வார்த்தைகள் உயிரற்றவை. அவை விடயங்களின் கருக்களை மட்டுமே தாங்கி நிற்கும். அவற்றிற்கு மதிப்பும் இல்லை. உயிரும் இல்லை. அவற்றிற்கு வாசகர்கள்தான் உயிர் கொடுக்கின்றார்கள். அவற்றுக்கான அர்த்தம் வாசகர்களின் ஞானத்திற்கு ஏற்பவே கற்பிக்கப்படுகிறது. அத்தோடு வார்த்தைகளுக்கான மதிப்பு அவற்றைக் கூறுபவரிலும் தங்கியுண்டு. கூறப்படும் சந்தர்ப்பர்த்திலும் தங்கியுண்டு.
உதாரணத்திற்கு ”ஓம் நமசிவாய” என்பதனை சிரஞ்சீவி மந்திரமாக, சைவசமய மதபோதகர்கள் அறிகிறார்கள். அதே வார்த்தைகளை ஒரு பைத்தியகாரன் கூட தினம் உச்சரித்துக் கொண்டு இருக்கலாம். அதன்போது அதன் அர்த்தத்தினை, பிறிதொரு சைவசமயி அன்றி வேறொருவர் அறிந்திலர். ஒரு படிப்பறிவு இல்லாத நபர் கூடப் பெறுமதி மிக்க விடயங்களை எமக்குப் பலதடவை சொல்லி இருக்கலாம். ஆனால், அதே வார்த்தைகளை இன்னொரு கற்றவர் சொல்லும்போது அவற்றினை நாம் முக்கியத்துவம் மிக்கவையாக உணர்கிறோம். உண்மை அதற்குப் புறம்பானதாகக் கூட இருக்கலாம். சில வேளைகளில் கற்றவர் கூறியவை பொய்ப்படலாம். ஒரு வழிப்போக்கன் கூறியவை பல அனுபவ ஞானங்களைக் கொண்டிருக்கலாம்.
வார்த்தைகளின் பெறுமதி அவற்றை நாம் எவ்வாறு உருவேற்றி உணர்கிறோம் என்பதிலேயே தங்கியுண்டு. ஒரே வார்த்தைகளை நாமே பலமுறை பலர் கூறக் கேட்டிருப்போம். ஆனால், அவற்றின் மதிப்பினையும் அவர்கள் நம்மீது காட்டிய கரிசனையினையும் அறிந்திரோம். பின்னாளின் அதே வார்த்தைகளைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் கேட்கும்போது அதில் பொதிந்துள்ள விலைமதிப்பற்ற அர்த்தங்கள் புரியவரும். சிலவேளைகளின் புரியாமலும் போகலாம். சிலர் போகிற போக்கில் சொல்லிச் செல்லும் விடயங்களை, மேதைகள் பல பெயர்கள் சூடி, புகழ் சூட்டி, முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகப் பறை சாற்றுவர்.
கல்லிலே கலைவண்ணம் காண்பது சிற்பியின் தனிச் சிறப்பு. வார்த்தைகள் அவற்றைக் கூறுபவர் நோக்கத்தை முழுமையாகத் தாங்கிச் செல்லும் என்பது பொய்யானது. ஆனால் சிலவேளை அதைவிட மிக அதிகமான ஞானத்தைக் கூட ஒருவனுக்குப் பெற்றுத் தரலாம். உண்மையில் ஞானம் வளர்ந்தது 3 முறைகளினால் ஆகும். 1.தனது அனுபவத்தில் கிட்டிய படிப்பினைகள் மூலமானது. 2.அவற்றைத் தொகுத்து ஒரு குரு அல்லது நூல்கள் பிறருக்குப் புகட்டியதன் மூலமானது. 3.ஒருவர் கற்பித்த விடயங்களைப் இன்னொருவர் தமது அறிவிற்கேற்ப பிறிதொன்றாக விளங்கிக் கொள்வதன் மூலமானது ஆகும்.
ஒரு அவையில் மிக முக்கியமான விடயங்களை ஒருவர் பேசுகின்றார். ஆனால், அங்கே இருப்போரின் சரி அரைவாசி பேர்கள் கூட அவற்றினைச் செவிமடுத்துக் கடைப்பிடிக்க மாட்டார்கள்; பயன் பெற மாட்டார்கள். சில வேளைகளில் இதுவும் உண்மைதான். பல வேளைகளில் பாற்கடலில் முத்துக்கள் மறைந்துள்ள போலவும் உப்புக்கல்லினுள் சில வைரக் கற்கள் போலவும் அர்த்தமற்ற வார்த்தைகள் நடுவே வாழ்க்கைக்கு முழுப் போதனையும் சொல்லும் சில வார்த்தைகள் மறைந்திருக்கும். அவை குறித்த சிலரை மட்டும் அடைய வேண்டும் என்பதற்காக அவ்வாறு வரையப்படுவதும் உண்டு. அத்தனையும் வாசித்து அறிந்த ஒருவரே அது போன்ற போதனைகளைக் கையாளத் தகுதியுடையவர் என எழுத்தாளர் நினைத்திருக்கலாம்.
அனேகர் வார்த்தைகளை நாம் அலட்சியப்படுத்துவது வழக்கம். அது ஆணவத்தின் விளைவாகும். அவற்றைச் சிரத்தியுடன் செவிமடுத்து அதில் அடங்கியுள்ள உண்மைத் தன்மையினை ஆராய வேண்டியது அவசியமாகும். வார்த்தைகளின் மீதான நமது சிரத்தைதான் அவற்றின் உண்மையான பெறுமதியை நமக்கு உணர்த்த வல்லது. இது ஒருவருடைய ஞானத்தை விரைவில் பூரணப்படுத்துகிறது. அதோடு விரைவில் அவரை வெற்றியாளனாகவும் ஆக்குகின்றது.
இதுவும் உண்மைதான்,
"அவமாய் உளல்வோருக்கு அறிவிக்கப் போகாதே! அறிவிக்கப் போகாமல் திடமுடன் நிற்பாயாயின் தித்திக்கும் இன்பம் பெற்றிடுவாயே!"
ஆர்வம் இல்லாமல் இருப்பவரை வலிந்து நாடி கற்பிற்பதைவிட நமது கடமைகளைச் செய்வது இன்பமானது. சிலரின் மூடச் செயல் காண, அவர்தம் மடந்தை நிலை கண்டு உடையன பகரவே மனம் வரும். ஆனால், அவர்களிற்கு அவ்வார்த்தைகளின் மதிப்பு ஒரு போதும் முழுமையாக விளங்கிவிடாது. அது வீண் பிரயத் தனமாகவே முடியும். அவர்களுக்கு இந்த உலகின் சூட்சுமங்கள் அனைத்தையும் ஒருபடியில் சொன்னாலும் அவை வெறும் வார்த்தைகளாகவே அமையும்.
Subscribe to:
Post Comments (Atom)
Latest Updates
-
Highlight: ஆதாமும் ஏவாளும் தாவும் தமிழ் குரங்கும், எலி வாலுமா? Kannan Man Theory தமிழை Reference ஆக்கிய ஆ.தாமோ, பிரித்து அழிக்கும் ஏ.வால் ...
-
The civil war between the Sinhalese and Tamils in Sri Lanka is deeply rooted in religious and cultural divides, where Ravana/Muruga—symbols ...
-
The epics of Mahabharata and Ramayana offer a nuanced history of the lineages, roles, and movements of communities across Bhar...


நன்று
ReplyDelete