The roots of the Tamils and the history of the Iyakkar (naturalists) and Nagars (civilized people) in Sri Lanka.
தமிழர் வரலாறு தமிழருக்கே தெரியவில்லை.
நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணம்.
"மருவுதல்"
பாண்டவர் < (பன்)அவர் < பரமசிவன் அவர்கள்
பாண்டியர்
கந்தன் < (கன்)தமிழன்
முருகன் < குகன்
இராவணன் < இரா வண்ணன்
யார் இந்த சோழர்கள்?
சிவனுக்கும் கறுப்பு நிற பார்வதிக்கும் பிறந்தவன் கந்தன் அல்லது முருகன். கந்தன் சிவனுக்கு நெருக்கமாக இருந்தவன். சற்று பின்தங்கி, முழுவதுமாக நாகரீகம் அடையாமல், (full exposure இல்லாமல்) இருந்தவன் இராவணன் அல்லது முற்றாத முருகன். அதனால் இற்றைக்கு இராவணன் முழுமையாக தமிழன் என்று சொல்ல முடியாது. முருகர் எனப்படும் தமிழரின் முன்னோர்களில் ஒருவர் இராவணன், மற்றையது சிவன். இருப்பினும் இராவணன் பரமசிவனின் பக்தன். தன்னை பரமசிவன் வம்சம் என்று சொல்லிக் கொள்பவன். அதனால் இராவண ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்டான்.
இந்த இராவணன்தான் பின்னாளில், இராமனால் அழிக்கப்பட்ட பிறகு, தமிழர்களுள் ஒருவனாகி, தமிழனாகி, சோழர்களாக மருவி இருக்க வேண்டும். பரமசிவனின் நேரடிப் பரம்பரை அல்லது பரமசிவனில் தமிழர்கள் மட்டும் பாண்டவர்கள் அல்லது கந்தன் என்று சொல்லலாம். சோழர் மற்றும் பாண்டியர் அடுத்தடுத்து தமிழ் இராச்சியங்கள் அமைத்திருந்தனர்.
சேரர்களும் பார்வதியும்
சேரர்கள் பல்வேறு பாத்திரம் ஏற்பார்கள். புலன் பெயர்ந்த தேவர்களின் பரம்பரை சிவனுடன் கலந்து கண்ணன் என்று மருவினால், சேரர்களின் பெரும்பான்மை கண்ணன் குலம் என்று எடுத்துக் கொள்ளலாம். பார்வதி; அசுரர்களின் பரம்பரை சிவனுடன் கலக்க தயாராக இருந்தவர்கள், சிவனை ஏற்றுக் கொண்டவர்கள் பார்வதி குலம். இருப்பினும் சேரர் மற்றும் பார்வதி சிவனில் இருந்து சற்றுத் தள்ளியே உறைவிடம் கொண்டவர்கள். முழுவதுமாக கலக்காதவர்கள். அதனால் அவர்களின் தேவர்களின் மற்றும் அசுரர்களின் தன்மை அதிகமாக இருக்கும். அவர்களின் ஜீன் முற்றாத, இளமையான, எலியின் ஜீனை அண்மித்திருக்கும். முன்னாளில் அவர்கள், முழுவதுமாக நாகரிகம் அடையாதவர்களாக இருந்தார்கள்.
மொழி வளர்ச்சியின் தன்மை
உண்மையில் பெயர்களும் மொழியும் குறுகிப் போகவில்லை. விரிந்து, வளர்ந்தன. Proto root என்கிற மூல மொழியில் (விகுதிகள்) இருந்துதான் விருத்தியடைந்த மொழி உருவாகிறது. வேரில் இருந்துதான் மரம் உருவாகிறது. புள்ளியில் தொடங்கிதான் கோலம் போடப்படுகிறது.
- "வா" இல் இருந்து தான் "வாருங்கள்" வரும்.
- "த" இல் இருந்து தான் தமிழ் வரும். பின்பு "த(அவ)ர்" இல் தமிழர் வரும்.
கூ, கா, போன்ற கூச்சல்கள் மற்றும் ஓசைகள் விலங்குக்கும் பொதுவானவை. பின்பு அறிவு வளர, ஐம்புலன்களை கட்டுப்படுத்தி அவற்றை சரியாகக் பழக்கப்படுத்தி ஞானம் பெற்றான் மனிதன். காட்டு வாசியாக இருந்துதான் நாகரீகம் அடைந்தான் மனிதன். இப்போது காலச் சுழற்சியில் மீண்டும் குறுகுகிறது. இதனை சரியாகப் புரிந்து கொண்டால், சமஸ்கிருதம் தமிழர்களுக்கு மொழி பெயர்ப்பு இல்லாமல் விளங்கும். #விகுதி
ஏன் இந்த வீண் ஆராய்ச்சி?
மில்லியன் டாலர் கொடுத்து ஆராய்ச்சி (Research) செய்ய சொன்னால் செய்வீர்ங்கள். அதையே நான் இலவசமாக ஆராய்ந்து சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். எல்லோரும் காசு சொன்னால்தான் கேட்கிறீர்கள்.
நாகர் << நாகரீகர் / நாகரீகம் அடைந்தவர்
இயக்கர் << இயற்கையோடு இணைந்த வாழ்க்கை கொண்டவர்
இராவணர் << இரா வண்ணம் கொண்டவர்
இராணுவம் 🤔
இராமன் சிவனை வழிபடுவதுபோல பொய்யாக சித்தரிக்கிறார்கள். இராவண ஈஸ்வரனை அழித்தவன் இராமன். இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் ஒரு காலத்தில் யாருடைய ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறதோ, அவர்கள் நல்லவர்கள் என்று, அந்தக் காலத்து வரலாறு சொல்லும்.
அதிகாரம் (Power) என்பது அண்ணைக்கும் இண்ணைக்கும் அதுதான்.
அன்று ஏன் அடிமைப் படுத்தினார்கள்; மேலோங்கினார்கள்; யுத்தங்கள் செய்தார்கள்; கோலோச்சினார்கள் என்று இன்று புரிகிறது. இன்னொன்றும் புரிகிறது, பலம், திறமை, நாகரீகம் இவை எல்லாவற்றையும் விட கவர்ச்சிதான் ஜெயித்து வந்திருக்கிறது; ஜெயிக்கிறது. சிவனை விட பொன் பெரிது என்று போன பார்வதி.
மனிதனின் ஆசைதான் உலகத்தில மிகப்பெரிய வலை! #Jessica
இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை.
”அசரீரி - இது எங்கட நாடடா?”
நான் எதுவும் உரிமை என்று எதுவும் கேட்க மாட்டேன் என்று அவர்களுக்குப் பல முறை கூறி விட்டேன். ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் ஏன் இந்த முழக்கம் இடுகிறார்கள் என்று புரியவில்லை.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட பார்வதி சிவனுக்கு சொல்லும் பதில் என்ன?
நீங்கள் மேலே சிவன் என்று ஒரு நாகரீகக் கூட்டம் இருக்கிறது என்று அவர்களோடு வந்து சம்பந்தம் வைப்பீர்கள். பிறகு கிழக்காலே இராமன் என்று, ஒரு பொன்னிற நாகன், தோணியில் வருவான். அவனுடனும் போய் சம்பந்தம் பணுங்கோ! கடைசில அவனிடம் ஏமாந்து மீண்டும் ஆட்சியை பிடித்து எல்லாமே மாறிப்போன பிறகு, எல்லாம் உங்களுடையது என்று சொன்னால் நாங்கள் என்ன செய்வது. சிவனுடன் நீங்கள், பார்வதிகுலம், சம்பந்தம் வைத்து உருவான சந்ததி எங்கே போறது. அவங்களுக்கு உரிமை உள்ள சொத்தை யார் கொடுப்பது.
குவேனி என்ற கண்டி ராஜ்ஜியத்தை சேர்ந்த பார்வதிக்கு, நான் இப்ப சொல்கிறேன் கேளுங்கள். சிவனுக்கு தான் நீங்கள், பார்வதி; இராவணேஸ்வரனுக்கு மண்டோதரி. ஆனால் ராமன் என்கிற இன்டெலிஜென்ஸ்க்கு என்னைக்குமே நீங்கள் சூர்ப்பனகைதான். அதுக்கு பேசாமல் பாண்டவர்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிட்டு, அவர்களுடைய ஆதரவுடன் சுயம்புவாக இருக்கலாம்.
நம்பவில்லை என்ன நடக்கிறது பாருங்கள். இவ்வளவு காலமும் Ultimate ஆக, Effective ஆக என்ன நடந்திருக்கிறது என்று நடந்த வரலாற்றை ஆராய்ந்து பாருங்கள்.
மண்டோதரி - மண்டோ.தாரி - மண்ணுக்கு சொந்தக்காரி - மண்ணின் உயில் அவளின் பெயரில்தான் இருக்கும்.
விஜயனின் துரோகம்
பார்வதி என்கிற இயக்கர், குகன், குஹேனிக்கு இராமன் என்கிற விஜயன் செய்த துரோகம் உங்களுக்கு தெரியாதா? இராமனின் பொன்நிறம் கவர்ந்தது. அழகுக்கும் தேஜஸ்கும் குணத்திற்கும் சம்பந்தமில்லை பால்போல கல்லும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று. நீங்க யாரோடு, எப்படி வேண்டும் என்றாலும் சேர்ந்து கொள்ளுங்கள்; சம்பந்தம் வைத்துக் கொள்ளுங்கள்; மொழி, மதம் மாறிக் கொள்ளுங்கள். ஆனால், ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து (Divorce) வாங்கினால் அவர்களுக்கு, உங்கள் பிள்ளைகளுக்கு உரிய பங்கைக் கொடுக்க வேண்டும் என்பதே நாகரீகமான மரபு. ”பேராசை எல்லோருக்கும் நஷ்டம்.”
காடு இயக்கர்களுக்கு சொந்தமானது
நிலம் என்கிற காடு இயக்கர்களுக்கு சொந்தமானதுதான். அதில் மாற்றம் இல்லை. அதற்காக வரலாற்றில் இன்னும் கொஞ்சம் பின்னுக்கு போய், முழுக்க எங்களுடையதாகவே இருந்தது என்று நியாயமற்ற கதை கதைக்காதீர்கள். அது பட்டிக்காட்டவர்கள் பேசும் கதைக்கு ஒப்பாகிவிடும். தமிழர்கள் ”மொத்த இலங்கையும் தமிழர்களுடையதாக இருந்தது” என்பது செல்லுபடியற்ற, விளக்கம் குறைந்த கூற்று. நிலம் மொழிக்கு சொந்தம் அல்ல; நிலம் குடிகளுக்கே சொந்தம். அங்கே மிகப்பெரும் மொழி, கலாசார மாற்றம் நடந்திருக்கிறது. பார்வதி என்னும் மலையாளப் பெரும்பான்மை இராமன் பக்கம் சாய்ந்து எல்லாம் மாறிவிட்டது. இதனை முருக வழிபாடு சிங்களவர்கள் மத்தியில் இருப்பது கொண்டு உய்த்தறியலாம். முருகர் என்றால் தமிழர் என்று பொருள். ஆனால் பின்னாளில், துட்டகைமுனு எல்லாளனுக்கு மரியாதை செலுத்துவது போல, அழித்துவிட்டு கடவுளாக்கி வரலாற்றை மறைத்து விட்டார்கள். நீங்கள் இப்போது இருக்கும் நிலமையை வைத்தே கடந்தகாலத்தை நிர்ணயிப்பீர்கள் என்று இருந்தால் உண்மையை அறிய முடியாது.
நான் எதுவும் உரிமை என்று எதுவும் கேட்க மாட்டேன் என்று பலமுறை சொன்னேன் அல்லவா! பிறகு ஏன் என்னிடம் வந்து இது எங்கட நாடடா என்று விதண்டாவாதக் கதை கதைக்கிறீங்கள். நான் திரும்பத் சொல்லி விட்டேன்; உங்களிடம் ஒன்னும் கேட்க மாட்டேன். நான் பாட்டுக்கு சிவனே என்று இருக்கிறேன். சத்தியத்தை பேசி, சத்தியமாக வாழ்பவனிடம் வாதம் செய்பவர்கள் தோற்றுதான் போவார்கள் என்பது உங்களுக்கே தெரியும். பாண்டவர்களோடு வாய்ச்சொல்லில் வெல்ல முடியாது. மகாபாரதத்தை பாருங்கள். பாண்டவர் யார்? வரலாறு என்ன? என்று தமிழர் மறந்து போகலாம். ஆனால் உண்மை ஒருநாளும் மூழ்கி போகாது. மூடி மறைத்து நீங்கள் ஒரு கதையை எழுதினீர்கள். சந்ததிகள் கடந்துபோக நீங்களே மறந்து விட்டீர்கள்.
அதோடு, மகாபாரதத்தில் நீங்கள் முஸ்லிம்களோடு வைத்துக்கொண்ட சம்மந்தம் குறித்து குறிப்புகள் இல்லை. புதிய பிரளயத்திற்கு முன்னேற்பாடாக, திருத்திய மஹாபாரதம் ஒன்று எழுதப்பட்டால், அதில் அவையும் இடம்பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சம்பந்தம் செய்துவிட்டு இல்லை, ஆக்கிரமிப்பு என்று மறுக்காதீர்கள்.
காயபடுத்துவதன் மூலம் வாய்ப்புகள் ஏற்படுத்தும் இயக்கர்கள்
இயக்கர்கள் அறிவுரை ”எல்லோரையும் சிந்தித்தால் வாழ முடியாது. உனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வாழ்ந்துகொள்”. பார்வதி சங்கரனில் இருந்து வேறுபட்டு போக நினைப்பதால், நான் இரண்டு தரப்புக்களை உடையவன் ஆகிறேன். ஆனால், உங்களைக் போல சுயநலம் கொண்ட இரத்தம் இல்லை. அதனால்தான் உங்களுடன் கலக்க எனக்கு அதீத விருப்பம் இல்லை.
வெளியில் அன்பாக, அரவணைப்பாக பழகுவீர்கள். பின்னால் இன்னொரு கூட்டம் (2teams) வைத்து, காயப்படுத்தி இரத்தம் எடுப்பீர்கள்.
"அசரீ - காயப்படுத்தும் வார்த்தைகள்"
அதேதான் காயப்படுத்துவதை தவிர உங்களுக்கு வேறு என்ன இலகுவாக இருக்கப் போகிறது. அதையும் யார் என்று அடையாளம் தெரியாமல் இராமன் போல ஒழிந்து இருந்து தாக்குவீர்கள். பொய்கள் சொல்லி அந்தக் குற்றத்தின் கர்மாவை வேறு ஒருவர் மீது போட்டுவிடுவீர்கள். எனக்கு நேர்மையாக, ஒழுக்கமாக (descent, dicipline), நாகரீகமாகத்தான் எதையும் செய்யத் தெரியும். உங்களைப்போல அநாகரீகமாக எதையும் செய்து பழக்கம் இதுவரை இருந்ததில்லை. அந்தப் புகழையும் கெடுக்க, என்னுடைய உணர்ச்சிகளைக் கையாண்டு, உணர்ச்சிகளால் முடுக்கி (trigger me emotionally) பழிபோட்டு அவமானப் படுத்துவீர்கள். என்ன சொல்ல! தீயவர்கள் தீயவர்களே. திருத்தம்; குணத்தால் இன்னும் மேம்படதவர்கள், மேம்படாதவர்களே!
இயக்கர் பார்வதிக்கு, நாகர் சிவன்
இயக்கர் நாகர் என்று பாரம்பரியமாக நீங்கள் சேர்ந்த குலம் எது என்பது போக, நீங்கள் ஒன்றை தெரிவு செய்யுங்கள்; நாகரீகம் அடைந்தவர்களாக மாறி, அவர்களுடன் கலந்து, ஒழுக்கமாக இருக்கப் போகிறீர்களா! அல்லது கர்ணன் போல, இன்னமும் முழுமையாக மேம்படாதவர்களுடனேயே இருந்து அவமானப்படப் போகிறீர்களா! மேலானவர்களை சேர்பவர்கள் மேன்மையே அடைவார்கள்.
"அசரீரி - இஞ்சினியர் தீஞ்சொற்கள்"
அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லையே! சாதாரணமாக விவசாயம் பார்ப்பவர்கூட உங்களை விட, ஒரு இஞ்சினியரை விட மதிப்புக்குரிய விதத்தில் நடந்து கொள்ளலாம். மதிக்கப்படலாம். ஆனால் உங்களைப் போல நடந்து கொள்பவர்களை, நீங்கள் சேர்த்த பணத்தை தவிர, யாரும் மதிக்க மாட்டார்கள்.
சேரிடம் அறிந்து சேர்
ஆனால் இதுவும் உண்மை; காட்டிலே பூக்கும் மல்லிகைகள் மலர்கள் கூட நறுமணம் வீசும். ஆனால், காட்டு மலர்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு பூச்செண்டு செய்தால், காடு என்று ஓர்மையாகப் பார்த்தால், அதன் தன்மை, நாட்டை விட, நாகரீகத்தை விட கீழ்மையானது என்பது வெளிப்படை. அதுதான் முரண்பாடு மற்றும் சச்சரவுகளுக்குக் காரணமே! ஓர் நகரத்தையும் கிராமத்தையும் எடுத்து பாருங்கள்; புரிந்து கொள்வீர்கள். இன்று நகரமயமாதல் என்பது எல்லோரையும் நாகர்களாக்கிவிட்டது. இருப்பினும் தாத்தவின் பழைய கோவணத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
கிராமம் சொர்க்கம், கிராமத்தில் என்ன குறை என்று சொல்பவர்கள் உண்டு. சரிதான் சிலர்க்கு காடு சிறந்த இடம்தான் (அந்த அர்த்தம் அல்ல). நீங்கள் கிராமத்திலேயே வாழ்ந்து கொள்ளுங்கள். நகரத்துக்கு வந்து ஏன் சிக்கல் கொடுக்கிறீர்கள். நீங்கள் கற்று மேன்மை அடைந்தாலும், உங்கள் சாதிசனம் என்று ஒன்றுசேர்வதாயின் நீங்கள் காட்டில் வசிப்பதுதான் நலம். ஒவ்வொரு குடிகளும் வாழ உகந்த இடங்கள் என்று உண்டு. இதற்காக நான் நிலங்களை 5 ஆக வகுத்து பாடம் ஒன்று நடத்தலாம்.
அல்லது நாகரீகராக நீங்கள் வளர்ந்து கொண்டு விட்டீர்கள் என்றால், பிறகு நாகர்களுடனேயே சேர்த்து விடுங்கள்; தங்கி விடுங்கள். உங்கள் வளர்ச்சி உங்களை பிற நாடு, நகரங்களுக்கு எடுத்துச் சென்றால், அங்கே உள்ள மேம்பட்டவர்களுடனேயே வாழுங்கள். நாகரீகர்கள் குணம் பிடிக்கவில்லை என்றால், உங்களுடைய சிறந்த தர்மத்தால் அவர்களை திருத்த முயலுங்கள். இல்லை என்றால் உங்களுக்கு ஏற்ற இடம் சென்று வாழுங்கள். மக்களை குறை சொல்லாதீர்கள். மடையர்கள். Emotion embedded 😁
மிக முக்கியமாக, நாகர்கள் என்று சிவனுடன் அரை குறையாக சேர்ந்து விட்டு, பிறகு தாங்கள் இயக்கர் ஜீன் என்று, தனித்த ஜீன் என்று, தனித்து நின்று, பிரிந்து சென்ற கிழக்கு மாகாண தமிழர்களுக்கு... இந்த விடயம் மிக முக்கியமான ஒரு பாடம். சங்கரனார்க்கு (Unitran) ஏதடா குலம் மற்றும் ஜீன். பாண்டவர்களின் 5 ஜீன் உம் கலந்திருக்கும். வா! வா! என்று அடையாத நெடுங்கதவு கொண்டவன் சிவன். வந்து ஒட்டி ஒட்டாமல் இருந்து விட்டு துரோகம் செய்கிறீர்களா! ஐக்கியம் ஆனால்தான் என்ன! உங்கள் பழைய குலத்தின் ஞாபகம் வந்து விட்டதோ, பழைய குலப் பெருமைகள் ஈர்க்கிறதோ, அல்லது அரசு அவர்கள் கையில் என்று கட்சி மாறுகிறீர்களா?
முழுமையற்ற போலியான ஐக்கியம்
சமூகத்தில் வாழும்போது ஜோதியிலேயே ஐக்கியம் (Unity) ஆகிவிட வேண்டும். நீங்கள் மட்டும் தனித்து நின்றால் அது அனைவருக்கும் இன்னலாக அமையும்.
“அசரீரி - ஐக்கியம் குறித்து தமிழர்களுக்கு சொல்லு”
தமிழர் பிரச்சினை ஐக்கியமாக இருக்க முடியாது என்பது அல்ல. அவர்கள் பிரச்சினை சொத்துப் பிரச்சினை, நிலப் பிரச்சினை, உடமைப் பிரச்சினை. இந்த ஐக்கியம் என்பது அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் பின்பற்றுவதுதான். ஆனால் சிவனின் பெயரே ஐக்கியம்தான். சங்கரன் (person wisher unity) என்பது சிவனின் ஒரு பெயர். அந்த ஐக்கியம் என்னும் கொள்கையை சீனியர் சிவனிடம் இருந்து அரைகுறையாக பிரதி செய்தவன் இராமன். இராமன் சிவனை வழிபடுவதாக காட்டி உண்மை வரலாறை மறைத்து விட்டார்கள். ஆனால், அவன் சிவன் வம்சத்தை வெறுப்பவன். சிவனின் வம்சமான இராவண ஈஸ்வரனைக் கொன்று, அழித்து விரட்டியவன்; சோழர்கள்.
இராமன் என்னும் அவன் ஊரிலே இருந்தே விரட்டபட்ட, பாரம்பரிய சம்பிரதாயங்களை மதிக்காத, அரைகுறை நாகரீகம் அடைந்த, ஜூனியர் நாகன். அவனுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, நாகர் நகரமும் காடுதான், மொத்தமும் எங்களுடையது என்று சொல்லாதீர்கள். இது யாரையும் குறை கூறுவதற்கு அல்ல. சேரிடம் அறிந்து சேர். உங்கள் கூட்டத்துடன் உங்கள் எல்லைக்குள் எப்படியும் வாழலாம் என்று அளிக்கப்பட்ட சுதந்திரம் தான், அன்றைய காலத்தில் சிவன் கொடுத்த பெரிய வரம். அதுதான் அந்த சுததிரமான ஐக்கியம்; நீங்கள் சொல்வது அல்ல. ஆனால் அந்த சுதந்திரமே, இயக்கரின் குணம், சந்தர்ப்ப வாதம் காரணமாக சிவனின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது. ஆனால், பட்டுத் தெளிந்தவர்கள் இயக்கர்கள் என்னும் குஹன் குஹேனிகள்; கண்டி இராச்சியத்தை, மீண்டும் கைப்பற்றி நிர்வகித்தார்கள்.
வண்டுகள் எல்லாம் பல தேசங்கள் கடந்து வர எத்தனை வாசம் வீசி இருக்கும் என் தோட்டப் பூக்கள்.
அவற்றின் மகரந்தம் தோட்டம் மாறிப் போய் இருந்தாலும் அதன் வாசம் ஒரு நாளும் குறைவதில்லை.
ஆனால் என் தோட்டத்துப் பூக்கள் தான் அவற்றின் பிரிவால், வாடிப் போகின்றன; அதன் குணம் கெடுக்கின்றன.
- சிவன்

















No comments:
Post a Comment