இந்த உலகத்தில்
* நல்லது, கெட்டது
* தர்மம், அதர்மம்
* ஏழை, பணக்காரன்
* கற்பு, விபச்சாரம்
* நல்ஒழுக்கம், தீயொழுக்கம்
* நேர்மை, துரோகம்
* உண்மை, பொய்
என்றெல்லாம் வகைப்படுத்துவார்கள். ஆனால் எனக்குள் அப்படி எந்த பேதமும் இல்லை. இந்த உலகத்தில் எல்லாம் புனிதமானது.
ஆனால் உண்மையில் அகன்ற பூமியில், இறைவன் கருவாக்கிய விதை போடப்பட்ட இடத்தில் மட்டும், உணவும் தங்கமும் விளைவது போல... அகன்ற பூமியில் அநேகம் மனிதனுக்கு (உலகியலில் உள்ள) கூடாதவை தாம். அதில் சீர்தூக்கி, தீதொழித்து, நல்லன கொழிக்க செய்வதுதான், நம்மை வாழ்வாங்கு வாழ வைக்கும் தந்திரம். முடிவற்ற இந்தப் பிரபஞ்சத்திலேயே இந்த பூமி மட்டும் தான் நமக்கு உபயோகமாகிறது. அதிலும் சிறு பகுதி.
இருக்கலாம்; மேற் குறித்த உயர்ந்த தாழ்ந்த என்று கூறப்படும் நிலைமைகளை அவர்கள் தாமாக, தானாக, தவறுதலாக, தூண்டுதல், நிர்ப்பந்தம், படைப்பு அல்லது பிறவி காரணமாக அடைந்து இருக்கலாம். ஆனால் எதையும் களங்கம் அற்றவையாக, எல்லாவற்றையும் புனிதமாகவே நான் காண்கிறேன். எதையும் இழிவாக நான் நினைப்பதில்லை. என் மனதிற்கு எல்லாம் வெள்ளையாகவே தெரிகிறது.
#சிவன்
இங்கே அதை களங்கம் என்று கூறி, துன்பத்தை மேலும் அதிகரிப்போரிடம் இருந்து விடுபட, நான் மார்க்கம் ஒன்றை கூறுவேன்.
இங்கு எதுவும் சரியும் இல்லை; தவறும் இல்லை. நாம் சரியானதை செய்யினும் ஒருவர் நம்மை பேசினால் உடனே அது தவறாக இருக்குமோ என்று, நம் மீதே சந்தேகம் வரும். அது நம்மை பிறர் கணிக்க வேண்டி எதிர்பார்க்கும்போது வரும் நிலை.
அதேபோல் மற்றையதும். நாம் நல்ஒழுக்கம் என்று கற்றதன்படி, நமது மனச் சாட்சிக்கு வஞ்சகம் செய்யாமல் நடந்து கொண்டால் போதுமானது. அது தான் உண்மையான, உண்மையாக நம்முள் உறையும் கடவுள்.
எந்த மதத்தினதும் எந்த கடவுளினதும் முதல் நோக்கம் தர்மம் நெறிதான். அதனை கட்டிக் காக்கவே ஏனைய அபார சக்தி, மாயங்கள் எல்லாமே மார்க்கங்களாகக் கண்டறியப்பட்டன!
ஆனால் இன்றைய கடவுளின் தேடல் எல்லாமே அந்த சக்திகள் மட்டும் தான். "எத்தனை அதர்மம் செய்தாவது அந்த மர்மத்தைக் கண்டு பிடிக்காமல் விட மாட்டேன்" என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் அதர்மிகள் தான் அதிகம்.
தமிழில் தொல்லை தந்தால் தமிழன் என்று நினைக்க நான் ஒன்றும் சாம்ன்ய தமிழன் அல்ல. அதற்காக அவற்றை செய்தது சிங்களவன் என்று சொல்லி தமிழர் தப்ப நினைத்தால் அதையும் நான் ஏற்பவன் அல்ல.
நான் எல்லோரையும் உயிர்கள் என்று ஒன்றாகவும், அவர்கள் குணங்களை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் வேறுபடுத்தி காண்பவன்.
"கடவுளை ஒன்றாகவும் (சிவன்) மனிதர்களை தனித்தனியாகவும் வேறுபடுத்தி பார்க்கத் தெரிந்தவன் தான், பகுத்தறிவு படைத்த மனிதன்."
இனம் கடந்து, திருடர்கள் தமது ஆஸ்தான வாரிசுகளுக்காக திட்டம் போடலாம்; வேட்டை ஆடலாம். அந்தப் பாவம் மக்களைச் சாராது. ஆனால் இறுதியில், மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் (support பண்ணுகிறார்கள்) என்பது தான் மிக முக்கியமானது.
அவர்கள் திருடனுக்கு ஆதரவு அளித்தால் அந்தப் பாவத்தில் அவர்களும் பங்கு கொள்கிறார்கள். அவர்கள் எத்தனை கோடி பேராக இருந்தாலும் அதன் விளைவை சந்திப்பார்கள். ஒற்றைப் புல்லென்று மிதிக்க நினைக்கும் கூட்டு மக்களுக்கு, பாடம் புகட்ட ஊமையாக ஒருவன், ஒருநாள் வருவான்.
அதிலும் நம்பிக்கை அளித்து, காக்க வைத்து, காலம் கடத்தி, ஏமாற்றும் பாவத்திற்குப் பரிகாரமே கிடையாது. பாதிக்கப்பட்டவன் எவனாக இருந்தாலும், பரிகாரம் செய்யாதவரை, அவன் மன்னிக்க மாட்டான்; மறக்க மாட்டான். அவன் இதயம் இறுகி, மன்னிக்கும் குணமே அவன் இரத்தத்தில் இருந்து அழிந்து போய் இருக்கும். இரத்தம் எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்கும்.
கடவுள் என்ற கருப்பொருள் எல்லாம் ஒன்று தான். அவை எல்லாம் ஒரே இடத்தில் தோன்றியவை தான்.
ஆனால், எல்லாவற்றையும் தமக்கு சாதகமாக மாற்றிப் பயன்படுத்தும் கயவர் கூட்டம். அப்படியான திருடர் கூட்டம் எல்லா இனத்திலும் மதத்திலும் உண்டு.
ஆனால், திருடர்களை தமது இனம் என்று பாதுகாப்பவர்களுக்கு தெரியாது; ஏனைய இனங்களும் அதுபோலவே தமது இனத்தில் உள்ள திருடர்களை தான் பாதுகாக்கிறது என்று.
இப்படியாக கயவர்களையும் திருட்டுக் குணங்களையும் பாதுகாக்கும் மக்கள்.

No comments:
Post a Comment