Sunday, January 5, 2025

தயிர் உறை சிவன்; சங்கரன்

என்னது ஆணுறை, சிவனா?
இல்லை தயிர் உறை; சிவன்.

தயிர் உறை என்றால் என்ன?

தயிர் உறை என்றால், காய்ச்சிய பாலில் இருந்து தயிரை தயார் செய்யும்போது, அந்தத் தயிர் எதிர்பார்த்த பதத்தை எளிதில் அடைவதற்கு, அதற்குள்ளே முன்னைய தயிரில் சிறிதளவு சேர்ப்பார்கள். அதற்காக விதைகள் போல சிறிது தயிரை எடுத்து தனியாக வைத்திருப்பார்கள். அதன் மூலம் அந்த காய்ச்சிய பாலில், நற்கிருமிகள் சேர்ந்து, நல்ல பதமான தயிரை உருவாக்குகின்றன.

அதுபோல, கடைசியாக நிகழ்ந்த பிரளயத்தின்போது, நோவா ஓடம் கட்டி காப்பாற்றிய நல்லவர்கள் போல, பாதுகாப்பாக சேர்ந்திருந்த கூட்டம் பரமசிவன் கூட்டம். அடுத்த விளைச்சலுக்கு விதைகள் சேகரித்து வைப்பது போல தேக்கி வைக்கப்பட்டிருந்த கூட்டம் பரமசிவன் கூட்டம். அவர்கள் நெடுங்காலம் மத்திய தரைக் கோட்டின் அண்மையில் நாகரீகம் அமைத்து காத்திருந்தனர். அந்த வகையில் ஆதி மனிதர்கள், நாகர்கள், முத்திப் பழுத்து இருந்த ஜீன் (குரங்கு) எல்லாம் சிவனே! சிவனின் நிறம் எல்லாமுமாக (overall) சிவப்பு என்று, குருதியில் ஆன்மா உறைவதைக் கொண்டு சொல்லலாம்.

திருப்பெருந்துறை உறை சிவனே! இங்கு அதன் பொருள் எல்லாமுமாக வரும். நீங்கள் நினைப்பது சரிதான், சிவனை சீவன் என்னும் ஆன்மாவாக எடுத்துக் கொண்டால், இதயத்தில் சிவன் இருப்பான். மனித பரம்பரையில் எடுத்துக் கொண்டால், அந்தப் பாடல் பாடியபோது கையிலயை கருதி இருப்பார்கள். உறைவது என்றால் என்ன பொருள் என்று விளங்கிக் கொண்டால் போதுமானது.


தேவர் அசுரர் உருவான கதை

சிவன் கையிலையில் நீண்டகாலம் தனித்திருக்க, வடக்கே நேர் காந்த அலைகள் பாய, இலட்சக் கணக்கான வருடங்களில் மீண்டும் தோன்றிய உயிர்கள் தேவர் - தேவகி என்று வெண்ணிறத்தில் இருந்தன. அதுபோல தெற்கே எதிர் காந்த அலைகள் பாய, அசுரர் - பார்வதி என்று கறுப்பு நிறத்தில் (இராவணன்) இருந்தன. இவர்கள் முற்றாக இளமையான ஜீன். இவர்களில் பெரும்பான்மை பங்கை, அதன் இனப்பெருக்க வீதம் காரணமாக, எலியின் ஜீன் எடுத்துக் கொண்டது. ஆனால், அங்கே குதிரை, பன்றி, கீரி எல்லாம் இருந்ததற்கு, அந்த முகங்களுடன் மனிதர் வாழ்ந்ததற்கு, இந்துப் புராணங்கள், மற்றும் சில கோயில்கள் ஆதராமாகின்றன. இருவருக்குள்ளும் 10 வகையான ஜீன்கள் இனம் காணப்பட்டதாக இராமாயணம் சொல்வதை, தசரதன் என்ற பெயரின் மூலமும் 10 தலை கொண்ட இராவணன் மூலமும் அறிய முடிகிறது.

இந்த முற்றிப் பழுத்த சிவன் நெடுங்காலம் காத்திருக்கும்போது, முத்திய கனிகள், இலைகள் உதிர்ந்துவிடுகின்றன. அதனால் சிவனுக்கு பித்தன் என்றும் பெயர் உண்டு. இன்றும் அதன் அதீத சிந்தனையின் பாதிப்பால் துன்பப்படுபவர்கள் இருக்கின்றனர். அவை எல்லாம் சிவனின் வாசி என்றே சொல்ல வேண்டும். அதனால் அவர்களின் இருப்பை இந்த உலகில் தக்கவைக்க, இளைய ஜீன் ஐ உடைய தேவகி அல்லது பார்வதியை உடலால் கலப்பது அவசியம் ஆக இருந்தது. சித்தாந்தம் உயிர் நிலை கொள்ள உடல் வேண்டும் என்று சித்தாந்தம் சொல்வது இங்கே நிதர்சனம் ஆகிறது.

ஆனால், தேவர் அசுரர் என்ற வெள்ளை கறுப்பு நிறம் உடைய இவர்கள் இருவருக்குள்ளும் எந்த பொறாமையும் இருந்து இருக்காது. காரணம், நீ கறுப்பு என்றால் நீயும் தானே கறுப்பு என்பான். உன் மனைவி கறுப்பு என்றால், உன்மனைவியும் தானே கறுப்பு என்பான். ஏன் அப்படி ஒரு எண்ணமே தோன்றி இருக்காது. ஒப்புமையே இல்லாதபோது அங்கு குழப்பம் ஏது? எப்போது பிரச்சினை முதன் முதலில் வெடித்திருக்கும் என்றால், இனப்பெருக்கம் நடந்து இருவரும் சந்தித்தபோது தான் பிரச்சினை ஆரம்பமாகி இருக்கும். அதிலும், எல்லாம் நிறைந்தவன் ஏற்கனவே திருப்தி கொண்டவன் ஆகிவிடுவான். ஆனால், கீழே இருப்பவர்கள்தான் ஒப்புமையின் காரணத்தினால் மேலே இருப்பவர்களிக்கு சிக்கல் கொடுக்கிறார்கள். கீழே இருப்பவர்கள், தெரிவு பலதரப்பட்டதாக அமைகிறது.

சிலர், மேலே இருப்பவர்கள் மீது மோகம் கொண்டு, அதை சேர்ந்து விடுகிறார்கள்; பார்வதி. ஆனால், சிலர் அது கிடைக்காமல் கவலை கொள்கிறார்கள். சிலர் வலுக் கட்டாயமாக மேலே இருப்பவர்களை தமது பக்கம் சாய்க்கிறார்கள், அது பெண்ணியத்தை மதித்தாலும் கூட, சுற்றி வளைக்கிறார்கள்; இராவணன். சிலர் இருவருக்கும் இடையில் ஒப்பந்தத்தில் அல்லது காதலால் சேர்கிறார்கள்; முருகன். சிலர் எதிர்த் தரப்பை அறவே வெறுத்து, தமது தரப்புடன் மட்டும் இருந்துவிடுகிறார்கள்.

இப்படியான பலதரப்பட்ட முடிவுகள் அவர்களைக் கூறுபோடுகிறது. அவர்களைப் நிம்மதி இழக்கச் செய்கிறது. அது மேலே இருப்பவருக்கு, சீதை என்னும் சௌந்தர்யம், இயற்கையாகவே அமையப் பெற்றவருக்கு வாய்ப்பாக, அவனுடையவற்றை சந்தைப்படுத்த (marketting) எளிதாக அமைந்துவிடுகிறது. இது படைத்தவன் பிழையா, அல்லது படைக்கப்பட்ட ஜீவன்களின் தெரிவுகளின் பிழையா தெரியவில்லை. ஆனால் அனைவருக்கும் சுதந்திரம் இருக்கிறது என்னும்போது அது சரி. ஆனால், உறவும் தமக்கு முக்கியம் என்னும்போது அது பிழையாக அமைந்து விடுகிறது. ஆனால் இடைச்சாதியாக அமைந்த இந்தக் கலப்பினம் இங்கு போகும். அவர்களுக்கும் வாழ நிலம் வேண்டும் என்ற போர் தான் மகாபாரதம். பார்த்தீர்களா நிறத்திற்காக அன்றே ஒரு மாபெரும் இரத்த ஆறு ஓடி இருக்கிறது.

ஆனால் இன்று அனைத்தையும் மூடி மறைத்து தவறுகள் செய்வது போல, இதையும் அவர்கள் மறைப்பதால் வெளியே தணிந்து இருந்தாலும் உள்ளே தணல் இன்னும் அணையவில்லை. இப்போதும் ஆபிரிக்கர்கள், கருப்பினத்தவர்கள் அவர்கள் தேசத்தில் இந்த நிற தோஷம் இல்லாமல் சந்தோசமாக வாழ்கிறார்கள். ஆனால், பூகோள மயமாதல் (globalization) என்று வரும்போது பிற இடங்களில் அவர்கள் நடத்தப்படும் விதம் அவர்களுக்கு மன உளைச்சலை உண்டுபண்ணுகிறது. எப்போதும் தேவர்களே உயர்ந்தவர்களாகப் பார்க்கப் படுகிறார்கள். அது அனைத்தையும் அப்படியே திருப்பிக் கொடுக்கும், #வெள்ளைநிறம் கொண்டுள்ள புனிதத்தால் விளைந்தது. ஆனால் இதனை நான் கேட்டபோது, என்னைக் காயப்படுத்திய நண்பர்கள் எனக்கு இருந்தார்கள். வார்த்தைகளால் அல்ல; கூரிய ஆயுதங்களால்; எனக்கு சரியாக தெரியவில்லை; வைரஸ் கிருமிகளால்.

 

கறுப்பு வெள்ளையை விட மங்கலம் குறைந்த நிறம் தான் ஆனால், நான் அது குறித்து வெட்கம் கொள்ளவில்லை என்று சொல்லலாம். உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பவன், அதன் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாது. அது உண்மை என்னும் சத்தியம் கொண்ட சிறப்பு. சத்தியம் கடவுளைப் போன்றது. அனைத்திற்கும் சாட்சியும் ஆனது. எவனும் தன்னுடைய இன்றைய நிலை குறித்து வெட்கம் கொள்ளத் தேவையில்லை. இன்றுடைய நிலை குறித்து வெட்கம் கொள்பவன், அதை மனதார ஏற்றுக்கொள்ள, மனதரா அனுபவிக்க மறுப்பவன் அதற்கு அடுத்த படிநிலைக்கு செல்லத் தகுதியற்றவன் ஆகிறான்.

Collision இல் தான் பிரச்சினை வருகிறது. அது முருகனின் தேசத்தில் தான் அமையப் பெற்றது; அன்றும் இன்றும். அதுவே அவர்கள் சின்னாபின்னம் அடைய, அவர்கள் எல்லை நலிவுற, அவர்கள் அழிந்து போகவும் காரணமாக அமைகிறது. தமிழ் வளர்த்தவன் சிவனின் ஆஸ்தான வாரிசு முருகன். ஆனால் தமிழ் முருகனின் மொழி என்று சொல்ல முடியாது. இந்நாளில் முருகன் என்று வள்ளி தெய்வானை என்று இருவரையும் சேர்த்துக் கொண்ட கூட்டம் மட்டும் இன்னமும், சிக்கலுக்கு உள்ளாகிறது. ஏன் அதை ஒப்புக் கொள்ளவே மாட்டேன் என்கிறார்கள். ஒரு பிரச்சினையை இருக்கிறது ஒப்புக் கொள்ளாத அதற்கு தீர்வு என்பதும் ஒருநாளும் கிட்டாது. உள்ளேயே விஷமம் நிறைந்த பகைகள் இருக்கும். அது உள்ளே இருந்து கொல்லும். அந்த இனத்தை அழிக்கும்.



சிவன் தமிழரா?

சிவன் தமிழராக இருக்கலாம். அது தமிழின் தொன்மையை மேலும் பின்னால் எடுத்துச் செல்லலாம். ஆனால், குமரியில் முதற் தமிழ் சங்கத்தில் சிவன் இருந்தார் என்பது பொய். சிவன் என்பது ஒரு ஆள் என்பதே பொய். உண்மையில் சிவன் என்பது உடலில் வராத தீயே உருவான ஆத்மா என்பதே ஆகும். ஆனால், யுகம் யுகமாக அவதரித்து வரும் மனிதன் கொண்ட ஞானம் அது அந்த ஆத்மாவின் ஞானம் என்றே கொள்ளப்படும். அந்த வகையில் சிவன் என்று அனைத்து ஜீங்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டம் மறுமலர்ச்சிக்காகக் காத்திருக்கும். நிறம் என்றால் நெருப்பு என்பதே, குருதி என்பதே நிறம் ஆகும். அதன் மூலம் இதயம் அது யுகயுகமாக மனிதனாக மாற்றம் அடைய அந்தத் துடிப்பு மட்டும் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்படி இருக்க கறுப்பு தமது நிறம் என்று சொல்லும் முருகன், சிவன் தமது இனம் / ஜீன் / மூலம் என்று எப்படி சொல்ல முடியும்.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...