எப்போதுமே நல்லவர்களாக வாழும் என் அப்பாவி நண்பர்களுக்கு,
இங்கே பாவம் செய்தவரைத்தான் துயர் வந்து வாட்டும், நோய்கள் பீடிக்கும்; நல்லவர்களுக்கு அல்ல, என்பது எல்லாம் பொய். நோய்களுக்கும் (கொரோனா உட்பட) துயர்களுக்கும் பாவ புண்ணியம், நல்லவர் கெட்டவர் எல்லாம் தெரியாது. அவற்றுக்கு ஒட்டிக் கொண்டால் தன் கடமையைச் செய்யத்தான் தெரியும். ஆனால், உங்களுக்குத்தான் உங்கள் கடமைகளைச் செய்யத் தெரியவில்லை.
துன்பங்கள், நோய்கள் குறித்து நீங்கள்தான் கவனமாகவும் திடமாகவும் இருக்க வேண்டும். எத்தனை கோடி பாவம் செய்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தம்மைப் தகுந்தவாறு பலப்படுத்திக் கொண்டால் அவர்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அதுபோல அவர்கள் கவனாக இருந்தால் நோய்களும் அவர்களைப் பீடிக்காது.
பல யுத்தங்களிலும் போர்களிலும் தீயசக்திகள் நல்ல சக்திகளிற்கு ஈடு கொடுப்பதாக அமைந்திருந்தாலும், நல்ல சக்திகளை தீயசக்திகள் வெல்ல முடியாமல் தோற்றுப் போனதாகவே இதுவரை நாம் புராணங்களில் கேட்டறிந்துள்ளோம். அத்துடன், நல்ல நெறியில் நிற்போருக்குத் துயர்களும் நோய்களும் பீடிப்பது குறைவது. ஏனெனில் அவர்கள், ஏற்கனவே அது போன்ற துயர்களைக் கடந்து அவற்றைத் தாங்குவதற்கான உடல், மன வலிமையைப் பெற்றிருப்பர். ஆனால், சூழ்ச்சிகள் நிறைந்த இந்தக் கலியுகத்தில் இவை எதுவும் துணையாகாது. கூட நின்று உண்ணும் உற்ற நண்பனும் பல சுயநலத் தேவைகளுக்காக துரோகியாக செயற்படும் சந்தர்ப்பங்களை அறிந்து கொண்டும் அவற்றைச் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம்.
எனவே, உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும். "உங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாகப் பேண வேண்டியது உங்கள் கடமை" என்று புத்தர் குறிப்பிடுகின்றார். இது தான் கடவுள் மற்றும் அவர் அருளாக இருக்கும். இயல்பாகவே இது ஒரு தர்ம மார்க்கத்தில் இருப்பவருக்கு கைவரப் பெற்றதாகவே இருக்கும். முதலில் உங்களைப் பலப்படுத்தி உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பிறகு, உங்களைச் சூழ உள்ள நல்லவர்களையும் காப்பாற்றுங்கள். முடிந்தால் அந்தத் தீயவர்களையும் நல்லவர்களாக மாற்றி, காப்பாற்ற முயற்சி செய்க.
வானில் இருள் சூழும்போது மின்னல் மின்னும் உனையே! உனையே துணையாய் நீ மாற்றிடு...
முதலில் உன்னைத் திருத்திக்கொள். சமூகம் தானாகத் திருந்தட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Latest Updates
-
Highlight: ஆதாமும் ஏவாளும் தாவும் தமிழ் குரங்கும், எலி வாலுமா? Kannan Man Theory தமிழை Reference ஆக்கிய ஆ.தாமோ, பிரித்து அழிக்கும் ஏ.வால் ...
-
The civil war between the Sinhalese and Tamils in Sri Lanka is deeply rooted in religious and cultural divides, where Ravana/Muruga—symbols ...
-
The epics of Mahabharata and Ramayana offer a nuanced history of the lineages, roles, and movements of communities across Bhar...


No comments:
Post a Comment