Friday, May 14, 2021

எண்ணம் சக்தியின் ஒரு வடிவம்

 

நம்பினால் தான் சோறு எண்டது போல, உண்மை பொய் ஆராயாது நம்பி நடந்தால் நன்மை தரும் மர்மங்களே இந்து மதம் வகுத்தவற்றில் உள்ளன. காரணம் அவையும் நம்பிக்கைப் பரிசோதனை மூலம் நிறுவப்பட்டவையே. இயற்கைக்கு அப்பால் மனித உலகை இயக்குவது எண்ணங்களே ஆகும்.

எண்ணங்கள் சக்தியின் ஒரு வடிவமே ஆனால் மனித விருப்பங்களிற்கு இயைபான விளைவை ஏற்படுத்துபவை. எண்ணங்களே பரிணாமம் உட்பட மனிதத்தில் அனைத்தையும் தீர்மானிக்கின்றன. உடனடியாக இல்லை எனினும் சற்றும் காலம் தாழ்த்தி எண்ணங்களின் பாலான மாற்றத்தை அவை ஏற்படுத்தும்.

The universe is intelligent. And it made us intelligence.
Whatever getting complex become intelligence but may not be in perceivable form.

சித்தர்களால் உடலில் இனம் காணப்படும் சூட்சும சக்கரங்களும் இதனையே சாரும். உண்மையில் அப்படி எதுவும் இல்லை.

கையை நினைத்தால் கை முனைப்படையும். காலை நினைத்தால்... அது போல தலையை நினைத்தால் அதாவது நினைப்பை நினைத்தால் அது முனைப்படையும். அப்போது அதை நிறைவேற்ற அது எம்மை நம்மை ஒட்டு மொத்தமாக தூண்டும். பிற சக மனிதர்களின் சிந்தையையும் தூண்டும். எனினும் அதில் ஐம்புலன்களே அதன் விளைவில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன. அதாவது நாமே அதற்கு வேண்டிய சொற்களை உச்சரிப்போம். நமது மூச்சில் அது தெய்வ ஆணையாகி நம்மை நமது சக்திகளை அதன்பால் இயக்கும்.

நமது மனமே நம்மை ஏனைய உயிர்களிடம் இருந்து மேன்மைப் படுத்துகின்றன. அம்மனமானது நம்பிக்கைகளாலும் அனுபவத்தினாலும் வடிவம் கொள்கிறது. அதனை உரிய உத்திகள் இன்றி அவ்வளவு இலகுவில் மாற்றி விட முடியாது. நமது மனதை குறித்தவாறு ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கென்றே பல வழக்குகள் இந்து சமய வழிபாட்டில் உள்ளன. உண்மையில் அவற்றிற்கு இறைவனே தேவை இல்லை.

நாம் எதை நினைக்கிறோமோ அந்தக் கணத்தில் நமது சூட்சும தேகத்தில் அதுவாகவே நாம் இருக்கிறோம். உதாரணமாக மீனை நினைத்தால் நமது உடலில் மீன் உருவில் முனைப்பு ஏற்படுகிறது. எமது எண்ணங்களால் இந்த உடல்கள், புற பொருட்கள் உருவாகவில்லை. அவற்றை நாம் உணர்ந்தமையாலேயே எண்ணங்களே உருவாகின.

நாம் ஒரு காட்சியை ரசித்துக் காணும்போது அதனுள்ளே மூழ்கியது போல அதனுள் இருப்பது போல உணர்கிறோம். அக்காட்சிக்கு ஏற்ற உணர்ச்சி (சுகம், துக்கம், மகிழ்ச்சி) உண்டாகிறது. மல்லிகையை நினைத்தால் அதன் சுகந்தத்தை அனுபவிக்க முடிகிறது. ஆனால் எமது உயிர் உடலை விட்டு எங்கும் செல்வதில்லை. ஒவ்வொரு புலனையும் பெறும்போதும் அப்புலனிலேயே உயிர் அல்லது பிராண வாயு மையம் கொள்கிறது. எனில் அந்த மாயம் மனதின் வசம் உண்டு. இதன் உளவியல் விளக்கம் என்ன?

"மன்னனும் நானே
மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே"

என்றான் கண்ணன். கண்ணனின் இலக்கணம் நமது மனம் ஆகும். பார்த்தனுக்கு வழி காட்டுவது போல எமக்கு சரியான வழியைக் காட்டுபவன்.

அனைத்தும் நானே... அது உண்மையே!

உண்மையில் மன்னன் நான் என்று நாம் நம்பிவிடும்போது நமது சூட்சும தேகம் (நமது ஞானத்தில் மரம் எப்படி உள்ளதோ) மரத்தின் வடிவத்தை எடுக்கிறது. இப்படியே ஏனையவையும்...

I love with the shape of you என்பது இதற்குப் மேலும் வலு சேர்க்கும்.

ஆனால் அதோடு மன்னராக இருக்கும்போது மன்னனின் கடமைகளைச் செய்ய வேண்டும்... இவ்வாறே யாவும்...

எனவே சில வேத வசனங்களைக் கேள்வி கேட்காமல் அப்படியே நம்ப வேண்டி இருந்தது. அப்படி நம்பினாலேயே நன்மை கிட்டும். இது போன்ற கோட்பாடுகளே இந்து மதத்தில் அநேகம் உண்டு. தற்காலத்தில் அதற்கான காரணங்கள் நிலை பெறாத காரணத்தால் அருகிப் போகின்றன. அதுவும் நன்றாகவே நடந்தது.

கீதாசாரமும் இதே போக்கிலேயே இருக்கிறது. எந்த மறுப்பும் இல்லாமல் நம்பினால் அது அப்படியே ஆகிவிடுகிறது.

அப்படி ஒரு அளப்பரிய சக்தி இருக்கு என நம்புவது தான் அப்படி ஒரு அளப்பரிய சக்தியை உருவாக்குது. அந்த சக்தி அருள் புரியும் என்ற நம்பிக்கை தான் அருளை வழங்குகிறது. நம்முள் ஏற்படும் அந்த ஏற்றம் தான் வெளியே உள்ள சக்தியைத் தூண்டுகிறது. நாம் சக்தியின் பிள்ளைகள்.
அனுமன் மறந்த சக்திகளும் அவையே!
சக்தி என்றால் என்ன என்பதை அறிவியல் நன்கு அறியும்.

இந்த உலகையும் தனக்குக் கிடைத்த வாழ்க்கையையும் நேசிக்கும் உயிர்கள் தானாகவே நீண்ட ஆயுளைச் சுபீட்சம் பெறுகின்றன. ஏனையவை தானாக மறைந்து போகின்றன. குறுகிய காலத்திலும் நீண்டகாலத்திலும் இதுவே உண்மை. இதயத்தின் சின்னஞ்சிறு துடிப்புகளில் ஜீவன் இன்னும் வாழுதே!

எண்ணங்கள் ஒரு சுற்று சுற்றி மீழ எழும்போது மீண்டும் வலிமை பெற்றால் மீண்டும் எழும். மனிதனின் சூட்சும மனவுடன் அடிப்படையில் எண்ணங்களை ஞாபகப்படுத்தி மீட்கும் இயந்திரம். அவை உடலில் புள்ளிகளுடன் தொடர்புபட்டே சேமிக்கப்படும். இதற்கு காரணம் மூளை எனும் இயந்திரத்திற்கு தூண்டல் நமது உடல் ஆகும். உடல் முழுவதுமாக எண்ணற்ற மின்கலங்கள் உள்ளன. அவை ஒருங்கிணைந்து செயற்படாவிடில் சிக்கல் ஏற்படும்.

இந்த மனம் எனும் சக்கரத்தில் உள்ளே போடப்பட்டவை எவையும் தானே தப்பி விடாது. ஒரு எண்ணம் கூடாதது எனில் அது மீழ எழும்போது அதனைச் சாந்தப்படுத்த வேண்டும். இன்னொரு நல்ல என்ணம் கொண்டோ, கொள்கை கொண்டோ அல்லது உடலால் கடமை செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலமோ அல்லது நற்கருமங்களில் பங்கு கொள்வதன் மூலமாகவோ இதனை செய்யலாம். இவை அனைத்தும் பலனளிக்காது போனால் ஒருவர் மனநலம் பாதிப்படைய அதிக வாய்ப்பு உள்ளது.

இன்பமான நினைவுகளை சேகரியுங்கள்.

துன்பமான நினைவுகளை மறந்திடுங்கள்.

நாளடைவில் உங்கள் மனம், இன்பமான நினைவுகளால் மட்டும் நிரம்பிவிடும்.

தோன்றும் எந்த எண்ணமும் மன மகிழ்ச்சியை உண்டாக்கும்.

எப்போதும் மனம் இன்பத்தில் திழைக்கும்.

”பிடித்திருந்தான் துன்பம் விட்டுவிட்டால் முக்தி”

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...