அது போல ஒலியியல் மின்சுற்றில் ஒலிபெருக்கி மின்வாய் உள்ள ஒருங்கிணைந்த மின்சுற்றுத் துண்டம் கூட, ஒலிபெருக்கி இணைக்கப்படா விட்டாலும் பாடலைப் பாடிக் கொண்டு தான் இருக்கும்.
இது போலவே எமது உடலிலும் மூக்கு மசிறும், நுரையீரல் பிசிறும், செவிப்பறையும் எனப் பல பாகங்கள் பேசும் வல்லமை படைத்தவை. நாம் நினைப்பவற்றை உச்சரிக்காவிடினும் நமது மனம் அதைக் கேட்க முடிகிறது. இந்த விளைவிலிருந்து தப்பவே பாடகர்கள் செவிப்பன்னியை அணிகின்றனர். நாம் ஒன்றை நினைக்கையில், அதைப் பேசாவிடினும் எமது உடலில் மூச்சு வீதத்திலும் இரத்தத்தில் அமுக்கத்திலும் மாறுபாடு ஏற்படும். அதிலுள்ள நெருங்கங்களை நாம் பேசிய போதான ஒலி நெருக்கங்களுடன் ஒப்பிட்டு, நாம் நினைப்பவற்றை நம்மைப் பற்றிய தகவல்களை ஆராய்வதன் மூலம் ஊகிக்க முடியும். இன்னும் மேலாக நாம் வேகத்தை மாற்றிச் சிந்தித்தாலும் அதிலுள்ள நெருக்கல்களுக்கு இடையிலான விகிதங்களை ஒப்பிட்டு ஊகித்துக் கொள்ள முடியும். இன்னும் மேலாக அந்த அமுக்க அளவின் தீவிரத்தின் மூலம் நமது உணர்ச்சியைப் புரிந்து கொண்டு நாம் நினைப்பவற்றை இன்னும் திருத்தமாக ஊகித்து அறிந்து கொள்ள முடியும். இவற்றை ஓசை, காட்சி மூலம் உங்களுக்கு வெளிப்படுத்த நீங்க அதற்குச் செய்யும் எதிர்வினையைக் கொண்டு அதை உறுதியும் செய்து கொள்ள முடியும்.
"தானாடா விடினும் தசை ஆடும்."
அப்பறம் இந்த என்னைப் போன்ற குரல்? இது தொழில்நுட்ப யுகம் செல்லம்.
இது எப்பிடி இருக்கு...
No comments:
Post a Comment