண்டியர்) சூழ்ச்சி செய்து அழித்து வரும் தமிழர் (இராவணன், முருகன், சோழர்) சிந்து வெளி முழுவதும் தமிழருடையது என்று உரிமை கோருகின்றனர்.
தமிழர் என்றால் யார் தமிழர். தமிழ் என்பது மொழி. அதை பேசுபவர் தமிழர் என்று கொள்வது முறை அல்ல. அதனால் தான் பிற இனத்தவர் தமிழருடன் சேர்ந்து இருந்து துரோகம் செய்கின்றனர்.
சிவன் வளர்த்த தமிழ். தொலைந்த சிந்து வெளி சிவனின் தேசம். அது குறித்து தமிழர் என்ற சூடிக் கொள்ளும் இராவணன் ஏன் கவலை கொள்கிறான். சிவன் வளர்த்த தமிழின் பெருமையையும், சிவன் சொத்துக்களையும் தமிழர் எப்படி மொழியால் உரிமை கோரிக் கொள்கிறார்கள். அவன் தன் சொத்துகளை அறிந்தே விரும்பியே தானம் அளித்திருப்பான். தமிழ் குறித்து, அதன் தொன்மை குறித்து, சிவனை அழித்த, இடையில் வந்த முருகன் நீ எப்படி பேசிக் கொள்ளலாம். முதலில் மொழியால் நீ எப்படி உன்னை அடையாளப் படுத்திக் கொள்ளலாம்!






.jpg)


No comments:
Post a Comment