இன்று ஓமந்தையில் பேரூந்து ஒன்றும் மகிழுந்து ஒன்றும் மோதியது. பின்னர் யாரோ இரண்டையும் கொழுத்திவிட்டார்களாம். கொழுத்தியது வெறும் 18 வயது சிறுவர்கள் என்று ஒரு நண்பன் ஏளனமாகக் கூறினான். நான் கூறினேன்; சிறு குழந்தை கொழுத்தினாலும் பற்றும், இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. கொழுத்தப்பட்ட தகவல் உண்மையானது அல்ல.
இங்கே வாழ்க்கைக்கான மிகப்பெரும் படிப்பினை ஒன்று ஒழிந்திருக்கிறது. தீயை மூட்டுவது வலியதல்ல; தீயூட்ட அவன் மனதில் தோன்றிய அந்த குரோத எண்ணம் தான் வலியது. நீங்கள் எத்தனை பாடுபட்டு முன்னேறினாலும், சிகரம் தொட்டாலும், மாளிகைகள் பல கட்டினாலும், எல்லாம் ஒரு கணத்தில் கூடச் சுக்கு நூறாகலாம். இதற்குப் பெரிதாய் எதுவும் நிகழத் தேவை இல்லை. தீவிரவாதிகள் அல்லது ஒரு படை தேவை என்று இல்லை. யாராவது ஒருவரது மனதில், எவராவது ஒருவரது மனதில் உங்களுக்கு எதிராகக் குரோத எண்ணம் ஒன்று அழுத்தமாகத் தோன்றி விட்டால்ப் போதும். இது போன்ற உங்கள் மீதான குரோத எண்ணங்கள் யாருடைய மனதிலும் தோன்றாமல் இவ்வுலகில் வாழ்வது ஒரு கலை. அதற்கு அன்பு மட்டுமே ஒரே வழி. அவர்கள் துன்பம் தந்தாலும் அன்பு செலுத்த வேண்டும். குறைந்தது அவ்விடர்களைத் தாங்கிக் கொண்டு விலகிச் செல்ல வேண்டும். "அடப் போடாங் கொய்யால. நான் பாட்டுக்கு என் வேலையப் பார்த்துட்டுப் போனாலும் தேடியே வந்து கரைச்சல் தாரான். அன்பு செலுத்தச் சொல்லுற" என்று நீங்கள் மனதுக்குள் கொந்தளிப்பது புரிகிறது." அப்ப நீ பண்ணித்தான் பாரேன். நீயாப் புரொஞ்சுக்குவ." என்பது என்னுடன் அதிகம் வாதிடும் அனைவருக்கும் நான் கூறும் பதில். அப்படியே கொந்தளித்தாலும், அது உன்னைத் தான் பலவீனப்படுத்தும்; எதையுமே மாற்றி விடாது.
எத்தனை திருத்தமாக அழுத்தமாக நீ விடயங்களைக் கற்கிறாயோ அவை அத்தனை காலம் ஞாபகம் இருக்கும். நீ என்று உன்னை உணர்வது உன்னை அல்ல. உனது எண்ணக் கோர்வையை; அதன் ஊற்றை. அவை எப்படி உனக்குள் வந்தன. வாழ்க்கை உன்னை அடித்து அடித்து உதைத்து உதைத்து அவற்றை உன்னுள் திணித்தன. அங்கேயும் அழுத்தம் எத்தனையோ செல்வாக்குச் செலுத்தி இருக்கிறது. இந்த எண்ணங்களைக் குழப்பித் தனது எண்ணங்களை விதைத்துச் சித்துவித்தை புரிவது ஒரு கலை. இதனைக் கொண்டு பல மனிதர்கள் இன்னும் இங்கு ஆட்டி வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் எளிதில் உங்களை மாற்றிக் கொள்ளாவிடில் அது சாத்தியமல்ல. கேட்டுக்கொள்ளுங்கள், "நீங்கள் நீங்களாகவே இருங்கள்." இப்போது புரிகிறதா? மந்திரங்களின் மகிமை. ஆனால் சமஸ்கிருதத்தில் அல்ல மூடர்களே!
உணர்ச்சிவயப்படும் போது நீ கூறும் அத்தனை வார்த்தைகளும் மிகவும் அழுத்தமாகக் கூறப்படுவதுடன் அவை உனது மூளையில் ஆணித்தரமாகப் பதிந்து கொள்ளும். அதன் பிறகு நீ எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் அதன் சாரம் வந்து ஒட்டிக் கொள்ளும். அதற்குரிய செயலை நீ ஆற்றாதவிடத்து உன்னுள்ளேயே இருந்து உன்னைக் கொல்ல ஆரம்பிக்கும். நீங்கள் உணர்ச்சிவயப்படும் போது கொள்ளும் அழுத்தம் மிகவும் வலிமையானது. அவை மின்சாரமாக உங்கள் மூளையில் தோன்றி ஓட ஆரம்பிக்கும். சிதறும் இலத்திரன்கள் அருகிலுள்ளவற்றை எரித்துக் கரியாக்குவதைப் போல, அவை நெறிப்படுத்தப் படாதவிடத்து, "நீங்கள்" என்று நீங்கள் உணரும் உங்களையே எரித்துச் சாம்பலாக்கிவிடும். அவதானமாக இருங்கள்.
எப்போதும் கோபம் போன்ற மறை அதிர்வுகள் எமக்கு இழப்பையே ஈற்றில் ஈட்டித் தரும். அன்பு, சாந்தம், புன்னகை, மகிழ்ச்சி போன்ற நேர் அதிர்வுகள் எமக்கும் எம்மைச் சார்ந்தோருக்கும் நன்மை பயக்கும். மறை அதிர்வுகளை உருவாக்குவதில் நான் கூடத்தான் ராஜா. ஆனால் நான் ஒரு போதும் அதை நினைத்ததேயில்லை. நான் கடவுளுக்காகப் பிறந்தவன். சாத்தான் களுக்காக அல்ல. அதோடு அவை என்னையும் பாதிக்கும் என்பதை அண்மையில் உணர்ந்து கொண்டேன். சிலர் செயல்கள் நமக்குப் பிடிக்கவில்லை அல்லது தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் கூட அன்பான புன்னகை செய்வதே என்றும் அதன் விளைவைக் குறைக்கும்.
அதுவும் இலங்கையில எங்கே போய்த் தேடுவது. மக்களோடு மக்களாக நின்று கூத்தாடுவார்கள். இலங்கை வளர்ச்சியடைஞ்சிட்டாலும்...

No comments:
Post a Comment