ஆங்கிலேயர்கள் ஆங்கிலம் கற்பித்தே தமது நாட்டை வளர்த்து விட்டார்கள். நம்மில் பலர் நமது மொழிகளைக் கற்று விட்டு வேலை இல்லாமல் நிற்கிறோம்.
இன்னமும் நாம் ஆங்கிலம் கற்றால்தான் உயர்நிலையை அடைய முடியும் என்ற நிலையில்தான் நிற்கிறோம். அநேக உயர் படிப்புக்களை ஆங்கிலத்திலேயே கற்கிறோம்.
இதன் பொருள் சிங்களவர்களோ, தமிழர்களோ மற்றும் பிறமொழி பேசும் அயல் நாட்டவர்களோ அடிப்படையிலேயே புத்திசாலிகள் அல்ல, அவர்களிடம் உயர்வாக, சுயமாக ஒன்றைப் உருவாக்ககும் திறமை கிடையாது என்பதாகும். ஆனால், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்தமொழி என்ற பெருமைக்கு மட்டும் குறைச்சல் இல்லை.
"தமிழ் கற்றும் கலைகள் மூலம் சம்பாதிக்கலாம்..." என்று ஒரு கூட்டம் கிழம்பும். எத்தனை பேர் யாரிடம் இருந்து சம்பாதிப்பீர்கள்... நாட்டில் உற்பத்தித்திறன் இல்லை எனில் மண்ணையும் கல்லையும் தின்ன வேண்டிய நிலைதான் வரும். உற்பத்தித்திறனைக் கொண்ட, தற்கால மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தொழில்நுட்பங்கள் எல்லாம் மேலைத்தேயர் கல்வியிலேயே உள்ளது. இதற்கு மூத்த மொழி என்ன பதில் சொல்லப் போகிறது!
எதிர்காலத்தில் உயர்கல்வி படிக்கும் பிள்ளைகள் ஆங்கிலத்தில் தான் படிக்கப் போகிறது. இதற்கு ஒன்று செய்திருக்கலாம். தமது பிள்ளைகளுக்குத் தாய் மொழியாக ஆங்கிலத்தையே ( அல்லது ஒரு மேலைத்தேயர் மொழியை உ+ம்: மண்டரின், டொட்ச், ப்ரெஞ்ச்) போதித்து இருக்கலாம். ஒரு தலைமுறையில் துன்பம் நீங்கி இருக்கும்.
அதில் நாட்டம் இல்லை. தமது மொழி, பாரம்பரியம் ... ஆனால் அவர்களிற்கு சுயமாக ஒன்றை செய்யத் துப்பு இல்லை. மேலை நாட்டவர் தொழில்நுட்ப ஞானங்கலைப் பெற ஆங்கிலம் கற்பர். இந்தக் கேள்விக்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள், மூத்த குடிகள்!
சும்மா கிழி!

No comments:
Post a Comment