Sunday, January 31, 2021

நினைத்தபோது நீ வர வேண்டும் - வேலும் மயிலும் - குண்டலிலினி எழுகை


வேலும் மயிலும் ஞானத்தின் அடையாளங்கள் ஆகும்.

மூலாதாரத்தில் கணபதியும் சிரசினில் முருகனும் இருத்தி வழிபடுவது வழக்கமாகும். மூலாதாரம் எனப்படுவது முள்ளந்தண்டின் அடிப்பகுதியில், குரங்குகளிற்கு வால் காணப்படும் இடம் ஆகும். அதாவது குண்டலினி எனப்படும் வளித் திரளையை (குண்டலினி) மூலாதாரத்தில் பேணுவதே வழமையாகும். முதல் வணக்கத்துக்குரியவர் கணபதி ஆவார். ஆனால் சிந்திக்கும்போது உடனே அது மேலே முனைப்படைந்து தலையை அடைய வேண்டும்.

சிந்திக்கும் போது அதற்குத் தேவையான சக்தி, புஜம் கொண்டு கொடும் வேலை செய்யும் போது தேவையான சக்திக்கு இணையானது. அதன் பிறப்பாக்கத்திற்கு மூச்சு அதிகம் தேவைப்படுவதோடு மூளைக்கு அருகிலேயே அது நடைபெற வேண்டும். அதற்கு குண்டலினி எழுகை என்று சித்தர்கள் சொல்வது நிகழ வேண்டும். ஆனால், செயற்பாடு எதுவும் இல்லாதபோது மூச்சு குறைந்து, குண்டலினி மீண்டும் குளிர்ச்சியடைந்து மூலாதாரத்தை அடைய வேண்டியது கட்டாயம் ஆகும். அல்லாத பட்சத்தில் உடல் அளவிலும் மனதளவிலும் பல சீர்கேடுகள் நிகழும் என்பது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டியது.

ஞானத்தின் நிறம் கருநீலம் என ஞானி ஒருவர் குறிப்பிடுகின்றார். அதாவது மனம் தெளிவடைந்து ஞானம் உச்சம் பெறும்போது கண்களை மூடினால் மயில் நீல நிறத்தில் ஆங்கே ஒளி தோன்றும். அப்போது மூளையானது உடல் கடந்து உச்ச மீடிறனில் செயற்படத் தொடங்குகிறது என்று பொருள். ஆகவே நான் நினைக்கும்போது முருகன் வேல் கொண்டு நீல மயில் ஏறி வர வேண்டும் என்பதே வேல் மயில் வழிபாட்டின் நோக்கம் ஆகும். ”வேலும் மயிலும்” என்று பெயரிட்டுக் கொள்ளும் வழக்கமும் இருந்தது.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...