Sunday, May 8, 2022

தூசன விசிலும் மாயா மாயா வித்தையும்

  நாம் ஒருவரின் முகத்தினை, அவரின் அங்க அடையாளங்களினைக் கொண்டு இனம் காண்கிறோம். அப்படி இனம் காண உதவும் அங்க அடையாளங்கள், ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. உதாரணமாக கண், காது, மூக்கு, இமை, மரு, மேடு பள்ளம், நிறம், முடி, நெற்றி, வாய், கன்னக்குளி எனப் பல அடையாளங்கள் உண்டு. ஒவ்வொருவரும் இவற்றில் சிலவற்றைக் கொண்டு ஒருவரை இனம் காண்பர்.

  அவை ஒருவரின் பிறப்பிலிருந்தான அனுபவங்கள் சம்பந்தப்பட்டது. அதனைப் பிறர் அறிந்து கொள்வது அரிது. ஒருவரை ஆழ்ந்த நித்திரைக்குக் கொண்டு போய் பல புகைப்படங்களைக் காட்டினால் அவர் எந்தெந்த முகங்களை ஒரே மாதிரியாக இருக்கிறது என்று சொல்கிறாரோ;
  அல்லது யார் யாரைப் பார்த்து “அவர்கள் ஒருவர் போல இருக்கிறார்” என்று சொல்கிறாரோ...
   அவற்றுக்கு இடையிலான ஒற்றுமையைக் கொண்டு அவர் எந்தெந்த அடையாளங்களைக் கொண்டு ஒருவரை இனம் காண்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். அப்படியாக ஒருவரின் இனம் காணும் முறையை Frame செய்து கொள்ளலாம்.

  பிறகு அவருக்கு அது போல ஒத்த அங்க அடையாளங்களை உடையவர்களைக் காட்டினால் அவர் ஒரே ஆள் என்று இனம் காண்பார். குறைந்தது அவற்றில் தனக்குத் தெரிந்த நபரை அவர் நினைத்துக் கொள்வார். இப்படியான குழப்பங்களால் ஒருவர் குழம்பி தன்னுடைய நண்பருக்கோ அல்லது கூட இருப்பவர் ஒருவருக்கோ அவர்களைக் காட்டி பார்த்தாயா அவரை போல் உள்ளது. இவரைப் போல் உள்ளது என்று சொன்னால் அவர்கள், ”போடா பேயா உனக்கு விசர்” என்பார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு அந்த முகங்கள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். அவர்களுக்கு வேறு ஒருவர் போல் இருக்கும்.

  இது போலத்தான் தூசன விசில்கள். அதென்னடா அது தூசன விசில்கள். Black Market அல்லது Dark Net இல் விற்கப்படுகிறதா? ஆம், ஒவ்வொருவரின் பெயரிலும் விற்கப்படுகிறது. அதனை வாங்கி ஊதினால் அந்தப் பெயரை உடையவருக்குத் தூசனம் கேட்கும். #இல்லை, சும்மா காமெடிக்கு சொன்னேன்.

  இதுவும் முகங்களை இனம் காண்பது போன்ற குழப்பம்தான். நாம் சொற்களை தொனி (Phonemes) களைக் கொண்டே இனம் காண்கிறார்கள். அந்த வேலையை மூளை தானே செய்யும். அதற்கான அனுபவம் அதற்கு முதல் எல்லாம் அந்த சொற்களைக் கேட்பதிலிருந்தானது. அதுவும் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.

  இதனை மாற்றி தூசனச் சொற்களிற்கு இயற்கையான ஓசைகளான காற்றின் ஓசையையோ, தண்ணீர் சிந்தும் ஓசையையோ பதிந்து விடலாம். அது எப்படி செய்யப்படுகிறது என்பது குறித்து இன்னும் தெளிவில்லை.
ஒரு வேளை மீயொலி (Super Sonic) மூலம் காற்று வீசும்போது போடப்படுகிறதோ
   அல்லது தூசனச் சொற்களை வேறு காற்று வீசும் ஓசை போன்ற வற்றுடன் ஒன்றாக ஒலிப்பதிவு செய்து இரவில் போடப்படுகிறதோ
  அல்லது நாம் கேட்கும் பாடல் கருவிகளில் பாடலுடன் பதியப்படுகிறதோ அல்லது பழக்கப்படும்வரை live இலேயே ஒரே சொற்களுடன் போடப்படுகிறதா தெரியவில்லை. இப்படியாக ஒரு சொல்லை கேட்கும்போது இன்னொரு சொல்லாகக் கேட்கும் குழப்பத்தை ஒருவருக்கு ஏற்படுத்தி விடலாம்.

  இதன் பிறகு அவர் சாதரண கலந்துரையாடல்களில் ஈடுபடும்போது அந்த விசிலை ஊதினால் அந்த குறித்த நபருக்கு மட்டும், எதிரில் உள்ள நபர் உரைத்த  வார்த்தை தூசனமாகக் கேட்கும். அந்தக் குறித்த நபர் எதிரில் உள்ளவர் தன்னை பேச்சோடு பேச்சாக தூசனத்தில் திட்டுவதாக நினைத்து அவரைப் பகைத்துக் கொள்வார். தானே தனித்து தானாக அனைவரிடத்தும் இருந்து விலகித் தானாக வீணாகிப் போவார். அது மட்டுமல்ல இப்போதெல்லாம் சிலர் அது ஒரு வித்தை என நினைத்து தாமும் பேச்சோடு பேச்சாக ஏனையோரையும் காயப்பட்டுத்துகின்றனர்.

தீயவற்றை விதைத்தால் தீயவைதானே முளைக்கும். பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும். இவை எல்லாம் திட்டமிட்டு சமுதாயத்தில் விதைக்கப்படும் விச விதைகள். Competition இல் போட்டியாளர்கள் குறைந்தால் பங்கு பற்றுபவருக்கு வெற்றி எளிதில் கிட்டும். அதுபோல ஒரு பந்தியில் பங்கிடப்படும்போது ஒருவர் குறைந்தால் ஏனையோரது பங்கின் அளவு அதிகரிக்கும்.
அதனால Never give up. Keep trying. Keep moving. Keep looking. அடுத்து Long LiveHappy LifeMerit ஊ.

நன்றி வணக்கம் !

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...